Romance ஆண்மை தவறேல் - by Screwdriver
அத்தியாயம் 29


அன்று இரவு பத்து மணி. வீட்டில் அனைவரும் இரவு உணவு அருந்தி முடித்திருந்தனர். சாப்பிட்டு முடித்ததும் நந்தினி கிச்சனில் பிசியாகி விட, அசோக் தங்கள் அறைக்குள் சென்று புகுந்து கொண்டான். பால்கனிக்கு சென்றவன், இருண்டு போன ஆகாயத்தை வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்தான். சலனமற்ற வானில்.. ஜொலிக்கும் நிலவும், மினுக்கும் நட்சத்திரங்களும்.. மெலிதாக வீசிய தென்றல் காற்றும்.. எப்போதும் போலவே அவன் மனதை வருடி சாந்தப்படுத்தின..!! ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்துக் கொண்டான். வெள்ளை வெள்ளையாக.. வளையம் வளையமாக.. புகை விட்டான்..!!
வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் அவனிடம் நடந்து கொண்ட முறை, அவனுடைய மனதுக்குள் ஒரு சந்தேகத்தை கிளப்பியிருந்தது. எல்லோருமாய் சேர்ந்து ஏதோ ஒரு திட்டம் தீட்டி, அதன்படி செயல்படுகிறார்களோ..?? இவள் வேறு எல்லா உண்மையையும் சொல்லிவிட்டேன் என்கிறாள்..!! கல்லூரி காலத்தில் இவள் அப்படி நடந்து கொண்டதற்கு இவள் மீது யாருக்கும் கோவம் இல்லையா..?? கல்யாணத்துக்கு நான் போட்ட அக்ரீமன்ட் பற்றி தெரிந்ததில், யாருக்கும் என் மீது வருத்தம் இல்லையா..?? அவர்கள் முகத்தில் இருந்து எதையுமே கண்டு பிடிக்க முடியவில்லையே..?? மிக தெளிவாக, இயல்பாக இருக்கிறார்களே..??

ஒருவகையில் அசோக் இவ்வாறு குழம்பினாலும், இன்னொரு வகையில் அவர்களுடைய நடத்தை அவனுக்கு சற்று நிம்மதியாகவே இருந்தது. வீட்டில் இருப்பவர்களின் பார்வையை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று கலங்கிப்போய் வந்தவனுக்கு, எல்லோரும் இயல்பாக அவனை அணுகிய விதம், ஆறுதலையே அளித்தது. ஆனால் நந்தினியின் மேல் இருந்த கோவம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. அது அப்படியேதான் இருந்தது..!!

"என்னங்க.. இங்க வந்து நின்னுட்டீங்க..??"

சத்தம் கேட்டு அசோக் திரும்பி பார்க்க, நந்தினி பல்லிளித்துக்கொண்டே பால்கனி நோக்கி வந்து கொண்டிருந்தாள். 'வந்துட்டாயா.. கொஞ்ச நேரம் கூட நிம்மதியா இருக்க விட மாட்டா..' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட அசோக், சலிப்பாக வேறுபக்கம் பார்வையை திருப்பிக்கொண்டான்.

"என்னங்க.. ஃபிஷ் நல்லாருந்துச்சா..??" நந்தினி கேட்டதற்கு, அசோக் கொஞ்ச நேரம் கழித்துதான் பதில் சொன்னான்.

"ந..நல்லாருந்துச்சு..!!"

"ம்ம்.. ஸாரி..!!"

"அதுக்கெதுக்கு ஸாரி கேக்குற..??"

"ஹையோ.. அதுக்கு ஸாரி கேக்கலைங்க..!!"

"அப்புறம்..??"

அசோக் கேட்க, நந்தினி இப்போது முகத்தை அப்படியே குழந்தை மாதிரி மாற்றிக்கொண்டு, ஒருமாதிரி குழைந்தவாறே சொன்னாள்.

"உங்களை நம்பாம.. மதியம் அப்படி பிஹேவ் பண்ணிட்டேன்ல.. அதுக்கு..!!"

"ஓஹோ.. இப்போதான் ஞானம் பொறந்ததோ..??"

"இப்போ இல்ல.. அப்போவே பொறந்துடுச்சு..!!"

"எப்போ..??"

"ஆபீசை விட்டு வெளிய வந்ததும்..!!"

"ஆபீசுக்கு வெளில நாங்க ஒன்னும் போதிமரம்லாம் நட்டு வைக்கலையே ..??"

"ஐயோ..!! ஆபீஸ் விட்டு வெளில வந்ததும்.. நீங்க பேசுனதுலாம் கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாத்தேன்.. அப்போவே புரிஞ்சதுன்னு சொன்னேன்..!!"

"அப்படி என்ன யோசிச்ச.. அப்படி என்ன புரிஞ்சது..??"

"இல்ல.. நீங்க அவ்வளவு கெஞ்சுனீங்கன்னா.. அவ்வளவு கோவப்பட்டு பேசுனீங்கன்னா.. நீங்க சொன்னது உண்மையாத்தான் இருக்கணும்னு புரிஞ்சது..!!"

சொல்லிவிட்டு நந்தினி அசோக்கின் கண்களையே குறுகுறுவென பார்க்க, அவனும் அவளுடைய கண்களையே கொஞ்ச நேரம் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் மீண்டும் வேறுபக்கமாய் திரும்பிக்கொண்டு புகைவிட ஆரம்பித்தான். நந்தினி இப்போது சற்றே அசோக்கை நெருங்கி நின்று கொண்டாள். வலது கையில் சிகரெட்டை பிடித்திருந்தவன், இடது கையை பால்கனி சுவற்றில்தான் ஊன்றியிருந்தான். இப்போது நந்தினி மெல்ல அந்த கையை தனது கையால் பற்றினாள்.

"கோவமா..??" என்று குழைவாக கேட்டாள்.



"ப்ச்.. அதுலாம் ஒண்ணுல்ல..!!" அசோக் அவனுடைய கையை அவளுடைய கைகளுக்குள் இருந்து உருவிக் கொண்டான்.



"இல்ல.. கோவந்தான்.. பாத்தாலே தெரியுது..!!"



"சரி.. கோவந்தான்.. அதுக்கு என்ன இப்போ..??"



"நான்தான் ஸாரி கேட்டுட்டேன்ல..??"



"உன் ஸாரிலாம் நீயே வச்சுக்கோ.. எனக்கு வேணாம்..!!"



அசோக் எரிச்சலாக சொல்லிவிட்டு அமைதியானான். நந்தினி இப்போது அவனை இன்னும் கொஞ்சம் நெருங்கி நின்று கொண்டாள். கொஞ்ச நேரம் அவனுடைய அமைதியாக கணவனின் முகத்தையே ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டிருந்தவள், அப்புறம் மெல்லிய குரலில் சொன்னாள்.



"எ..எனக்கு உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்.. சொல்லவா..??"



"என்ன..??"



அசோக் ஒருமாதிரி வேண்டா வெறுப்பாகவே கேட்டான். ஆனால் அவன் அப்படி கேட்டதுமே நந்தினியின் முகத்தில் குப்பென ஒரு வெட்கம் வந்து அப்பிக்கொண்டது. தலையை பட்டென குனிந்து கொண்டாள். அவளுடைய மூச்சு சீரற்று போயிருக்க, மார்புகள் வேகவேகமாய் ஏறி இறங்கின. அவளிடம் ஏற்பட்ட மாற்றத்தை அசோக் வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நந்தினி முகத்தை நாணிக்கோணிக்கொண்டு, தயங்கி தயங்கி சொன்னாள்.



"ஐ லவ் யூ..!!" அவள் அப்படி சொல்வாள் என்று அசோக் எதிர்பார்த்திரவில்லை.



"என்னது..??" என்றான் முகத்தை கோணலாய் சுளித்தவாறு.



"ஐ லவ் யூ..!!"



நந்தினி மீண்டும் வெட்கத்துடன் சொன்னாள். அவ்வளவுதான்..!! அசோக்கிற்கு சுருக்கென ஒரு கோவம்..!! அவனுடைய இடது கையை சரக்கென உயர்த்தி கத்தினான்.



"அப்டியே அறைஞ்சிருவேன்.. போடீ..!!"



நந்தினி இப்போது மிரண்டு போனாள். அடிவிழாமல் இருக்க முன்னேற்பாடாக தனது கன்னத்தை ஒரு கையால் பொத்திக்கொண்டு பாவமாக கேட்டாள்.



"என்னங்க.. பதிலுக்கு ஐ லவ் யூ சொல்வீங்கன்னு நெனச்சா.. அறைய வர்றீங்க..??"



"நீ லூசுத்தனமா ஏதாவது நெனச்சுக்குவ.. அதெல்லாம் நான் பண்ணணுமாக்கும்..??"



"ஆமாம்.. நீங்கதான ரெண்டு வாரமா என்னையே நெனச்சுட்டு இருந்தேன்னு சொன்னீங்க..??"



"ஓ..!! நான் ஏன் அப்படி இருந்தேன்னு.. இன்னைக்கு மதியமே நீ நல்லா ஃபீல் பண்ண வச்சுட்ட..!!"



"ஐயோ.. அதை விடமாட்டீங்களா..?? திரும்ப திரும்ப அதையே சொல்லிட்டு இருக்கீங்க..?? அதான்.. உங்களை நம்புறேன்னு சொல்லியாச்சு.. பண்ணுன தப்புக்கு மன்னிப்பு கேட்டாச்சு.. வீட்டுல இருக்குறவங்களுக்கும் எல்லாத்தையும் சொல்லி புரிய வைச்சாச்சு..!! இன்னும் என்ன பண்ண சொல்றீங்க என்னை..??"



"நீ ஒன்னும் பண்ண வேணாம்.. என்னை விட்ரு.. நான் இப்படியே இருந்துக்குறேன்..!! எனக்கு இதுதான் புடிச்சிருக்கு..!!"



"சும்மா சொல்லாதீங்க.. உங்களுக்கு இப்படி இருக்குறது புடிக்கலை..!!"



"ஓஹோ.. என் மனசுல என்ன இருக்குன்னு உங்களுக்கு தெரியுமோ..?"



"தெரியும்..!! 'நான் இப்படி இருக்குறதுக்கு காரணமே நீதான்'னு கத்துனீங்களே.. அதுல இருந்தே தெரியலை.. உங்க உள்மனசுக்கு நீங்க இந்த மாதிரி இருக்குறது புடிக்கலைன்னு..!!"



"ம்ம்ம்ம்.. உன் மூளை ரொம்ப அளவுக்கதிகமா வேலை செய்யுது நந்தினி.. கொஞ்சம் அளவோட வேலை செஞ்சா நல்லாருக்கும்..!!"



"என்ன சொல்றீங்க..??"



"ஈவினிங் உன்கிட்ட பேசுனதை மறந்துட்டியா..?? நீ கால் பண்றப்போ.. நான் கெஸ்ட் ஹவுஸ்ல ஒரு பொண்ணோட இருந்தேன்..!!"



"பொய் சொல்லாதீங்கப்பா.. நீங்க அங்கெல்லாம் போகலை.. எங்கயோ போய் நல்லா தண்ணியடிச்சுட்டு வந்திருக்கீங்க..!!"



"உனக்கு எப்படி தெரியும்..??"



"எப்படியோ தெரியும்..!!"



"சரி.. அப்படியே நெனச்சுக்கோ.. எனக்கு என்ன..??"



"அப்போ ஒத்துக்க மாட்டீங்களா..?"



"எதை..??"



"உங்க லவ்வை..??"



"நான் யாரை லவ் பண்றேன்..??"



"என்னை..!!"



"ரொம்பதான் நெனைப்பு உனக்கு..!! உன் மேலலாம் எனக்கு ஒன்னும் லவ்வு இல்ல.. ப்பே..!!"



"இல்ல.. நீங்க பொய் சொல்றீங்க..!!"



"இப்போ நீ அறை வாங்கிட்டுத்தான் போகப் போற..!!"



அசோக் முறைப்பாக சொல்லவும், நந்தினி இப்போது நிதானித்தாள். கொஞ்ச நேரம் கணவனையே எரிச்சலும் முறைப்புமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் ஒரு பெருமூச்சை எறிந்துவிட்டு, பால்கனியில் இருந்து அவர்களுடைய படுக்கையறை நோக்கி நடந்தாள். நடந்து செல்கையிலேயே..



"பாக்குறேன்.. நானும் பாக்குறேன்.." என்றாள் சத்தமாக.



"என்ன பாக்க போற..??" அசோக் அவளுடைய முதுகை பார்த்து கத்தினான்.



"ம்ம்.. உங்க வீராப்பு எத்தனை நாளைக்குன்னு பாக்குறேன்..!!"



சொன்ன நந்தினி படுக்கையறைக்குள் சென்று மறைந்து கொண்டாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த அசோக், அப்புறம் மெல்ல திரும்பி நட்சத்திரங்களை வெறிக்க ஆரம்பித்தான்.



மேலும் நான்கைந்து நாட்கள் நகர்ந்தன. அந்த நாட்கள் அனைத்தும் அசோக்கிற்கு தடுமாற்றமாகவே கழிந்தன. வீட்டில் இருப்பவர்கள் அளவுக்கதிகமாய் அவனிடம் கரிசனம் காட்டினார்கள். அதெல்லாம் அவனுக்கு வித்தியாசமாக தோன்றியது. நாயர் அசோக்கை தொடர்பு கொள்ளவே இல்லை. அவருடய நம்பருக்கு அசோக் முயன்று பார்த்தபோது, 'ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது' என்று பதில் வந்தது. நம்பரை மாற்றிய நாயர் தன்னிடம் ஏன் தகவல் சொல்லவில்லை என்று குழம்பினான். ஆபீசில் கற்பகம் செய்தவை எல்லாம் அவனை மேலும் தடுமாற செய்தன.



"அந்த லெட்டர் ரெடி பண்ணிட்டியா கற்பு..??"



"இங்க பாருங்க.. இனி என்னை அப்படி கூப்பிடாதீங்க.. என் பேர் கற்பகம்..!!"



"முடியாது.. நீ வேணா என் ஃப்ரண்ட்ஷிப் வேணான்னு.. மரியாதைலாம் தந்து கூப்பிடலாம்..!! நான் இன்னும் உன்னை என் ஃப்ரண்டாத்தான் நெனைக்கிறேன்.. நான் கற்புன்னுதான் கூப்பிடுவேன்.. என்னால மாத்திக்க முடியாது..!!"



கற்பகம் அசோக்கை முறைத்தாள். அசோக்கும் பதிலுக்கு முறைத்தான். 'ச்ச..' என்று அவள் சலிப்பாக சொல்லிவிட்டு நகர, அசோக் பரிதாபமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.



நந்தினியின் நடவடிக்கைகள்தான் அவனை மிகவும் மிரள செய்தன. உள்ளுக்குள் காதல் இருந்தும் வீராப்பாக அவன் மறைக்கிறான் என்று நந்தினி நம்பினாள். அதுவுமில்லாமல் தான் வெளிப்படையாக தன் மனதை திறந்து காட்டியும், அதை அவன் நிராகரித்து விட்டானே என்ற எரிச்சல் வேறு..!! அவனை பணிய வைக்கவேண்டும் என்று முடிவெடுத்தவளாக, துணிச்சலாக அவனை சீண்ட ஆரம்பித்தாள்..!!



வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அவன் மீது காந்தத்தனமாய் ஒரு காதல் பார்வையை வீச அவள் தயங்குவதில்லை. அசோக் அவளுடைய பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுவான். முகத்தை வேறுபக்கமாக திருப்பிக்கொள்ள வேண்டி இருக்கும். பார்வையில் மட்டுமில்லாமல் அவளுடைய பேச்சிலும் காதல் கலந்திருக்கும்.


காதல் பார்வையும் பேச்சும் மட்டுமல்ல.. வேறு வகையிலும் நந்தினி அசோக்கை சீண்டினாள்..!! அசோக்கை என்பதை விட, அவனுடைய ஆண்மையை என்று சொல்லலாம்..!! அவனுக்கு பாலுணர்வை தூண்டும் வகையான காரியங்களை மிக இயல்பாக, சகஜமாக செய்தாள்..!! அவன் மீது அவளுக்கு இருந்த அளவிலா காதலும், அவனை வளைக்க வேண்டும் என்ற வைராக்கியமும் அவளை அவ்வாறு செய்ய வைத்தன..!!

இரவில் இருவரும் தனித்திருக்கையில்.. மெலிதான, ட்ரான்ஸ்பரன்டான ஆடைகளையே அணிந்து கொள்வாள்..!! அவளுடைய கட்டான மேனி அழகை அந்த ஆடைகள் வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டும்..!! அந்த மாதிரி ஆடையை அணிந்துகொண்டு அறைக்குள் நுழைபவள், உள்ளே நுழைந்ததுமே..



"ப்பா.. இன்னைக்கு வேலை பெண்டு நிமிந்து போச்சு..!!"



என்று சலிப்பாக சொல்லிக்கொண்டே, கட்டிலில் படுத்திருக்கும் கணவனுக்கு தனது உடலை முறுக்கிக் காட்டுவாள். அவள் அவ்வாறு முறுக்கிக் கொண்டதும், அவளுடைய திரண்டு போன மார்பகங்கள் ரெண்டும், குபுக்கென முன்னுக்கு வந்து விம்மும்..!! ட்ரான்ஸ்பரன்டான ஆடையில் அவைகளை காண நேர்கிற அசோக்கிற்கோ ஜிவ்வென ஒரு உணர்ச்சி பீறிடும்..!!



"ஏய்.. என்னடி ட்ரஸ் இது..??" என்று அவளிடம் சீறுவான்.



"ஏன்.. இதுக்கு என்ன கொறைச்சல்..? நல்லாத்தான இருக்கு..??" அவள் குறும்பாக கேட்பாள்.



"எனக்கு புடிக்கலை..!!"



"எனக்கு புடிச்சிருக்கே..??"



"ப்ச்.. எல்லாம் அப்படியே பளிச்சுன்னு தெரியுது..!!"



"உங்களை யாரு அதெல்லாம் பாக்க சொன்னா..??"



"சொ..சொன்னா கேளு.. இ..இந்த மாதிரிலாம் ட்ரஸ் பண்ணாத.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு..!!"



"அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது.. நீங்களுந்தான் தொடை தெரியிற மாதிரி ஷார்ட்ஸ் போடுறீங்க.. ஆர்ம்ஸ் தெரியிற மாதிரி டி-ஷர்ட் போடுறீங்க.. அதெல்லாம் நான் வந்து கம்ப்ளயின்ட் பண்ணிட்டு இருக்கேனா..?? கம்முனு படுங்க..!!"



சொல்பவள், போர்வை கூட போர்த்திக் கொள்ளாமல், அப்படியே நெஞ்சை நிமிர்த்தி வைத்துக்கொண்டு தரையில் படுத்துக் கொள்வாள். கணவனை திரும்பி கிறக்கமாக ஒரு பார்வை பார்க்க, அவன் மிரண்டு போவான்.



வீட்டில் அனைவரும் இருக்கையிலேயே.. ஆனால் அவர்கள் அறியாதவாறு.. அசோக்குடைய இடுப்பை கிள்ளுவது.. பின்புறத்தை தட்டுவது.. தனது முன்புறத்தால் அவன் முகத்தில் இடிப்பது..!! காலையில் காபி தர வருகையில்.. உடற்பயிற்சியால் வியர்வை வழிகிற அசோக்கின் புஜத்தில்.. திடீரென தனது முகத்தை ஒற்றி எடுப்பது...!! அசோக் இயலாமையில் கிடந்தது தவிப்பான்..!!



"ஏய்.. ச்சீய்.. லூசு.!! என்னடி பண்ற..??" என்று எகிறுவான்.



நந்தினியோ பதில் எதுவும் சொல்லாமல், ஒரு நமுட்டு சிரிப்பை சிந்துவாள். 'இவளை என்ன செய்வது..??' என்று அசோக் மனசுக்கு டென்ஷன் ஆவான்.



"இங்க ஏதோ கடிச்சிடுச்சுங்க.. வலிக்குது.. என்னன்னு பாருங்க.."



என்று பட்டென அவளுடைய புடவைத்தலைப்பை விலக்கி, தனது பின்பக்க இடுப்பை அவனுக்கு காட்டுவாள். வளைவும், குழைவுமாய் அவளது இடுப்பையும்.. வட்டமும், குழிவுமாய் அவளது தொப்புளையும்.. வடிவும், திமிறலுமாய் அவளது ஒருபக்க மார்பையும்.. பார்க்க பார்க்க.. அசோக்கின் ஆண்மை சூடேறும்..!! 'இவளை இப்படியே கட்டிலில் இழுத்துப் போட்டு..' என்பது மாதிரி மனம் தவறு செய்ய தூண்டும்.. தடுமாறும்..!! கட்டுப்படுத்திக்கொள்ள மிக கஷ்டப் படுவான்..!!



"அ..அதுலாம் எதுவும் கடிச்ச மாதிரி இல்லையே..?" அசோக் திணறலாக சொல்வான்.



"இல்லைங்க.. நல்லா பாருங்க.. கொஞ்சம் கீழ.."



ஏற்கனவே இறக்கமாக கட்டியிருந்த புடவையை, அவள் இன்னும் சற்று கீழிறக்க முயல்வாள். அவளுடைய நோக்கம் அசோக்கிற்கு புரிந்து போகும். அவள் முகத்தை ஏறிட்டு முறைப்பான்.



"இங்க பாரு.. என்னை டென்ஷன் ஆக்காத.. போயிரு..!!" என்பான். நந்தினியோ



"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!" என்று எளிறுகள் தெரிய சிரிப்பாள்.



அந்த வாரம் ஞாயிறுக்கிழமை.. நந்தினியின் அராஜகம் அத்து மீறிப் போனது..!! அது ஒரு மாலை நேரம்.. வீட்டில் அவளையும், அசோக்கையும் தவிர யாரும் இல்லை..!! காலையிலேயே மஹாதேவன் ராமண்ணாவுடன் எங்கேயோ கிளம்பியிருக்க, மாலையில் 'செடிக்கு தண்ணி ஊத்திட்டு வர்றேன் நந்தினிம்மா..' என்று கௌரம்மாவும் தோட்டத்துப் பக்கம் கிளம்பினாள்..!!



'வீட்டில் தானும் தன் கணவனும் மட்டும் தனியாக..' என்ற எண்ணம் வந்ததும்.. அவனை கொஞ்சம் சீண்டிப் பார்க்கலாமா என்று நந்தினிக்கு மனதில் ஆசை முளைவிட்டது..!! 'என்ன செய்யலாம்..??' என்று சில வினாடிகள் சுட்டு விரலால் மோவாய் தட்டி யோசித்தவள், அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தாள்..!! கையில் வைத்திருந்த கப்பில் மிச்சமிருந்த காபியை வேண்டுமென்றே மேலே ஊற்றிக் கொண்டாள்..!! 'மவனே.. மாட்னடா நீ..' என்று மனதுக்குள் கருவிக்கொண்டே, தங்கள் அறை நோக்கி ஒய்யாரமாக ஒரு நடை நடந்தாள்..!!



அறைக்குள் அசோக் மெத்தையில் படுத்திருந்தான். வெண்ணிற டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தான். காதுக்கு ஹெட்போன் கொடுத்து, லேப்டாப்பில் 'அசாசின்ஸ் க்ரீட்' ஆடிக்கொண்டிருந்தான். நந்தினி உள்ளே நுழைந்ததுமே அவனையே குறுகுறுவென பார்க்க, அசோக்கும் அவள் முகத்தை ஏறிட்டு பார்த்தான். அவளுடைய காதலும், போதையும் கலந்த மாதிரியான பார்வையை கண்டவன், 'ப்ச்.. இவளுக்கு வேற வேலை இல்ல..' என்பது போல, மீண்டும் கேமில் கவனம் செலுத்தினான்.


நந்தினி நடந்து சென்று வார்ட்ரோப் திறந்து, மடித்து வைத்திருந்த ஒரு புடவையை எடுத்து தனது தோளில் போட்டுக் கொண்டாள். மீண்டும் அறை வாசலுக்கு சென்று, கதவை சாத்தி தாழிட்டாள். அசோக் நிமிர்ந்து பார்த்து எதுவும் புரியாமல் விழித்தான்.

"ஏய்.. ஏன் லாக் பண்ற..?"



"புடவை மாத்தப் போறேன்..!!"



"என்னது..???" அசோக் ஷாக்காகி கத்தினான்.



"காபி சிந்திடுச்சுங்க.. அதான்.. வேற புடவை மாத்திக்க போறேன்..!!"



"அ..அதுக்கு..??? வெ..வெளில போய் மாத்திக்கோ.. போ..!!" அசோக் அதற்குள்ளாகவே தடுமாற ஆரம்பித்துவிட்டான்.



"வெளில ஆள் இருக்காங்க..!!"



"உள்ள நான் இருக்குறது உனக்கு தெரியலையா..??"



"ஏன்.. நீங்க இருந்தா என்ன..?? நீங்க என் புருஷன்தான..?? உங்ககிட்ட என் உடம்பை காட்டுறதுல எனக்கு என்ன வெக்கம்..??"



குறும்பாக சொல்லிக்கொண்டே, நந்தினி தனது மாராப்பை கீழே சரியவிட்டாள். கண்களை இடுக்கி தன் கணவனையே கூர்மையாக பார்த்தாள். திரட்சியும், திமிறலுமாய் ப்ளவுசுக்குள் விம்மிக்கொண்டு நின்ற நந்தினியின் மார்புகள், பளிச்சென அசோக்கின் கண்களை தாக்க, அவன் அப்படியே நிலை குலைந்து போனான். நந்தினியின் அடக்கமான அழகையே அவன் இத்தனை நாளாய் கண்டிருக்கிறான். இப்படி ஆளை அடித்து வீழ்த்துகிற அழகை கண்டதும், அவனுக்கு பக்கென மூச்சடைப்பது மாதிரி இருந்தது. உதடுகள் உடனே உலர்ந்து போயின. கைவிரல்கள் மெலிதாய் நடுக்கம் கொள்ள ஆரம்பித்தன.



"ஏய்.. ச்சீய்.. எ..என்ன பண்ற நீ..??" தடுமாற்றமாய் கேட்டுக்கொண்டே, படுக்கையில் இருந்து விருட்டென எழுந்தான்.



"ஏன்.. என்ன பண்ணிட்டாங்க இப்போ..??" நந்தினி தலையை சற்று குனிந்து, அவனை ஒரு மேல்ப்பார்வை பார்த்துக் கொண்டே கேட்டாள்.



"இ..இங்க பாரு.. நீ எதுக்காக இப்படிலாம் பண்றேன்னு எனக்கு தெரியும்..!!"



"எதுக்காக..??"



"எ..என்னை டீஸ் பண்ணி.. என்னை உன் வலைல விழ வைக்க பாக்குற..!!"



"அப்படி நெனச்சிருந்தா.. நான் ப்ளவுஸ்ல மாத்திக்கணும்..?? நான் ஜஸ்ட் ஸாரி மட்டுந்தான் மாத்திக்க போறேன்ப்பா..!!"



"ஓ.. அப்போ இது டீஸ் பண்றது இல்லையா..??"



"இதுல என்ன இருக்கு..?? நீங்க மட்டும் குளிச்சுட்டு வர்றப்போ.. மேல ஒன்னுமே போடாம.. நெஞ்சை நிமித்திக்கிட்டு வர்றது இல்ல.. இப்பிடி இப்பிடி..!!"



நந்தினி சொல்லிக்கொண்டே அதே மாதிரி செய்து காட்ட.. தனது மார்புப்பந்துகளை சரக்கென நிமிர்த்தி.. அவனுக்கு முன்பாக.. அப்படியும் இப்படியுமாய் அசைத்துக் காட்ட.. அசோக் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டான்..!! 'ஒரு முடிவுடன்தான் வந்திருக்கிறாள்..' என்று அவனுக்கு இப்போது தோன்ற, அவளையே திகைப்பாக பார்த்தான். அவள் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள் .



".............. அது மட்டும் எனக்கு டீஸிங்கா இருக்காதா..?? நாங்கல்லாம் பாத்துட்டு, கம்முனு கண்டுக்காம இருக்குறது இல்ல..??"



அவள் குறும்பாக சொல்லிவிட்டு அவனையே குறுகுறுவென பார்த்தாள். அவளுடைய கைகளை சற்றே செலுத்தி, இன்னும் தனது நெஞ்சை நிமிர்த்து காட்டியவாறே நின்றிருந்தாள். அசோக்கிற்கு அதற்கு மேலும் பொறுமை இல்லை..!!



"ஏய்... ச்சீய்.. வழியை விடு.. நானே வெளில போறேன்..!!"



அவளுடைய புஜத்தை பற்றி விலக்கியவாறே சொன்னான். கதவை நோக்கி நடந்தான். நந்தினி அவ்வளவு எளிதாக அவனை விடுவதாயில்லை. ஓடிச்சென்று அவனை கடந்து, கதவில் சாய்ந்து நின்றுகொண்டாள். கண்களில் இருந்த போதையை, இப்போது குரலிலும் குழைத்துக் கொண்டு கேட்டாள்.



"எங்க கெளம்பிட்டீங்க..??"



"வெ..வெளையாடாத நந்தினி.. வழியை விடு..!!"



"பொண்டாட்டி இங்க ஃப்ரீயா ஷோ காட்டுறா.. வெளில போய் என்ன பண்ணப் போறீங்க..??"



நந்தினி சாதாரணமாகவோ, இல்லை வேண்டுமென்றோ.. சற்றே வேகவேகமாக மூச்சை வெளிப்படுத்தினாள்..!! அவளது மார்பு உருண்டைகள் ரெண்டும்.. குபுக் குபுக்கென விம்மி விம்மி தணிந்து கொண்டிருந்தன..!! ஏறி இறங்கும் அந்த பஞ்சுப் பொதிகளையே ஏக்கமாக பார்த்த அசோக், ஒருமுறை எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டான்..!! மனதை கட்டுப் படுத்திக் கொண்டு, அவளுடைய கண்களை நேருக்கு நேராக பார்த்து முறைத்தான்..!! உலர்ந்து போயிருந்த உதடுகளை ஒருமுறை நாவால் தடவி ஈரப் படுத்திக் கொண்டான்..!! தனது முகத்தை நந்தினியின் முகத்துக்கு அருகே எடுத்து சென்று இறுக்கமான குரலில் சொன்னான்..!!



"இப்போ வழியை விட போறியா.. இல்லையா..??"



அவ்வளவுதான்..!! அவன் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, நந்தினி பாய்ந்து சென்று அவனது உதடுகளை தனது உதடுகளால் கவ்விக்கொண்டாள். அவனுடைய இடுப்பில் கைபோட்டு வளைத்துக் கொண்டு, ஆசையாக சுவைத்தாள். அவளுடைய இதமான பிடியில் இருந்து விலகிக்கொள்ளவே அசோக்கிற்கு மிக கடினமாக இருந்தது. அவளது மெல்லிய உதடுகளுக்குள் சிக்கியிருந்த அவனது தடித்த உதடுகள், அப்படி சிக்கிக்கொண்டு கிடக்கவே ஆசைப்பட்டன. ஒரு சில விநாடிகள்தான் நீடித்தது அந்த முத்தம்..!!
[+] 1 user Likes Its me's post
Like Reply


Messages In This Thread
RE: ஆண்மை தவறேல் - by Screwdriver - by Its me - 30-05-2020, 12:02 PM



Users browsing this thread: 3 Guest(s)