Fantasy தாலி மட்டும் தான் கட்டினேன்
தாலி மட்டும் தான் கட்டினேன் - Ep23


பல அடுக்குகள் கொண்ட அழகான அப்பார்ட்மெண்ட்டில் இரண்டாம் அடுக்கு , ஃபிளாட் எண் 26 ன் கதவை திறந்து நடுத்தர வயது உடைய ஒரு ஆடவர் ஒருவர் கையில் காய்கறிகளை தாங்கிய வெள்ளை பாலித்தீன் பையுடன் நுழைந்தார். அந்த காய்கறிகள் நிறைந்த பாலித்தீன் பையை கூடத்தின் நடுவில் வைத்து விட்டு, வழக்கம்போல் தொலைக்காட்சி பெட்டியை ஒளிர செய்து செய்தி உலகில் மூழ்க, அவர் மனைவி காய்கறிகளை எடுத்து குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டு வீட்டின் சன்னல் ஓரத்திற்கு வந்து அந்த பாலித்தீன் பையை கிடாசி விட்டாள்.

வாகங்களின் புகை, தூசி எல்லாம் நிறைந்து இருந்த சென்னையின் காற்று மண்டலம் அந்த பாலித்தீன் பையை சில தூரம் நகர்த்தி கொண்டு போக, அந்த பை மின்சார கம்பியில் தொத்திக் கொண்டு உயிருக்கு ஊசலாடியது. தன் குஞ்சிகளுக்காக உணவைத்தேடி அலைந்து கொண்டிருந்த ஒரு காகம் கண்ணில் அந்த பாலித்தீன் பையும், அதற்குள் இருந்த சில காய்ந்த வெங்காய தோல்களும் பட, காகம் அந்த மின்சார கம்பியில் அமர்ந்து அந்த வெங்காய தோல்களை கொத்தி எடுத்து பறந்தது.

காக்கையின் செயலால் கம்பியில் இருந்து நழுவிய பாலித்தீன் பை சரியாக சாலையின் நடுவில் விழுந்தது. ஏதேனும் ஒரு வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்த்த அந்த பையை, TVS Excel Heavy Duty ஏற்றியது. சக்கரத்தின் மையத்தில் அது சிக்கி கந்தல் கந்தளாய் கிழிந்து மரணத்தை தழுவ, கிழிந்த அந்த பையின் ஒரு பகுதி மட்டும் சக்கரத்தில் ஆழமாக சிக்கிக் கொண்டது. சக்கரங்கள் சுழலும் போது அந்த கிழிந்த துண்டு கீச் கீச் என்ற மரண ஓலத்தை இடைவிடாமல் எழுப்பிக் கொண்டிருந்தது.

அந்த இரு சக்கர வாகனமானது ஒரு ஓரத்தில் நிறுத்தப்பட, அதனை ஒட்டி பயணித்த இன்னொரு இருசக்கர வாகனமும் கூடவே நின்றது. அந்த இரண்டு வாகனமும் கிஷோர், ராம் என்ற நாமங்கள் கொண்ட இரண்டு இளைஞர்களால் ஓட்டப்பட அவர்கள் பின்னால் கலை, வனிதா என்ற நாமங்கள் கொண்ட இரண்டு இளைஞிகள் அமர்ந்து வந்திருந்தனர்..

கிஷோர்: ச்ச்சா!!! இருக்குற டென்ஷன் பத்தாது ன்னு இது வேற ஒன்னு..

ராம்: என்னாச்சுன்னே?? எதுக்கு நிறுத்திட்ட??

கிஷோர்: டயர் ல பாலித்தீன் கவர் சிக்கிக்கிருச்சு டா.. என்று அதை வெளியில் எடுத்துப் போட்டான்.

அதற்குள் கலை சில அடிகள் நகர்ந்து ஒரு வேப்ப மரத்தினடியில் நிழலில் நின்று, மேலே மரக்கிளை இடுக்கில் இருந்த ஒரு காக்கை கூடை வெறுமென வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் நினைவுகள் எங்கோ போய்க்கொண்டிருக்க, "கலை போலாம் வாடி", "ஏன் அண்ணி அங்கேயே நிக்குறீங்க? வாங்க போலாம்", "கலை அக்கா வாங்க, அத்தை இந்நேரம் பிரியாணி ரெடி பண்ணி வச்சிருப்பாங்க, அது ஆறிப்போறதுக்குள்ள போய் சாப்பிடுவோம் வாங்க" என்று கிஷோர், ராம், வனிதா குரல்கள் மாறி மாறி ஒலித்தது. அவளின் செவியின் ஆரம்பத்தை எட்டிய குரல்கள் அனைத்தும் மூளைக்குள் செல்லாமல் மறைந்து போக, கலை அந்த காக்கை கூட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கலை அருகில் வந்த கிஷோர் அவள் தோளை பிடித்து உலுக்கினான்..

"என்னடா?"

"போலாம் டி.. அம்மாவும், அப்பாவும் வெய்ட் பண்ணுவாங்க"

"உடனே போகணுமா டா, எனக்கு ரொம்ப அப்செட் ஆ இருக்கு.. முத தடவ மாமா, அத்தை பாக்கும் போது கொஞ்சமாச்சும் சிரிச்ச மூஞ்சியோட இருக்க வேண்டாமா டா"

ஆதரவாக அவள் தோளை பிடித்த கிஷோர் தன்னோடு அனைத்து "இப்போ அப்செட் ஆகுற அளவு பெருசா ஒன்னும் நடந்துடல டி. அவன் என் சட்டையை பிடிச்சான் நீ அடிச்ச. அவ்ளோதான் அது அங்கேயே முடிஞ்சு போச்சு. நீ அதையே நினைச்சிட்டு இருக்காத"

"அவ்ளோ ஈஸியா முடிஞ்சு போகுற மாதிரி எனக்கு தோணல டா, இப்போ தான் ஆரம்பிச்சு இருக்கு"

"அண்ணி, இப்போ தான் ஆரம்பிக்குறதாவே இருக்கட்டும், கூட நாங்க இருக்கும் போது நீங்க எதுக்கு கவலை படணும். ஜாலியா இருங்க அண்ணி"

சினேகமாக ராமை பார்த்து புன்னகைத்த கலை "இல்ல தம்பி, என்னோட வேலை, எங்கம்மாவோட வேலை எல்லாமே அவங்க குடும்பத்தை நம்பி தான் இருந்துச்சு, இப்போ அந்த வேலை போச்சுன்னா நாங்க என்ன பண்றது ன்னு தெரியல.. எனக்கு கோவம் வந்தப்போ இது எதுவுமே என் மண்டைக்கு உறைக்கல"

"உங்கம்மாவோட வேலையும் அவங்க குடும்பத்தை நம்பி இருக்குன்னு ஏன் சொல்றீங்க அண்ணி?"

"அவங்களோட மரகதம் டிபார்ட்மென்ட் ஸ்டோர் ல தான் ப்பா எங்க அம்மா வேலை பாக்குறாங்க"

"எனக்கு தெரிஞ்சவங்க கூட அங்க" என்று ராம் சொல்லி முடிப்பதற்குள் கிஷோர் குறுக்கிட்டு "டேய் கொஞ்சம் நேரம் அமைதியா இரு" என்றான்.

கலை மறுபடியும் அந்த மரக்கிளையில் இருந்த காக்கை கூட்டை பார்க்க அதில் காகம் வாயில் வெங்காய தோல்களுடன் வந்து உக்கார்ந்து தன் குஞ்சுகளுக்கு ஊட்டியது..

அதைப்பார்த்த கலையின் மனம் இறுக்கத்தில் இருந்து விடுபட்டு, அவள் முகத்தில் சிறுது புன்னகை பூத்தது..

அவள் கண்கள் சென்ற திசைக்கு அவன் கண்களும் செல்ல, அவனும் அதில் மயங்கி "அழகா இருக்குல்ல" என்றான்.

"ஆமா டா ரொம்ப அழகா இருக்கு.. சரி வா போலாம்"

இரு வண்டிகளும் ஒன்றாக பயணிக்க, பின்னால் உட்கார்ந்திருந்த கலையும் வனிதாவும் கதைகள் பேசிக்கொண்டும், அவர்களது மார்பகங்களை காதலனின் முதுகில் இதமாக அழுத்திக் கொண்டும் வந்தனர்.

சக்கரங்கள் சுழல, நிமிடங்கள் நகர, இரு வண்டிகளும் கிஷோரின் வீட்டை வந்தடைந்தது.. வாசலை நெருங்கியதும் பிரியாணி வாசம் மூக்கை துளைத்தது. வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்ததும் கிஷோரின் அப்பாவும் அம்மாவும் கலையை ஆஹா ஓஹோ என்று கவனிக்க கலை மெய் சிலிர்த்து போனாள். இத்தனை அன்புக்கும் பாசத்துக்கும் நான் தகுதி ஆனவள் தானா? கிஷோரின் அளவில்லா காதலுக்கு நான் தகுதி ஆனவள் தானா? என அவள் மனம் கேள்வி எழுப்பியது. 

தகுதி இல்ல எனக்கு, கண்டிப்பா இல்ல, இவ்ளோ பாசத்துக்கு நான் தகுதியானவ கிடையாது.. என்னதான் உடம்பு மனசு ன்னு பேசுனாலும், அதை வெளிய சொன்னா ஊரும் உலகமும் எனக்கு என்ன பேரு கொடுக்கும் ன்னு நல்லா தெரியும்.. எல்லாம் தெரிஞ்சும் கிஷோர் என்னை மனசார விரும்புறான்.. ஆனா எவ்ளோ நாளு ன்னு சொல்ல முடியாது.. மனுசனோட மனசு குரங்கை விட மோசம், காலப்போக்குல அவன் என்னை வெறுக்க ஆரம்பிச்சா?? அதுக்கு பதில் என்கிட்டே இல்ல.. நல்ல வசதியான வாழ்க்கைக்காக உடம்பை வளச்சு கொடுத்து போறது பெரிய முட்டாள் தனம் ன்னு இவங்களோட பாசம் தோண வைக்குது. இவங்களோட இந்த பாசத்துக்கு முன்னாடி வசதியான வாழ்க்கை ஈடாகுமா? 

நாகராஜன்: கலை ஏன் மா பிரியாணி ய சாப்பிடாம எதையோ யோசிக்கிற? என்ன உங்க வீட்டுல சம்மதிக்க மாட்டாங்களோ ன்னு பயப்படுறியா? அந்த கவலை எல்லாம் எங்க பக்கம் விட்டுடு. நாங்க பாத்துக்குறோம்.. இல்ல என் பொண்டாட்டி பிரியாணி நல்லா இல்லையா?

கலை: ஐயோ இல்ல அங்கிள், பிரியாணி சூப்பரா இருக்கு..

கிஷோர் அம்மா: அதெல்லாம் கலை விரும்பி சாப்பிடுறா, உங்களுக்கு என் சமையலை நொட்டம் சொல்லி சாப்பிட்டா தான் உள்ள இறங்கும்.. டேய் கிஷோர் பேருக்கேத்த மாதிரியே பொண்ணு நல்ல கலையா அழகா இருக்குறா டா? பரவால்ல பொண்ணு தேடுற சிரமத்தை எங்களுக்கு கொடுக்காம நீயே பாத்துக்கிட்ட.. நாங்க பாத்திருந்தா கூட இவ்ளோ அழகா அம்சமா பாத்திருக்க முடியாது.. 

கலை வெட்கப்பட்டு குனிந்து கொண்டு தலை நிமிராமல் சாப்பிட்டு முடித்தாள். 

மொட்டைமாடியில் மர நிழலில் சுவர் ஓரத்தில் கலை தனியாக உட்கார்ந்திருந்தாள். 

அமைதியாக வந்த கிஷோர் பின்னாலிருந்து அவள் இடுப்பில் கை கோர்த்து அவள் முதுகில் முத்தமிட்டான்.. 

"என்னடி இங்க வந்து தனியா உக்காந்திட்டு இருக்குற"

திரும்பிய கலையின் கண்களில் நீர் கோர்த்து இருந்தது. "கிஷோர் நிஜமாவே நான் வேணுமா டா உனக்கு, நான் உனக்கு ஒர்த் யே இல்ல டா"

"ஹே என்னாச்சு இப்போ உனக்கு, லூசு மாதிரி பேசுற. உனக்கு பிடிக்காத மாதிரி நாங்க ஏதாச்சும் நடந்துக்கிட்டோமா?"

"போடா!! நான் சொல்றது கூட புரிஞ்சுக்காத அளவு வெகுளியா இருக்குற"

"இல்ல டி நான் வெகுளி ன்னு சொல்றது விட ஏமாளி ன்னு சொல்லலாம். அப்புடிதான் எல்லாரும் என்னை பத்தி நினைக்கிறாங்க.. என் தம்பி கூட அப்டி தான் நினைக்கிறான், ராகுல் விசயத்துல அவன் தலகிடாம இருந்தா இந்நேரம் எந்த பிரச்னையும் வந்துருக்காது.. அதனால நான் தான் சொல்லணும், நான் உனக்கு ஒர்த் இல்ல ன்னு"

"போடா லூசு!! உன் அருமை உனக்கும் தெரியல, உன்னை சுத்தி இருக்கிறவங்களுக்கும் தெரியல.. ஊரு என்ன வேணா சொல்லலாம் டா, ஏமாளி, அம்மாஞ்சி, பேக்கு, கையாளாகாதவன் ன்னு சொல்லுவாங்க,, ஆனா என்னை பொறுத்த வரைக்கும் நீ பரிசுத்தமானவன் டா, உள்ளத்துல அழுக்கு இல்லாதவன் டா.. அது போக முக்கியமா உன்னோட, உன் குடும்பத்தோட பாசத்தால என்னோட விடாப்பிடியான கொள்கையே விட்டுடலாம் ன்னு இருக்கேன் டா"

கலையின் மனதில் அவளின் உடல் கிஷோருக்கு மட்டுமே என முடிவெடுத்து அதை அவனிடம் சொல்ல இருந்தாள்..

"உனக்கு லவ் அதிகம் ஆகிருச்சு ன்னு நினைக்குறேன், அதான் என்னென்னமோ சொல்ற, சரி அது என்ன விடாப்பிடியான கொள்கை?"

அவள் சொல்ல வாயெடுக்குமுன் அவள் மொபைலில் ஒரு மெசேஜ் வந்தது.. அதை பார்த்தவுடன் அவள் முகத்தில் இருந்த கலை காணாமல் போனது..

"என்னாச்சு டி, என்ன மெசேஜ் அது?"

"சேலரி மெசேஜ் டா, சம்பளம் போட்ருக்காங்க"

"சரி அதுக்கு ஏன் டி மூஞ்சி டல்லா ஆகுது"

"கிஷோர், இன்னும் ஒரு வாரம் அப்புறம் தான் சம்பள நாள் வருது, இப்போ எனக்கு வந்தது செட்டில்மென்ட் டா, சுபர்ணா அக்கா என்னை வேலை ல இருந்து எடுத்துட்டாங்க டா, என்னோட அம்மா ட்ட நான் சொல்றது, இதுல அவங்க வேலை இருக்குமா ன்னு கூட தெரியல"

"கலை இது பத்தி எதுவும் இப்போ நினச்சு மனச கொளப்ப வேண்டாம், என் குடும்பம் மொத்தமும் இருக்கிறோம் ல, இவ்ளோ ஏன் வனிதா வோட அப்பா கொஞ்சம் பெரிய ஆள் தான், அவர் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவாரு.. இப்போ வா நான் உன் வீட்டுல உன்னை ட்ராப் பண்ணிடுறேன்" 

"உடனே என்ன அவசரம், சாயந்திரம் வரைக்கும் இருந்துட்டு போ" என்ற கிஷோரின் அம்மாவின் அன்பு கட்டளையை ஒரு வழியாக சமாளித்து கலையின் வீட்டிற்கு இருவரும் வந்து கதவை திறக்க அங்கே ராகுல் கலையின் அம்மா வுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தான்.
[+] 5 users Like manaividhasan's post
Like Reply


Messages In This Thread
RE: தாலி மட்டும் தான் கட்டினேன் - by manaividhasan - 18-06-2020, 11:45 PM



Users browsing this thread: 2 Guest(s)