Fantasy தாலி மட்டும் தான் கட்டினேன்
தாலி மட்டும் தான் கட்டினேன் - Ep22

ஒரு சிகப்பு கம்பிளி போர்வை தரையில் அழகாக விரிக்கப்பட்டு அதில் நால்வர் வட்டமாக உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்கு நடுவில் சீட்டுக்கட்டு அட்டைகள் சிதறி கிடக்க, அதற்கு நடுவிலிருந்த சீட்டுக்கட்டிலிருந்து ஒரு அட்டையை எடுத்த நாகராஜன் மற்றொரு அட்டையை தரையை பார்த்த மாதிரி கவுத்தி வைத்து விட்டு "யேய்ய்!!!!! ரம்மி அடிச்சிருச்சு தொடர்ந்து அஞ்சாவது தடவையா" என்று தான் அழகாக அடுக்கி வைத்திருந்த 13 அட்டைகளையும் தரையில் மற்றவர்கள் பார்வைக்காக வைத்தார்..

"ஹையோ போங்க!!! ச்சா!! இன்னும் ஒரு கார்டு சரியா வந்திருந்துச்சுன்னா நான் முடிச்சுருப்பேன்" என்று சலிப்பாக சொன்னாள் கிஷோரின் அம்மா..

"பரவால்ல விடுமா.. இன்னைக்கு நாள் அப்பாவோடையது ன்னு நினைக்குறேன் அதான் வரிசையா ஜெயிச்சுட்டே இருக்காரு. நாமளாச்சும் பரவால்ல ம்மா, நீ ஒரு தடவ நான் ரெண்டு தடவ ஜெயிச்சுருக்கோம்.. ஆனா அண்ணன் விளையாண்ட எல்லா தடவையும் தோத்துட்டு தான் இருக்கிறான்.. ஆனாலும் பல்ல காட்டிட்டே இருக்குறான் பாரு" என்றான் ராம்..

"டேய் என்னடா கிஷோர், நானும் பாத்துட்டு தான் இருக்கேன், நேத்து நைட்டு வந்ததுல இருந்து ஏதோ சிரிச்சுட்டே இருக்குற, என்னன்னு சொன்னா நாங்களும் சிரிப்போம் ல" என்று சிதறி கிடந்த அட்டைகளை ஒன்றாக அடுக்கிக் கொண்டே கேட்டாள் கிஷோரின் அம்மா.

கிஷோர்: ஒரு சந்தோசமான விஷயம் அது.. சொல்லிடவா

நாகராஜன்: டேய் ஸீன் போடாம சொல்லு டா

"கலை" என்று சொல்லிவிட்டு உதட்டில் சிரிப்புடன் மூவர் கண்களையும் பார்த்து சற்று இடைவெளி விட்டான் கிஷோர்.. மூவரும் ஆர்வமாக கிஷோரின் உதட்டையே பார்க்க "ஓகே சொல்லிட்டா" என்றான்..

மூவரும் யேய்ய்!!!!!!!!! என்று ஆனந்தமாக கத்த, ராம் கீழே கிடந்த அட்டைகளை அள்ளி மேலே பறக்க விட்டான், கூடவே கிஷோரின் அம்மாவும் அப்பாவும் உடன் சேர்ந்து அட்டைகளை மேலே அள்ளி எரிந்து அமர்க்களப் படுத்தினர்..

"யே தங்கம்!! இத நீ நேத்து நைட்டே சொல்லிருக்கலாம் ல டா.. எங்க கிட்ட சொல்றதுக்கு நல்ல நேரம் பாத்துக்கிட்டு இருந்தியாக்கோம்" என்று கனிவாக கேட்டாள் கிஷோரின் அம்மா..

"இல்லமா!! நைட்டு வீட்டுக்கு வந்த உடனே அவகிட்ட இருந்து மெசேஜ், அப்போ போன் கைல எடுத்தேன், காலங்காத்தால 3 மணிக்கு தள்ளி வச்சேன்.. சரி அதான் இப்போ சொல்லிட்டேன் ல, உங்க எல்லாருக்கும் ஓகே தான?"

"பாருங்கப்பா அண்ணன் அப்பாவி ன்னு நாம நினைச்சுட்டு இருக்கோம், ஆனா அவன் அமைதியா என்ன பண்ணிட்டு இருக்கான் பாத்திங்களா?" என்றான் ராம் ஏதோ தான் ரொம்ப யோக்கியம் என்பது மாதிரி.. அதையே பார்வையால் கிஷோர் அவனுக்கு சொல்ல அமைதியாக தலையை திருப்பிக் கொண்டான்..

"சும்மா இருடா ராம், இப்போ தான் அவனே ஒரு பொண்ணை பாத்து பிடிச்சு போயி இவ்ளோ தூரம் கொண்டு வந்திருக்கான்.. அது நினச்சு சந்தோசப்படு" என்று கிஷோரை விட்டுக் கொடுக்காமல் பேசினார் நாகராஜன்..

"சரி நீங்கலாம் சும்மா இருங்க.. டேய், கலையை எப்போடா கூட்டி வரப்போற வீட்டுக்கு.. இன்னைக்கே கூட்டி வாடா" என்று ஆசையாக கேட்டாள் கிஷோரின் அம்மா..

"இல்லமா!! இன்னைக்கு அவளுக்கு வேலை இருக்கு.. நாளைக்கு வரேன் ன்னு சொல்லி இருக்கா"

"அடப்போடா வேலையாம் வேலை.. இப்போ ஒழுங்கா போய் கூட்டி வா, நான் பிரியாணி சமைச்சு வைக்கிறேன், டேய் ராம் நீயும் கூடவே போ.. அது என்ன கடலையா?? ஆஹ் அது தான் இவன் போட்டுட்டு இருப்பான். நீ கூடவே போய் கூட்டி வந்துரு ரெண்டு பேரையும்" என்றால் கிஷோர் அம்மா..

அம்மாவின் அன்பு கட்டளைக்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் கிஷோரும் ராமும் இரு வண்டிகளில் வேளச்சேரி ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டிக்குள் நுழைந்தனர். அடுத்து சுத்தி முத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டே அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் இருவரும் கடைக்குள் நுழைந்தனர்.. 

கிஷோரை எளிதாக அடையாளம் கண்ட சுபர்ணா அவனை பார்த்து "ஹேய் கிஷோர்" என்று கையை காட்டினாள்..

கிஷோரும் மகிழ்ச்சியாக அவளிடம் கையை காட்டி "ஹாய்" என்று சொல்வதற்கு வாய் எடுக்கும் முன்பே ராம் சுபர்ணாவிடம் சென்றிருந்தான்..

"ஹாய் அண்ணி!! முதல்ல உங்களுக்கு கங்கிராட்ஸ்!! எங்க அண்ணன் மாதிரி ஒரு நல்ல பையனை வாழ்க்கை துணையா தேர்ந்தெடுத்ததுக்கு.. அண்ணன் எங்கள்ட்ட எல்லாம் சொல்லிட்டான்.. சரி வாங்க வீட்டுக்கு போவோம்.. அம்மா உங்களை கூப்பிட்டாங்க" என்று கடகடவென ராம் பேசி முடிக்க, கிஷோர் "ஐயையோ" என திருதிருவென முழிக்க, குறும்பு எண்ணங்கள் நிறைய கொண்ட சுபர்ணா அவள் பங்குக்கு கிஷோரை வம்பு செய்ய முடிவெடுத்தாள்...

"என்ன கிஷோர் அதுக்குள்ள நம்ம லவ் பத்தி உங்க வீட்டுல சொல்லிட்டியா.. ஒரு ஆறு மாசம் திணற திணற லவ் பண்ணிட்டு அதுக்கப்புறம் வீட்டுல சொல்றதா தான டா நம்ம பிளான்.. அவசரப்பட்டு சொல்லிட்ட.. இப்போ பாரு அவங்க நமக்கு உடனே கல்யாணம் பண்ணி வச்சுருவாங்க" என்று கொள்ளை அழகுடன் கொஞ்சலாக சொன்னாள்..

கலையின் மேல் கண்மூடித்தனமாக காதல் கொண்ட கிஷோர் மனதில் சின்ன சபலம் வந்தது. "ப்பா என்ன அழகா கொஞ்சிக்கிட்டே சொல்றா, நிஜமாவே இவளும் நானும் லவ் பண்ணிருந்தா.. ஸ்ஸ்ஸ் நினைக்கும் போதே கிளுகிளு ன்னு இருக்கே" என்று மனதில் எண்ணம் தோன்ற உடனே அதை புறந்தள்ளி "ஹையோ என்ன சுபர்ணா அவன் தான் தெரியாம பேசுனா, நீங்களும் கூட சேர்ந்து கிண்டல் பண்றீங்க" என்றான்..

"என்னது சுபர்ணா வா??? அண்ணி பேரு கலை ன்னு தான சொன்ன" என்று கிஷோரை பார்த்து ராம்  கேட்டான்..

"பின்ன பிரண்ட்ஸ் பிரண்ட்ஸ் ன்னு சொல்லிட்டு சைடு கேப் ல லவ் பண்ணிருக்கீங்க.. என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லலைல.. அதான் சும்மா ஃபன்" என்று கிஷோரை பார்த்து கண்ணடித்து சொன்னவள், ராமிடம் திரும்பி "நீங்க தேடி வந்த கலை அங்க இருக்காங்க" என்று தனக்கு இடப்புறமாக கை காட்டினாள்..

கிஷோரும் ராமும் ஒன்றாக திரும்பி பார்க்க, சற்று முன் நடந்த குழப்பங்களை சிரித்த முகத்துடன் கலை ரசித்துக் கொண்டிருந்தாள்.

"அண்ணா, அண்ணி ரொம்ப ஹோம்லியா அழகா இருக்காங்க" என்று சொல்லிவிட்டு கலையிடம் சென்று "ஹாய் அண்ணி" என்று கை நீட்டினான்..

பதிலுக்கு கை கொடுக்காமல், இரு கைகளையும் மார்புக்கு நேராக தூக்கி இரு கைகளையும் கூப்பி "வணக்கம் பா" என்றாள்.. 

"அட அட என்ன ஒரு பண்பு அடக்கம்" என்று ராம் அதிசயிக்க, "நேற்று கடற்கரையில் தன் கண் முன்னே, இன்னொருவனுக்கு மார்பை கசக்க கொடுத்தவள் இவள் தானா?" என்று கிஷோர் அதிசயித்துப் போனான்..

சந்தோசம் அதிகம் வரும்பொழுது கூடவே துக்கமும் வரும் என்பார்கள்.. அந்த கூற்றை உண்மைப்படுத்தும் வகையில் கடை வாசலில் ராகுல் வந்து நின்றான்.. வழக்கம் போல் செல்வ செழிப்பான தோரணையுடன்..

ராகுலை பார்த்ததும் "ஹாய் மச்சி" என்றான் கிஷோர்.. அவனிடம் "ஹே டியூட்!!" என்று சொல்லிவிட்டு சுபர்ணாவிடம் திரும்பி ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.. 

கோவமாக கிஷோரின் இடுப்பில் கிள்ளிய கலை "அவன் உன்கிட்ட இப்போ ஹாய் கேட்டானா? எதுக்கு வாலண்டியரா போய் பேசுற அந்த பணக்கார திமிரு பிடிச்சவன் கிட்ட.. எங்க உனக்கு மரியாதை கிடைக்குதோ அங்க தான்  நீ பேசணும்" என்றாள்..

"ஹே அவன் அப்டி இல்ல டி" என்று சொல்ல கலை மேலும் முறைப்பதை கண்டு "சரி ஓகே" என்றான்..

ராகுல் 2 நிமிடம் சுபர்ணாவிடம் பேசி விட்டு கிஷோர் அருகில் வந்தான்.. "டியூட் என்ன லவ் ஆ சொல்லவே இல்ல.. எப்போ இருந்து.. சுபர்ணா சொல்லி தான் நான் தெரிஞ்சுக்கணுமா?"

"இல்ல மச்சி நேத்துல இருந்து தான்" 

"ஓஹ் நைஸ் டியூட்" என்று அவன் தோளில் தட்டிவிட்டு "நான் தான் அன்னைக்கே சொன்னேன் ல.. உன் ஸ்டேட்டஸ் க்கு செட் ஆகும் ன்னு" என்று சொல்ல..

"ஹே சும்மா இருடா லூசு" என்று சுபர்ணா அவன் கையை கிள்ள.. கலை ராகுலிடம் கோபமாக கேட்டாள்.. "என்ன ஸ்டேட்டஸ்  ஆ!!"

"ஹே ஹே சில் சில்.. That came out wrong.. I didn't mean it" என்று மழுப்பினான்.. 

சூழ்நிலை ஒருமாதிரி இறுக்கமாக செல்ல, பேச்சை மாற்ற நினைத்த கிஷோர், "மச்சி இது என்னோட தம்பி ராம்"

ராகுல்: (சின்ன சிரிப்புடன்) ஹாய்

"ராம் இது என்னோட Colleague.." என்று சொல்லிவிட்டு "பேரு.." என்று சொல்கையில் "டேய் ராம்.." குயில் போன்ற குரலில் கோவமான சத்தம் கேட்டது. அனைவரும் திரும்பி பார்க்க அங்கே ராமின் காதலி வனிதா நின்றிருந்தாள்..

ராம்: வனிதா இங்க எப்படி வந்த, நான் இங்க இருக்குறது உனக்கு எப்படி தெரியும்..

வனிதா: இங்க மட்டும் இல்ல, நீ எங்க  இருந்தாலும் எனக்கு தெரியும்.. (முதல்ல ராம் மொபைல்ல இருந்து Find My Device ல இருந்து வனிதா மெயில் ஐடி யை ரிமூவ் பண்ணனும் என்று கிஷோர் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்) முந்தாநேத்து நைட்டு நீ எங்க இருந்த ன்னு என்கிட்டே ஒரு கதை சொன்னில்ல.. மரகதம் மார்க்கெட், ராகுல் ன்னு திமிரு பிடிச்ச பையன், நீ  பாத்த CID வேலை ன்னு பெரிய கதை சொன்னியே.. அதுல எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்ல,. அதான் அத்தான் கிட்ட கேட்டு போக வந்தேன்.. உங்க வீட்டுக்கு வந்து அத்தை முன்னாடி கேக்குறது எனக்கு பிடிக்கல.. அதான் இங்கயே வந்துட்டேன்..

கிஷோருக்கு பக்கென்று ஆனது.. "அடப்பாவி இவன் என்ன சொல்லி வச்சிருக்கான் ன்னு தெரியலையே.. வனிதா என்னடா ன்னா இங்கயே வந்து ராகுல் இருக்கும் போதே அவனை பத்தி பேசுறா" என்று அவன் பீதி அடைய "வனிதா இங்க வேண்டாம், வெளிய போயி பேசிக்கலாம் ம்மா" என்றான்..

வனிதா வாயிலிருந்து வந்த "மரகதம் மார்க்கெட், ராகுல் ன்னு திமிரு பிடிச்ச பையன்" வார்த்தைகள் ராகுலின் காதுகளில் துல்லியமாக விழுந்து அவனுக்குள் ஒரு கொதிப்பை ஏற்படுத்த கிஷோரின் மேல் அனல் கக்கும் பார்வையை வீசினான். மற்றொரு பக்கம் கலையும், சுபர்ணாவும்  இங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் "கிஷோர், ராம், வனிதா" மூவரையும் மாறி மாறி பார்த்தனர்..

அதே அனல் கக்கும் பார்வையுடன் கிஷோரை பார்த்த ராகுல் அவனிடம் "டியூட் சிஸ்டர் ஏதோ சொல்ல வர்றாங்க.. ஏன் தடுக்குற" என்று சொல்லிவிட்டு வனிதா விடம் திரும்பி "சிஸ்டர் நீங்க கேளுங்க" என்றான்..

"இல்ல ப்ரோ, எங்க அண்ணனுக்கு ராகுல் ன்னு ஒரு பிரண்ட் இருக்கான்.. அவன்..." என்று ராம் இடைபுகுந்து ராகுலிடம் சொல்ல, அதற்க்கு மேல் பேசாமல் ராமை தடுத்து நிறுத்திய கிஷோர் "தம்பி சும்மா இரு, நாம வீட்டுக்கு போயி பேசிப்போம்" என்றான்..

"கிஷோர் அவங்க தான் ஏதோ சொல்ல வர்றாங்க ல.. Let them speak, don't interrupt again" என்று சொல்லிவிட்டு ராமிடம் திரும்பி "அந்த ராகுலுக்கு என்ன ப்ரோ"

"அந்த ராகுல் ங்கிறவன் பணக்கார திமிரு பிடிச்ச ஒண்ணா நம்பர் பொருக்கி பையன், பொம்பள பைத்தியம் பிடிச்சவன் ப்ரோ, உலகத்துல இருக்குற எல்லா கெட்ட வார்த்தைக்கும் பொருத்தமான ஆளுனா அவன் தான்.. இங்க பொண்ணுங்க இருக்காங்க ன்னு பாக்குறேன் ப்ரோ.. இல்லேன்னா அவனை பத்தி வேற லெவெல்ல சொல்லிருப்பேன்.. எங்க அண்ணன் விவரம் தெரியாம அவன் கூட பிரண்ட்ஷிப் வச்சிருக்கான்.. வாட்ச் ரிப்பேர் பண்றது அது பண்றது இது பண்றது ஒன்னு ஒன்னுக்கும் என்னோட அண்ணனை வேலைக்காரன் மாதிரி யூஸ் பண்ணிருக்கான்.. முந்தாநேத்து அவனை பத்தி விசாரிக்க போனேன், ஆனா சரக்கடிச்சு இருந்துருக்கேன் ன்னு இவ நினைச்சுக்கிட்டு என்கூட சண்டைக்கு வர்றா" என்று ராகுலை பத்தி ராகுலிடமே சொல்லி முடித்தான்..

ராகுலுக்கு மூக்கில் இருந்து புகை மட்டும் தான் வரவில்லை, கோவத்தின் உச்சத்தில் இருந்தான்.. கலைக்கும் சுபர்ணாவுக்கும் என்ன நடந்திருக்கும் என்று ஏதோ ஓரளவு புரிந்து, அடுத்த நடக்க போகும் பிரளயத்தை எண்ணி சற்று அச்சம் வந்தது.. இருந்தாலும் கலையின் மனதுக்குள் ஒரு ஓரத்தில் சந்தோசம், அவள் மனதில் ராகுலை பற்றி நினைத்திருந்த வார்த்தைகள் அனைத்தையும் ராம் கொட்டி விட்டது..

கிஷோர் செய்வதறியாது திகைத்து போய் ராகுல் கண்களை நேருக்கு நேர் காண முடியாமல் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான். பதற்றத்தில் அவன் தொண்டையில் எச்சில் வற்றிப் போனது..

ராகுலின் முழு குணத்தையும், சூழ்நிலையின் உக்கிரத்தையும் புரிந்த சுபர்ணா "கிஷோர் தயவு செஞ்சு எல்லாரையும் இங்க இருந்து கூட்டிட்டு போ" என்று சொல்லிவிட்டு ராகுலின் அருகில் சென்று "ராகுல் அவங்க அப்டி மீன் பண்ணிருக்க மாட்டாங்க டா, நீ டென்ஷன் ஆகாத, இத அப்படியே விற்று, நீ கீழ போய் இரு நான் வரேன்" என்று அவன் கையை பிடித்துக் கொண்டு கனிவாக சொன்னாள்.. அவளுக்குள் ஒரு நப்பாசை போல், ராகுல் இதை அப்படியே  விட்டுவிடுவான் என்று..

இவ்வளவு அருகில் நின்றது வேறு யாருமல்ல சாட்ஷாத் ராகுல் தான் என்ற உண்மை புலப்பட ராமும் வனிதாவும் ஸ்தம்பித்து போயினர்.. ராகுலுக்கு பயந்தவன் அல்ல ராம், இருந்தாலும் அண்ணனை இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தள்ளி விட்டதை எண்ணி வருத்தம் கொண்டான்..

சுபர்ணா வின் கட்டளையை பின்பற்றுவதில் இருந்து கிஷோருக்கு வேறேதும் சிறப்பான வழி எதுவும் தென்படவில்லை. அவன் அங்கிருந்து நகல முற்பட, ராகுல் தன் கையை நீட்டி கிஷோருக்கு அணை போட்டான்.. 

பக்கா கிளாஸ் ஆக மட்டுமே ராகுலை பார்த்த கிஷோர் அன்று தான் தரை லோக்கல் ஆக பார்த்தான்.. 

ராகுல்: ஓத்தா நில்லுடா.. என்கிட்ட பம்மி பம்மி பேசிட்டு, வெளிய போயி இப்படி தான் ஓலு ஓக்கிறயா??

காதல் சுரப்பி கலைக்குள் வேகமாக சுரக்க, அவளால் அந்நியன் ஒருவன் கிஷோரை திட்டுவதை ஏற்க முடியவில்லை.. ராகுல் எவ்வளவு மோசமானவன் என தெரிந்தும் அவனை எதிர்க்க துணிந்தாள்..

"hey mind your words, take your filthy hand of him, let him go"

"ஹே நான் உன்கிட்ட பேசல டி.. பிச்சைக்காரி.. நான் வாங்கி கொடுத்த வேலைல தான் உன் பொழப்பே ஓடுது.. மூடிட்டு ஒதுங்கி நில்லு.. என்கிட்ட வச்சுக்கிட்ட உன் வாழ்க்கை முழுக்க மறக்க முடியாத மாதிரி செஞ்சுருவேன்"

"ராகுல் இதான் லிமிட்.. கலையை பத்தி மரியாதை இல்லாம பேசாத" என்று கலைக்காக ராகுலை எதிர்த்தான் கிஷோர்..

"ஒம்மாள.. என்னடா லிமிட்" என்றவன் கிஷோரின் நெஞ்சு சட்டையை பிடித்து அவனை இழுத்தான்.. 

அவ்வளவு தான் பொளாஆஆஆர் என்ற சத்தம் தான் அந்த கடையை நிறைத்தது. கிஷோர் அப்படியே உறைந்து போனான்.. சுபர்ணா வாயை இரு கைகளால் பொத்திக் கொண்டு சிலையாகிப் போனாள்..

ராகுலுக்கு சில வினாடிகள் உலகமே இருளாகிப் போனது, தலையில் பொறி கலங்கியது.. என்ன நடந்தது என்று அவனால் சில வினாடிகள் யூகிக்க முடியவில்லை.. 

காரணம் ராகுலின் கன்னத்தில் கலை கொடுத்த அரை.. ராகுலின் கைகள் இன்னும் கிஷோரின் நெஞ்சு சட்டையை பிடித்திருக்க "கையை எடுடா நாயே" என்று முதல் அரையை மிஞ்சும் வகையில் இரண்டாவதாக ஒரு அரை ராகுலின் கன்னத்தில் விழுந்தது..

கிஷோரின் சட்டையில் இருந்து கையை எடுத்த ராகுல் முகத்தில் எந்த ஒரு பாவனையும் காட்டாமல் அமைதியாக இருந்தான்..

கலை அவள் வாழ்க்கையில் அடுத்து வரப்போகும் பாதிப்புகளை அறிந்திராமல் கிஷோர், ராம், வனிதாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்..
[+] 6 users Like manaividhasan's post
Like Reply


Messages In This Thread
RE: தாலி மட்டும் தான் கட்டினேன் - by manaividhasan - 12-06-2020, 08:13 PM



Users browsing this thread: ராஜன் 2.0, 6 Guest(s)