அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
#39
Photo 
பாகம் - 6 

அடுத்த முக்கால் மணி நேரம் கழித்துரேஸ்கோரஸ்சில் ஒரு கேட்டீன் முன்பு வண்டி நின்றதுகேட் திறந்ததும் வண்டி உள்ளே நுழைய கண்ணில் பட்டது அந்த பழைய பெரிய வீடுஇப்பொழுது பல மறுதல்களுடன் ஆபீஸாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறதுஅதற்கு பின்னால் தொடர்ந்தார் போல் சில வீடுகள்வீட்டில் வேலை செய்பவர்களுக்குவண்டி இப்பொழுது இரண்டாவது கேட்டில் நின்றதுஎனக்கு பதற்றம் தொற்றிக் கொண்டதுதாத்தாவின் கைகள் பற்றிக் கொண்டேன்கைகளை தடவியவர்என்னை பார்த்து லேசாகஆதரவாக சிரித்தார்இரு கன்னங்களையும் தடவிக் கொடுத்தார்கேட் திறந்ததும் வண்டி உள்ளே நகரவெளியே பார்த்ததைவிட மிகப்பெரிய வீடுஐந்து வருடத்திற்கு முன்னால் காட்டியதுகடைசியாக நான் வந்து ஒரு வருடத்திருக்கு மேல் இருக்கும்சரியாக நினைவில் இல்லை

கார் போர்டிக்கொவில் நிற்கஅங்கே என் அம்மா!(?) எங்களை(?) எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள்நல்ல வேலையாக தாத்தாவின் பக்கம் இருந்ததது வீடுஅவர் காரை விட்டு இறங்கஅம்மா அவர் கைபற்றி ஏதோ சிரித்து பேசஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு தாத்தா பின்னால் திரும்பி ஏதோ தேடினார்தேடியது கிடைக்காமல் என்னைப் பார்த்து ஏதோ கையசாய்த்துக் கூறஎனக்கு ஒன்றும் கேட்க்கவில்லைநடப்பதெல்லாம் ஏதோ பிரம்மைப் போல் நான் உணரயாரோ என் தோள்களில் கைவைத்து உலுக்கமூளையும்உடலும் செயல்பட மறுக்ககண்கள் இருட்டஅப்படியே சீட்டில் சரிந்தேன் நான்

ஏதோ சத்தம் வெகு தொலைவில்என் கன்னத்தை யாரோ தட்டுகிறார்கண்களை திறக்க வெறும் வெளிச்சம் மட்டுமேமனதில் பெரும் பயம்கண்களை மீண்டும் இருக்க முடிக்கொண்டேன்தொலைவில் கேட்ட சத்தம்,,, இப்பொழுது அருகில் வர வார்த்தைகள் ஆயின

"மணிஒண்ணும் இல்ல,, கண்ண திறஒண்ணும் இல்ல

என்கிற வார்த்தைகள் கொடுத்த தைரியத்தில்மீண்டும் கன்னதிறக்க மங்கலாக ஏதோ ஒரு முகம்கன்னங்களில் யாரோ தட்டமங்கலான முகம் தெளிவாக தெரிகின்றதுபேரழகு முகம்பின்னிய கூந்தலில் இருந்து பிரிந்த மயிர் கற்றுக்கள் முகத்தின் இருபக்கமும் தொங்கசெதுக்கிய புருவம்அழகிய பெரிய கண்கள்அந்த கண்களில் ஏதோ ஒரு ஏக்கம்குற்றஉணர்ச்சிநல்ல கூர் மூக்குசெழுமையான பூ போன்ற சிவந்த கன்னம்அழகிய ஈரம் நிரந்த உதடுகள்நல்ல வடிவான முகம்நான் இறந்து விட்டேனோ?, சொர்க்கத்தில் இருக்கிறேனோ?, என்ன எழுப்ப முயற்சிப்பது சொர்க்கத்து தேவதையோயென எண்ணற்ற கேள்விகள்

இல்லையே!,, இந்த முகம் இதற்க்கு பார்த்த முகம்தானே!,, என்று என் மனம் குழப்பகண்கள் சுருக்கி உற்று நோக்கஅந்த அழகிய கண்களில் மின்னல் போன்ற ஒரு மகிழ்ச்சிகண்களில் தோன்றிய மகிழ்ச்சி முகமெங்கும் பரவாகழுத்தை பார்த்தால் ஸ்டேத்ஸ்கோப்மறுபடியும் யாரோ என் கன்னத்தில் தட்ட

"ஒண்ணும் இல்லடா கண்ணாகண்ண திறஅப்படித்தான் குட் பாய்"என்கிற சத்ததில்,

அந்த அழகிய முகம் யாருடையது என்பது என் மூளைக்கு உரைக்க,,, ச்சீ,,, இது என் அம்மாசுமாவின்(இனிமேல் சுமா என்றே அழைக்கப் பாடுவாள்என் அம்மாவாக இல்லைமுகம் எனும் எண்ணம்,,,, என் பிரம்மையில் இருந்து பட்டென விடுபட்டேன்நான் ஒரு சோபாவில் கிடத்தப் பட்டிருக்கிறேன்சுமா ஏதோ கூற,, என் காதில் ஒன்றும் விழவில்லைஎன் கண்கள் தாத்தாவைத் தேடின,,, சுற்றி சிலர் பெண்கள் இருக்க தாத்தாவைக் காணும்மறுபடியும் பயம் தொற்றிக் கொள்ள "தாத்தாஎன்று நான் குரல் கொடுக்க 

"இங்க தாண்டா இருக்கேன் கண்ணாஒன்னுமில்ல ராஜாஒன்னுமில்லஎன்று தழுதழுத்த சத்தம் வந்த பக்கம் தலையை திருப்பதாத்தா என் கைகளைப் பற்றிய படி சோபாவின் பின் பக்கம்கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தார்என் மனம் சற்று அமைதி அடைந்தது

"மணிகொஞ்சம் அப்படியே எழுந்து உக்கார முயற்சி பண்ணுசொல்லிவாறே சுமா என்னை தோள்களை பற்ற,, சோபாவில் அமர வைக்கப் பட்டேன்

"இப்போ எப்படி இருக்குதலை சுத்தல்வாமிட் வர்ற மாதிரி ஏதாவது பீல் பன்னுரையா?", நான் இல்லை என்று தலை ஆட்ட 

"மூச்சுவிட ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?", அதற்கும் நான் இல்லை என்று தலை ஆட்ட

"கொஞ்சம் ஏந்திரிச்சு நிக்க ட்ரை பன்னு!"னு சுமா சொல்லஎன் சுய உணர்வு திரும்பியதைப் போல் உணர்ந்தேன்எழுந்து நின்று 

"நான் ஓகே தாத்தாஐ ஆம் ஃபைன்"னு சுமாவுக்கு பதில் சொல்லாமல் தாத்தாவைப் பார்த்து சொல்ல

"அம்மா கேக்குறதுக்கு பதில் சொல்லு ராஜா"னு அவர் கெஞ்சும் தொனியில் சொல்லநான் திரும்பி சுமாவைப் பார்த்து 

"ஐ பீல் ஃபைன்"னு சொல்லஎழுந்து நின்றவள்சிரித்தவரே என் கன்னத்தில் தட்டி 

"ஓகேகுட்இப்போ உக்கரு"னு சொல்லிட்டுதாத்தாவை பார்த்து

"ஒன்னும் இல்லப்பாசுகர் லெவல் குறைஞ்சிருக்கும்சரியா சாப்பிடலையாகாலைல இருந்து?"னு தாத்தாவை பார்த்து கேக்கநான் இடைமறித்து

"நான் ரூம்க்கு போய் ரெஸ்ட் எடுக்கவா?"னு கேட்டேன்தாத்தா அம்மாவை பார்த்துவிட்டுசரியென்று தலையாட்டஎழுந்து மாடிப் படி நோக்கி நடந்தேன்

"மேல வேணாம்கீழ தாத்தா ரூம்ல படு"னு சுமா சொல்லபதில் சொல்ல விரும்பாமல்தாத்தா ரூம்க்கு சென்று கதவை அடைத்தேன்தாத்தா கேவி அழுகின்ற சத்தம் அறைக்குள் மெலிதாக கேட்டதுஏனோ அழவேண்டாம் என தாத்தாவிடம் போய் சொல்ல மனமில்லைபெட்டில் விழுந்து,, பட்டேன் தூங்கினேன்தூக்கத்தில் கைகளில் ஏதோ ஊருவது போல் இருக்க விழித்துப் பார்த்தால்அங்கே டாக்டர் சுமாஎன் கைகளில் நீடில் குத்தபட்டு டிரிபிஸ் ஏறிக் கொண்டிருந்ததுநெஞ்சில் அவள் தட்டிக் கொடுக்க மறுபடியும் தூங்கிப் போனேன்தம்பிதம்பி என்று சத்தம் கேட்டு தூக்கம் கலைந்தேன்தாத்தாதான் எழுப்பியது,

"எழுந்துட்டான்இந்த அவன்டா பேசுங்க"னு சொல்லிகோச் பேசுவதாக கூறி ஃபோன் என்னிடம் கொடுத்தார்

"நல்ல இருக்கேன் சார்"

"தெரியல சார்,......இப்போ ஓகேநாளைக்கு மேட்ச் விளையாடிருவேன்"னு சொல்லியவரே பெட்டை விட்டு எழுந்தேன்

"இல்ல சார்ஐ பீல் பிட்,....ஓகே சார்"

"சார்அப்புறம் பாப்பாமேடம் ரெண்டு பேரும் நல்ல இருக்கங்களா?", 

"ஓகே சார்....பாய்"சொல்லி தாத்தாவிடம் ஃபோனைக் கொடுக்கவாங்கியவாரே 

"கண்ணாஇப்போ எப்புடி இருக்கு"னு தாத்தா கேக்கநான் சிரித்துக் கொண்டே 

"ஏன் நான் நல்லா தானே இருக்கேன்!, இன்னைக்கு ரெண்டு மேட்ச் ஆடிருக்கேன்நாளைக்கு ஒரு மேட்ச் இருக்குஇங்க பாருங்க நான் எப்புடி குதிக்கிறேன்னுசொல்லி பெட் மீது ஏறி தாவிக் குதித்தேன்.

"சும்மா,,,,, எனக்கு ஒண்ணும் இல்ல,,,,,, என்னைய இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுக்கு பனிஷ்மெண்ட்,,,,, நல்ல பயந்தீங்களா?"னு சொல்லி அவர் அருகில் சென்றேன்முகம் முழுக்க வருத்தத்தோடு சிரித்தவர்என் தலைமுடிகளைக் கோதி

"வாவெளிய போய் கொஞ்ச நேரம் நடக்கலாம்"என்று என்னை வீட்டின் வெளிய இருக்கும் கார்டனுக்கு அழைத்து சென்றார்வெளியே கொஞ்சநேரம் நாங்கள் உலாத்திக் கொண்டிருந்தோம்

"இங்க இருக்கீங்களா!,, ரெண்டு பேரும்என்ற சத்தம் வந்த திசையை நோக்கினோம் இருவரும்எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள் சுமா,

"வா,,, மா,,, சும்மா அப்படியே வெளிக் காத்து வாங்கலாம்னு வந்தோம்"னு தாத்தா சொல்லஎன் அருகில் வந்தவள் 

"இப்போ எப்புடிடா இருக்கு?,,,, ஆர் யு ஃபீலிங்க் குட்?"னு கேக்கநான் அவள் முகம் பார்ப்பதை தவிர்க்ககையில் டிரிப்ஸ் ஏற்றிய இடத்தில் இருந்த பளஸ்டரியை பிய்த்துக் கொண்டே 

"ஐ பீல் நார்மல்ஒன்னும் இல்லஇப்போ கூட விட்டா ஒரு ஜாக்கிங்க போவேன்இல்ல தாத்தாஎன்று தாத்தாவை பார்த்து கூறினேன்தாத்தா வாஞ்சையாக என்னைப் பார்த்து சிரித்தார்

"நாளைக்கு கண்டிப்பா மேட்ச் ஆடுறேன்னு சொல்றன் மா!"னு தாத்தா அவளைப் பார்த்து சொல்லநான் குறுக்கிட்டு 

"தாத்தாஇங்க பாருங்க நான் நல்லத்தான் இருக்கேன்ஏதோ தெரியமா மயங்கிட்டென்"னு சொல்லசுமா எனக்கு ஆதரவாக பேசினால் 

"மேட்ச் ஆடட்டும்ஒண்ணும் ப்ராப்ளம் இல்லசரியா சாப்பிடமாமேட்ச் பிரஷர்னு,, அது இதுணு,, சுகர் டிராப்,,, அவ்வளவதான்நீங்க பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல"னு சொல்ல 

என்ன மாதிரியான அம்மா இவள்மயங்கி விழுந்த பிள்ளையை மறுநாள் மேட்ச் ஆட சொல்றாச்சீ இவளுக்கு என் மேல அவ்வளவு வெறுப்பாஒரு வேல நான் செத்த கூட சந்தோசத்தான் படுவா போலகண்டிப்பா வறுத்த படமாட்டானு,,, பல எண்ணங்கள் என் மனதில் ஓட 

"மணி பத்தாக போகுதுவாங்கப்பா சாப்பிடலாம்"என்ற அவளின் பேச்சு என் எண்ண அலைகளை கலைத்தது

வீட்டினுள் சென்று சாப்பிட்டு முடிக்கஅப்பாவிடம் இருந்து ஃபோன்என்னிடம் குசலம் விசாரிக்க ஏனோ தானோனு நானும் பதில் பேசி வைத்து விட்டுதூங்கா என் அறைக்கு செல்லதாத்தா தன் அறையில் இன்று தூங்கச் சொன்னார்

மேட்ச் காலையில் எட்டு மணிக்கு என்றும்தான் சிறிது நேரம் கழித்து வருவதாகவும்காத்திருக்காமல் என்னைத் தூங்காச் சொன்னார்காலையில் அலாரம் எழுப்பிவிட எழுந்து காலை கடன்களை முடித்து விட்டுகுளித்து ரூம்க்கு வந்ததால் தாத்தா இன்னும் தூங்கி கொண்டிருந்தார்எழுப்பி விடகழிவறை சென்றவர் ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்தார்வந்தவர் ஃபோன்ல் தனக்கு சோர்வாக இருப்பதாகவும்சுமாவை ரூம்க்கு வரும் படி அழைத்தார்நான் என்னாச்சுனு கேக்கதனக்கு ஒன்றும் இல்லை என்றும்என்னை கிளம்பி ரெடியாகச் சொன்னார்

நான் என் அறைக்கு சென்று ரெடி ஆகி கீழே வந்தால்தாத்தா இன்னும் பெட்டில் இருந்தார்பக்கத்தில் சுமாநான் கிளம்புவதை பற்றி கேக்கதாத்தாக்கு கொஞ்சம் பிரஷர் அதிகமாக இருப்பதாகவும்அவளே என்னை மேட்ச் ஆட கூட்டிப் போவதாகவும்தான் கிளம்பி வரும் வரை காத்திருக்க சொல்லிவிட்டு,,, வெளியே சென்றாள் சுமாஅவள் வெளியே சென்றவுடன்,

"தாத்தா நான் தனியா போய்ட்டு வந்துருவேன்அம்மா வர வேண்டாம்எனக்கும் கார் மட்டும் போதும்என்று கெஞ்ச 

கண்டிப்புடன் மறுத்தவர்ஏதேதோ சொல்லி என்னை சுமாவுடன் செல்ல சம்மதிக்க வைத்தார்.

அரைமணி நேரத்தில் வந்தவள்என்னை அழைத்தால்நான் தாத்தாவைப் பார்க்கபோ என்று செய்கை செய்தவர்சுமாவைப் பார்த்து 

"பாத்துமாபத்திரமா பாத்துக்கோகூடவே இருமேட்ச் முடிஞ்சதும் ஃபோன் பண்ணு"னு அடுக்க 

"அப்பாஇவன் என் பையன் சரியா!,,,, நீங்க கவலைப் படமா ரெஸ்ட் எடுங்க,,, மேட்ச் முடிஞ்சதும் கூட்டிடு வந்து உங்ககிட்ட பத்திரமா ஒப்படைச்சிறுவேன்,,,,, ஓகேனு சொல்லி என்னை பின் தொடர்ந்தாள்நான் கார் கராஜ் அருகில் செல்லஒரு சிவப்பு கலர் A-Class பென்ஸ் கார் திறக்கப் படும் சத்தம் கேட்டகநான் பின் கதவை திறந்து ஏறி அமர்ந்தேன்டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தவள்சீட் பெல்டை போட்டவரேஎன்னிடம் 

"முன்னாடி வந்து உக்காரு"னு சொன்னாள் 

"பரவா இல்லஐ ஆம் ஓகே"

"நான் ஒண்ணும் உனக்கு டிரைவர் இல்லமுன்னாடி வந்து உக்கார போறியாஇல்லையா?"னு கொஞ்சம் சத்தம் உயர்த்தி கேக்க

வேறு வழியல்லாமல்இவளுக்கு அப்படி என் மேல் என்னதான் கோவம்ஒரு சின்ன பையன்னு கூட பாக்கமஇப்படி காலையிலேயே மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுராஎல்லாத்துக்கும் இந்த தாத்தாதான் காரணம் என்று தாத்தாவைத் திட்டிக் கொண்டு முன்னால் ஏறி அமர்ந்தேன்காரை ஸ்டார்ட் செய்தவள்மறுபடியும் 

"சீட் பெல்ட் போடுஒன்னு ஒன்ன உனக்கு சொல்லனுமா?"னு அவள் கத்த

எனக்கு கண்ணீர் பொங்கியதுதலையை குனிந்து கண்ணீரை அடக்கிக் கொண்டு சீட் பெல்ட்டைப் போட்டு விட்டுமொபைல் எடுத்து நோண்டினேன்
[+] 7 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 11-07-2020, 09:08 PM



Users browsing this thread: 7 Guest(s)