அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
#52
பாகம் - 11

மறுநாள் காலை, பதினொரு மணி, எங்கள் டிரைன் நகர, மற்றவர்களுக்கு, டா..டா காட்டிட்டு, எங்கள் இருக்கைக்கு வந்தோம். டீமில் எங்களைத் தவிர, எல்லோரும் சென்னை என்பதால், அவர்கள் சென்னை செல்ல, நாங்கள் டெல்லியில் இருந்து நேர கோயம்புத்தூர், கேரள எக்ஸ்பிரஸ். இருவரும் ஃப்ளைடில் போவதாகத்தான் திட்டம், இவளுக்கு ரயில் பயணம் பிடிக்கும் என்பதால் இவள் முரண்டு பிடித்ததால் இந்த ரயில் பயணம், ஃபர்ஸ்ட் ஏசி, கூபே. கபினுக்குள் நுழைந்த சிறிது நேரத்தில் பானுவின் அம்மாவிடம் இருந்து ஃபோன், இருவரிடமும் பேசினார்கள், ஒரே அட்வைஸ், டிரைன் நிக்கிதுனு சும்மா எந்த ஸ்டேஷன்லையும் இரங்க கூடாது, எப்போது கபின் லாக் பண்ணிக்கிட்டு இருக்கணும், ரெண்டு பெரும் சின்ன பசங்க, சேஃபா இருக்கணும், தேவை இல்லாம யார்க்கிட்டையும் பேச கூடாது, முக்கியமா அடிக்கடி ஃபோன் பண்ணனும், இன்னும் பல.., பேசிவிட்டு ஃபோனை வைத்தாள்

நான் ரெம்ப சந்தோஷமா இருந்தேன், இருக்காதா, இன்னும் ரெண்டு நாள், எனக்கு பானு அக்கா, அவளுக்கு நான் மட்டுமே துணை, கேபின் டோர் லாக் பண்ணிட்டு என் சீட்ல உக்கார

"இப்படி தனியா போறதுக்கு ஃப்ளைட்லயே போய் இருக்கலாம்"னு சலித்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்தோம், அப்புறம் தூங்கிப்போனோம். அவள் தான் எழுப்பினாள், டீ குடித்துக் கொண்டிருந்தாள், எனக்கும் ஒன்று இருந்தது, டீ எடுத்து குடிக்க, என் தலையில் தட்டியவள் 

"போய், மவுத் வாஷ் பண்ணிட்டு வாடா எரும!"என்க

நானும் டீய வச்சுட்டு, எழுந்து சென்று முகம் கழுவி வாய் கொப்பளித்து விட்டு வந்து கதைவை திறந்தால், இவள் என் கப்பில் இருந்த டீயை அவள் கப்பில் ஊற்றிக் கொண்டிருந்தாள், நான் அவளைப் பார்த்து முறைக்க 

"கொஞ்ஞ்சோண்டு தான், முறைக்காத, வாய் கொப்பளிக்காம டீ குடிச்சில! அதுக்கு ஃபைன்!"என்றால், நான் உம்மென்று இருக்க, சிரித்தவள் 

"தம்பி,.... நான் குடிச்சு முடிக்கிறதுக்கு முன்னால் நீ குடிக்கலா, மிச்சம் இருக்கிறதையும் நான் குடிச்சுறுவேன்"னு சொல்ல

இவள் குடித்தாலும் குடிப்பானு நெனச்சு, நான் டீ எடுத்து குடிக்க, அவள் 

"அது, அந்த பயம் இருக்கணும்"னு சிரிச்சுக்கிட்டு சொல்ல

நான் அவளை பார்த்து வக்கலம் காட்டி விட்டு, டீய குடிக்க, "டிங்"னு அவள் மொபைலில் மெசேஜ் டோன். எடுத்துப் பார்த்துவிட்டு எரிச்சலுடன் ஃபோன் வைத்தாள், என்னனு நான் கேக்க 

"சாரினு, மெசேஜ் பண்றான் லூசுப் பய!"னு சொல்ல, அனிஷாதான் இருக்கும்னு தெரிந்தாலும் 

"யாரு?"னு உறுதி படுத்திக்க கேக்க 

"அதுதான் அந்த பன்னி, அனிஷ்"னு சொல்ல, நான் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்

"ஆமா நான் அன்னைக்கே கேக்கனும் நினச்சேன், ஆன மறந்துட்டேன், உனக்கு எப்படி தெரியும் நான் அந்த பன்னி கூட ஜூஸ் குடிச்சது?"னு கேக்க 

அவன் என் பானு அக்காவை பற்றி கேவலமா பேசினது நினைவுக்கு வர, வெறுப்பும் கோபமும் தாங்காமல் அழுதுவிட்டேன். பதறிய பானு 

"டேய், என்னாச்சு டா, எதுக்கு டா அழுறே?"னு கேக்க

மொத்ததையும் கொட்டிவிட்டேன், மொத்தத்தையும் கேட்டவள் கண்களில் கண்ணீர், கடும் கோபத்தில் எழந்து வெளியே சென்றாள், நானும் அவள் பின்னால் போக, பாத்ரூம் சென்று கதவை அடைத்துக் கொண்டாள். என்ன செய்வதென்று தெரியாமல், அங்கேயே நின்றேன். நெடு நேரம் கழித்து வெளிய வந்தவள் என்னைப் பார்த்து முறைத்தவள்,

[Image: k3QYh1z.jpg]

"நீயும் அந்த பன்னி சொன்னத நம்பிட்ட? இல்ல?"னு கேக்க, நான் இல்லை என்று தலை ஆட்டியதை கவனிக்காமல்

"ச்சீ....என் மூஞ்சிலேயே முழிக்காத" கோபத்தில் கத்தியவள்

கேபினுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டாள். என்ன செய்வதென்று அறியாமல் அங்கேயே நின்றிருந்தேன் கலங்கிய கண்களுடன். தாத்தாவும், பானு, டென்னிஸ், ஆச்சிகளும் மட்டுமே உலகம் என்றிருந்த எனக்கு, இனிமேல் பானு அக்கா என்னுடன் பேச மாட்டாளோ?,, என்ற எண்ணம் தோன்ற,, வந்த கண்ணீரை அடக்க முடியாமல் அழுது கொண்டிருந்தேன், எவ்வளவு நேரம் என்று தெரியாது, ஒரு கை என் தோள்களை பற்றி உலுக்க, தீரும்பி பார்த்தால், பானு அக்காதான்

"உள்ள வா"என்றவள் என் பதிலை எதிர்பாராமல் கேபினுக்குள் சென்றாள். அவள் என்னிடம் பேசியதே எனக்கு போதுமானதாக இருந்தது, உள்ளே சென்று என இருக்கையில் அமர்ந்தேன். ஒரு பார்சல் எடுத்து பிரித்து என்னிடம் நீட்டியவள் 

"சாப்பிடு"என்று சொன்னாள், நான் வாங்கிக் கொண்டு அவளையே பார்க்க, இன்னோரு பார்சலைப் பிரித்து இரண்டு வாய் சாப்பிட்டவள், என்னைப் பார்த்தாள், நான் சாப்பிடாமல் அவளே பார்த்துக் கொண்டிருக்க,

"என்ன ஊட்டிவிடனுமா?"னு எரிச்சலுடன் கேக்க,,, கலங்கிய கண்களுடன் வேண்டாம் என்று நான் தலை அசைக்க 

"பின்ன?....ஏற்கனவே உன்மேல கடுப்புல இருக்கேன், ஒழுங்கா சாப்புடு,....இப்படி ரெம்ப பாவம் மாதிரி நடிக்காத"னு சொல்ல

உடைந்து அழ அரம்பித்துவிட்டேன், இவள் நான் நடிப்பதாக சொன்ன வார்த்தையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் கூடுத்த பார்சலை வைத்து விட்டு பெர்த்தில் குப்புற படுத்துக் கொண்டேன், ஏற்கனவே வெளியே ரெம்ப நேரம் அழுத்தால், மூச்சடைக்க ஏங்கி ஏங்கி அழ தொடங்கினேன். சிறிது நேரத்தில் என் முதுகில் தட்டியவள்

"டேய் அழாத, அக்கா ஏதோ கோவத்துல திட்டிடடேன்!"னு சொல்லி முதுகில் தடவிக் கொடுத்தாள்

நான் காதில் விழாதது போல் அழுது கொண்டிருக்க, பெர்த்தில் என் தலைக்கு மேல இருந்த சிறிய இடத்தில் அமர்ந்தவள், என் தோள்களைப் பற்றி திருப்ப முயன்றாள், முடியாது போகவே, என் முகத்தை பற்றி தூக்கியவள், உள்ளே நகர்ந்தாள், என் முகம் அவளது கால்களில் இருந்தது

"சரிடா, அக்கா தான திட்டுனேன்!, இதுக்குப் போய் இப்படி அழுவியா? ம்ம்"னு சொல்லி என் முதுகை வாஞ்சை உடன் தடவினாள் 

"அதுதான் அக்கா சாரி சொல்லிட்டேன்ல!, அழத டா"னு மறுபடியும் சொன்னவள், என் தோள்களை பற்றி அவள் மடியை நோக்கி இழுக்க முயன்றாள் முடியாது போகவே 

"டேய் கொஞ்ச மேல ஏறி, அக்கா மடில படுத்துக்க, கழுத்து வலிக்கப் போகுது!"னு 

பாசத்துடன் சொல்ல, நான் சற்று மேல் சென்று அவள் மடியில் தலை வைத்து, அவள் இடுப்பை சுற்றிக் காட்டிக் கொண்டேன். அழுகை நின்றிருந்தது, ஆனால் அவ்வப்பொது ஏங்கிக் கொண்டிருந்தேன், கை பொத்தியவாறு, என் முதுகில் தட்டிக் கொண்டிருந்தவள்

"சாரிடா, அந்த கிறுக்கு பய மேல இருந்த கோவத்த உன்மேல காட்டிட்டேன்!, சாரிடா"னு 

சொல்லி என் தோள்களைப் பற்றி திருப்பி, இந்த முறை அவளுக்கு கஷ்டம் கொடுக்காமல் நானே திரும்பிப் படுத்தேன். கண்களின் ஓரம் இருந்த கண்ணீரை துடைத்தவள், என் கன்னங்களை வாஞ்சையாக தடவினாள், பின் என் கன்னத்தைக் கிள்ளி 

"டேய் சும்மா திட்டுனதுக்கு,, இப்படியா தேம்பி தேம்பி அழுவே?"னு கேக்க, எனக்கு மீண்டும் அழுகை வந்தது

"நீங்க திட்டுனா எனக்கு அழுகைதான் வருது!"னு சொல்லி மீண்டும் திரும்பி அவள் மடியினில் முகம் புதைத்து அழ, சிறிது துள்ளியவள் 

"டேய் வயித்துல படுக்காதே, கூசுது!"னு சொல்லி நெளிய

கொஞ்சம் இயல்பாகி நான், வேண்டும் என்றே அவள் வயித்துல என் முகத்தை வேகமாக தேய்ததேன். கூச்சம் தாளாமல் என் ஒரு தொளைப் பற்றி தள்ளியவள், நான் கிழ விழப்போக என் டீ-ஷர்டைப் பிடித்து விழாமல் பிடித்துக்கொண்டாள். நான் அவளைப் பார்த்து சிரிக்க 

"அப்பாடா, சிரிச்சுட்டான்!"னு சொல்லி என் முதுகில் வலிக்காமல் அடித்து 

"போ, போய் முஞ்ச கழுவிட்டு வா, அழுது அழுது, பாக்க கேவலமா இருக்கு"னு சொன்னாள்

நான் முகம் கழுவிட்டு திரும்பி வந்து, அவள் அருகிலேயே உக்கார, சாப்பிட்டுக் கொண்டிருந்தவள், சப்பாத்தியை பிய்த்து எனக்கு ஊட்டுவது போல் காட்டினாள், நான் சந்தோஷமாக வாய் திறக்க, என்னை பாத்து விரலை மடக்கி சின்னப் பிள்ளை போல் கட்டியவள், சப்பாத்தியை அவள் வாயில் போட்டுக் கொண்டு சிரித்தாள். நான் முகத்தை உம் என்று வைத்துக் கொள்ள வேறு பக்கம் திரும்பி கொண்டேன்

சப்பாத்தியை பித்தவள் மீண்டும் என் வாய் அருகே கையைக் கொண்டு வந்தாள், நான் வாய் திறக்காமல் இருக்க, இன்னும் அருகே நீட்டினாள், நான் வாய் திறக்க, மறுபடியும் என்னை ஏமாற்றி விட்டு அவள் சாப்பிடும் முன், அவள் கைகளைப் பிடித்து பாய்ந்து சென்று சப்பாத்தியோடு அவள் விரல்கள் கவ்வினேன், பற்களால்,,, கையை உருவப் பார்த்தாள், நான் பற்களில் கொஞ்சம் அழுத்தம் கூட்ட,,,, கையை உருவதை நிறுத்திக் கொண்டு, பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு 

"டேய், சாரிடா, கைய விடு டா!"னு கெஞ்ச நான் பற்களில் கொஞ்சம் அழுத்தம் கூட்டி முடியாதென்று தலையாட்டினேன்

"வழிக்குதுடா எருமே"னு கத்த பற்களின் அழுத்தம் குறைத்தேன், ஆனால் விடவில்லை

"செல்லம் இல்ல,,,, விடுடா"னு கெஞ்ச, நான் சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்தேன், பெருமூச்சு விட்டவள் 

"ஓகே, இப்போ என் கைய விட்டேனா, இன்னைக்கு அக்காவே உனக்கு ஊட்டிவிடுவேன்"னு அவ சொல்ல, நான் அவள் கைகளில் இருந்த சப்பாத்தியை கவ்விக் கொண்டு, அவள் கையை விட்டேன்

"எரும கையெல்லாம்,,, எச்சி ஆக்கிருச்சு"னு சொல்லி சலித்துக் கொண்டு, சப்பாத்தியை பிய்த்து ஊட்டினாள், நான் வாய் திறக்க மீண்டும் அவள் வாயில் போட்டுக் கொண்டு சிரித்தாள், நான் முறைத்தேன். சப்பாத்தியை பித்தவள் மீண்டும் என் வாய் அருகே கையைக் கொண்டு வந்தாள், நான் வாய் திறக்காமல் இருக்க, சப்பாத்தியால் என் உதடுகளில் அழுத்தினாள், நான் முறைத்துக் கொண்டே வாய் திறந்து வங்கிக்கொள்ள, இருவரும் சிரித்தோம்

எனக்கு ஊட்டிக்கொண்டே, அவளும் சாப்பிட்டு முடிக்க, அவள் அம்மாவிடம் இருந்து கால் வந்தது பேசிவிட்டு லைட் அனைத்து விட்டு படுத்தோம்.
[+] 4 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 12-07-2020, 01:41 AM



Users browsing this thread: 6 Guest(s)