Fantasy என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!!
#18
என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!! - Ep8

தக்காளி!! வெண்டைக்காய்!! வெங்காயம்!!
அம்மா வாங்க!! அக்கா வாங்க!!
தக்காளி!! வெண்டைக்காய்!! வெங்காயம்!!
அம்மா வாங்க!! அக்கா வாங்க!!

வெளுத்து வாங்கும் அந்த உச்சி வெயிலில் கடமையே கண்ணாய் தள்ளுவண்டியில் காய்கறிகளை வைத்து சென்று கொண்டிருந்தார் ஒரு நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெரிய மனிதர். அந்த ஆள் அரவமற்ற வீதியிலும் ஒரு பெண் மட்டும் வெறிச்சோடி கிடந்த சாலையை வெறித்து பார்த்து கொண்டிருந்ததை கண்டார் அந்த மனிதர்.

தாயி!! ஏன் வாசல்லயே நின்னுட்டு இருக்க, வா தாயி! வந்து காய்கறி வாங்கிட்டு போ. வெலை சௌரியம் தான்.

அந்த தள்ளுவண்டி காரர் சொன்னது எதுவும் காதில் விழாமல் அந்த பெண் சாலையையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.

என்னது விலை சௌரியம் தானா, என்று பக்கத்துக்கு வீட்டில் இருந்து இன்னொரு பெண் வந்து காய்கறிகளை தேர்ந்தெடுத்து கூடையில் அள்ளி போட்டு கொண்டிருந்தாள். அவள் கண்களிலும் வாசலில் நின்று சாலையையே வெறித்து பார்த்து கொண்டிருந்த  பெண் அகப்பட்டாள்.

ஏய்ய்ய் சௌமியா!! என்னடி உச்சி வெயில்ல வாசல்ல நின்னுட்டு இருக்குற. என்ன காய் வாங்கலையா?

எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் எதையோ பறி கொடுத்ததை போல சாலையை பார்த்து கொண்டிருந்தாள்.

என்ன இவ!! கூப்பிடறது கூட கேக்காம அப்படியே நிக்குறா. என்னாச்சு இவளுக்கு.

ஆமா தாயி!! நானும் கூப்பிட்டு பாத்தேன் காய் வாங்க. ஆனா அது காதுல வாங்காம அப்டியே நிக்குது.. என்னன்னு போய் விசாரி தாயி.

சரி!! சரி!! எம்புட்டு ஆச்சு ன்னு சொல்லுங்க

72 ரூபா ஆச்சு தாயி, நீ 70 ரூபா மட்டும் கொடு தாயி.

அந்த பெண் ரவிக்கையிலிருந்து மணி பர்ஸை எடுத்து அதிலிருந்து இரண்டு தாள்களையும், சில நாணயங்களையும் அவர் கையில் கொடுத்து விட்டு கால்களை சௌமியா பக்கம் திருப்பினாள்.

தாயி இதுல 65 ரூபா தான் இருக்கு, இன்னும் 5 ரூபா மட்டும் கொடு தாயி.

சில்லறை இல்ல. நீங்க அடுத்து வரும் போது வாங்கிக்கங்க.

இதையே தான் நேத்தும் சொன்ன, தினமும் அஞ்சு அஞ்சு ரூபா கம்மியா கொடுத்தா, நான் எப்படி தாயி பொழப்பு நடத்த.

அதெல்லாம் உங்களுக்கு நல்லா தான் கட்டுப்படி ஆகும். சும்மா வழவழ ன்னு பேசாம போங்க. அடுத்து வரும் போது பாத்துக்கலாம்.

பாவம் அந்த தள்ளுவண்டி காரர் முணுமுணுத்தவாறே நகர்ந்து சென்றார்.

அந்த பெண் சௌமியா பக்கம் வந்திருக்க, "ஏய்ய் சௌமியா!! கூப்பிட கூப்பிட காது கேக்காம என்னடி சிலையா நிக்குற" என்று அவள் தோளை பிடித்து உலுக்கினாள்.

சௌமியா: பானு அக்கா எப்போ வந்தீங்க

பானு: நல்லா கேட்ட போ!! என்னடி ஏதாச்சும் நேத்திகடனா இப்படி உச்சி வெயில்ல நிக்கணும் ன்னு, காய் வாங்க கூப்பிட்டதுக்கு கூட வரல. இப்போ பாரு அவர் போயிட்டாரு.

சௌமியா: (கண்களில் நீருடன், மூக்கை உறிஞ்சுக்கொண்டே) இல்லக்கா, கிஷோரு (அடுத்த வார்த்தை வர விடாமல் தொண்டை அடைத்தது)

பானு: (பயந்து போய்) கிஷோருக்கு என்னடி ஆச்சு? (சௌமியா வின் முகத்தை உற்று கவனித்து விட்டு) உனக்கு ஏன் டி கண்ணெல்லாம் சிவந்து போயி, முகமே வாடி போயி இருக்கு.

சௌமியா: அக்கா, கிஷோரு வீட்டுல சண்டை போட்டுட்டு காலைல போனான், இன்னும் வரல க்கா. (கண்களில் இருந்து நீர் வலிந்து தரையை தொட்டது, அடுத்தும் அவள் கண்களில் நீர் இன்னும் ஊற்றியது)

பானு: அடச்சீ!! கிறுக்கு சிறுக்கி!! இதுக்கு தான் இம்புட்டு அழுதியா. நான்கூட என்னமோ எதோ ன்னு நினச்சு பதறி போயிட்டேன் டி. சரி நம்ம கிஷோர் சண்டை லாம் போடா மாட்டானே!! எப்போவும் சிரிச்ச முகமா அக்கா அக்கா என்னை சொல்வான். அவனா சண்டை போட்டான், சரி அவனுக்கு போன் போட்டு பாக்க வேண்டி தானே டி.

சௌமியா: இங்க பாருங்கக்கா இருபத்தி ஏழு தடவ போன் போட்டிருக்கேன், அவ எடுக்கவே இல்ல, பயமா இருக்குக்கா.

பானு: சரி இப்போ என்ன!! சண்டை போட்டா தான் போடட்டுமே!! கோவம் கொறஞ்சதும் கொஞ்சம் நேரம்சென்னு பொறுமையா வருவான். நீ பயப்படாம உள்ள போ

சௌமியா: இல்லக்கா நான் இங்கயே இருக்கேன். வீட்டுக்குள்ள இருந்தா, கிஷோர் கூட சண்டை போட்ட அவங்க முகத்தை பாக்க பாக்க கோவம் தான் வருது. நீங்க போங்க.

பானு: ஹ்ம்ம்!! என்ன ஊருல உலகத்துல இல்லாத கொழுந்தனோ தெரியல. நீ வேணா உன் கொளுந்தனுக்காக வெயில்ல நில்லு. நான் போறேன் என் வீட்டுக்கு.

சௌமியா: நான் எப்போக்கா அவனை கொளுந்தனா பாத்து இருக்கேன். அவன் எப்போவுமே என் சொந்த தம்பி. (என்று சொல்லிவிட்டு முந்தானையால் முகத்தை மூடி கண்ணீரை துடைத்து கொண்டிருந்தாள்)

சில அடிகள் வீட்டை நோக்கி நடந்து சென்ற பானு சௌமியா விடம் திரும்பி "உன் தொம்பி வந்துட்டான் டி, நல்லா வச்சு கொஞ்சிக்கோ" ன்னு கத்தி விட்டு அவள் வீட்டிற்குள் சென்றாள். 

சௌமியா தன் கண்ணீரை துடைத்து விட்டு முந்தானையை எடுக்க சரியாக கிஷோர் பைக் வந்து நின்றது. இறுகிய முகத்துடன் வந்த கிஷோர் பைக்கை நிறுத்திவிட்டு, சாவியை கூட எடுக்காமல் வேகமாக வாசலை கடந்தான். 

அவனை கண்ட ஆனந்தத்தில் அவன் கையை பிடித்து "தம்பி" என்றாள். துக்கம் மற்றும் கோவம் இரண்டும் கன்னாபின்னா வென அவன் முகத்தில் தாண்டவமாட அவள் கையை உதறி விட்டு வீட்டிற்குள் நுழைந்தான். கல்யாணம் முடிந்து அவள் இங்கு வந்த இரண்டு வருடங்களில் சௌமியா வை கிஷோர் உதாசீனப்படுத்தியது இதுவே முதல் முறை. அதுவும் நேற்று வந்த  மலருக்காக, ஏற்கனவே அவனை காணாமல் நொந்து போயிருந்த அவளுக்கு இது கிஷோர் அவளிடமிருந்து விலகி போவது  போல் தெரிந்தது. நான் இல்லாம வேற யாரால அவனை பாசமா பாத்துக்க முடியும், என்ன ஆனாலும் கிஷோரை விட்டு  விட கூடாது என்று தீர்க்கமாக முடிவு எடுத்தாள். அவன் விட்டு சென்ற  பைக்கில் இருந்து சாவி எடுத்து வீட்டிற்குள் நுழைந்தாள்.

அவள் கணவன் அறைக்குள்ளே இருக்க, மாமனாரும் மாமியாரும்  சோபாவில் அமர்ந்து இருந்தனர். இருவரையும் கண்டு கொள்ளாமல் சௌமியா நேராக கிஷோரின் அறைக்குள் சென்றாள். அவர்களுக்கும் சௌமியா விடம் என்னவென கேட்க தைரியம் இல்லாமல் அமர்ந்து இருந்தார்கள்.

கிஷோர் அங்கே ஒரு புறமாக ஒருக்களித்து படுத்து அவன் முகத்தை கைக்குட்டையால் மூடி இருந்தான். மெதுவாக அவனருகில் அமர்ந்த சௌமியா, அவன் கைகளை ஆதரவாக தடவி விட்டு, அவன் முகத்திலிருந்த  துணியை விளக்கினாள்.

தம்பி!! ஏன் டா இவ்ளோ நேரம் எங்க போயி தொலைஞ்ச. நான் ரொம்ப பயந்து போயிட்டேன் டா.

ப்ளீஸ் அண்ணி, என்னை கொஞ்சம் தனியா இருக்க விடுங்க, தயவு செஞ்சு இங்க இருந்து போங்க, எல்லாம் உங்களால தான்.

கிஷோரின் கடும் சொற்கள் ஒவ்வொன்றும் அவளை ஈட்டி போல் குத்தி காயப்படுத்த, அவள் உடைந்த குரலில் "தம்பி, என்னை பார்த்து சொல்லு டா, என் முகத்த பார்த்து போக சொல்லு, நான் போறேன்"

அவன் எழுந்து உக்காந்து அவளை பார்க்க, அன்பே உருவமாய் திகழும் என் அண்ணியின் முகமா இப்டி கலையிழந்து காணப்படுகிறது, என்மேல இவளுக்கு ஏன் இப்டி ஒரு பாசம், இப்டி அழுது அழுது சிவந்து போன கண்கள்ல இன்னும் கண்ணீர் குளம் மாதிரி தேங்கி இருக்குது. அடுத்து ஒரு வார்த்தை கோவமா சொன்னா கூட, பொலு பொலு வென அந்த குளம் கீழே சிந்தி விடும் போல இருக்குது. அவள் தலை முடி களைந்து, கண்கள் வீங்கி பார்க்கவே பாவமாய் இருந்தால் அண்ணி. அவள் என்னதான் தவறு செய்தால் என யோசிக்க, ஒன்றும் கிட்டவில்லை, மாறாக நான் செய்த தவறிலிருந்து என்னை மீட்க வந்தவளை நான் இப்டி அலங்கோலமா ஆக்கி விட்டிருக்கிறேன். பாவம் அவள்!! நான் அவளை வெறுத்து விடுவேன் என நினைத்து பயந்து போய் இருக்கிறாள், ஆனால் நான் அவளை சந்திக்க துணிவு இல்லமால் அவளை தவிர்க்கிறேன் என்பது அவளுக்கு புரியவில்லை. எனக்கே என்மேல் வெறுப்பாய் இருந்தது,

கிஷோர் மெதுவாக அவன் விரல்களை அவள் நெற்றியில் படர விட்டு களைந்து இருந்த அவள் முடிகளை அவள் காது ஓரங்களில் ஒதுக்கி விட்டான், அவள் முந்தானை நுனியை எடுத்து அவள் கண்களை துடைத்து விட்டான். 

மன்னிச்சுருங்க அண்ணி, என்னால முடியல, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணி மனசு. மலரை விட்டுட்டு நான் எப்படி இருக்குறது ன்னு தெரியல.

"தம்பி!!!" என்று அழைத்தவாறே தன் பூ போன்ற உள்ளங்கைகளை அவன் இரு கன்னங்களிலும் மெதுவாக பதித்து அவன் முகத்தை அவளை பார்க்கும் படி உயர்த்தி, அவனருகே நெருங்கி அவனை ஒட்டி அமர்ந்தாள். ஒரு தாய்ப்பசு தன் கன்னுகுட்டியை முட்டுவது போல, தன் நெற்றியை அவன் நெற்றியில் மெதுவாக முட்டினாள். 

"அண்ணி நான் இருக்கும் போது நீ இப்படி கஷ்டப்படலாமா தம்பி" (என்றவள் அவன் கன்னங்களில் தன் உள்ளங்கையால் சற்று அழுத்தம் கொடுத்து) "இதுக்காக தான் டா அந்த  கடவுள் என்னை உன் பக்கத்துல விட்டு போயிருக்கான்"

இருவர் நெற்றியும் முட்டி கொண்டிருக்க, அவர்கள் கண்கள் நேருக்கு நேராக  பார்த்து கொண்டிருந்தது. கிஷோரின் கண்களில் கண்ணீர் மெல்ல தென்பட, தான் களங்குவதை அவளிடம் காட்ட கூடாது என்று நினைத்த கிஷோர், தன் முகத்தை அவள் நெற்றியில் இருந்தும், கைகளில் இருந்தும் சரித்து அவள் கழுத்துடன் சேர்த்து அவள் தோளில் முகம் புதைத்தான். அவன் உதடுகள் அவள் கழுத்தில் புதைந்து இருந்தது. 

அவள் கழுத்தில் புதைந்திருந்த அவன் உதடு அசைந்தது. "அண்ணி!! நீங்க என்கூடவே இருக்கணும் போல இருக்கு. என்ன விட்டு போக மாட்டீங்கள்ல அண்ணி"

அவன் தலையை இரு கைகளால் பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்து அவன் தலையில் முத்தமிட்டாள். "நீயே போக சொன்னாலும் போக மாட்டேன் டா தம்பி"

அறைக்குள்ளே வந்த சௌமியாவின் கணவன் கதிர் அவர்களை பார்த்து விட்டு "அவன் என்ன பச்சை குழந்தையா டி, இப்டி கட்டி பிடிச்சு கொஞ்சிகிட்டு இருக்குற, ச்சீ எந்திச்சு வா" என்றான்.
[+] 6 users Like manaividhasan's post
Like Reply


Messages In This Thread
RE: என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!! - by manaividhasan - 24-05-2020, 07:46 AM



Users browsing this thread: 5 Guest(s)