Fantasy என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!!
#14
என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!! - Ep7

"என் ப்ளவுஸ் டைட்டா இருந்துச்சுன்னா, உங்க ப்ளவுஸ் எடுத்துக் கொடுக்கலாம் ல அத்த" ன்னு ரூம் வாசலில் எல்லாத்தையும் பாத்துட்டு அண்ணி சொன்னாள்..

அப்பா உடனே கையை எடுத்து விட அம்மா மலரோட முந்தானையை எடுத்து அவ தோள்ல போட்டு மூடி விட்டா.

ச்சா கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே ங்க மாதிரி அப்பா முகத்துல அவ்வளவு ஏமாற்றம், அதுக்கு கொஞ்சம் கூட குறையாம மலரோட முகத்துலையும் ஏமாற்றம் தெரிஞ்சுச்சு. 

அம்மா: அது ஒண்ணுமில்ல சௌமியா உன்னோட ஜாக்கெட் மலருக்கு ரொம்ப எடுப்பா இருந்துச்சுல்ல, அதுதான் மாமாக்கு வேற மாத்த மனசு இல்ல. 

அண்ணி: அப்போ என்னோடது மாதிரியே புதுசா ஒன்னு எடுத்துருங்க அத்தை. அதைவிட்டுட்டு கொஞ்சமா கிழிஞ்சு இருக்குற என் ப்ளவுஸ் ஐ மொத்தமா கிழிச்சுருவிங்க போல.

மலர் எந்திச்சு கோவமா ரூமுக்குள்ள போனா.

அப்பா: அட என்னம்மா நீ புதுசா வந்துருக்குற பொண்ணு கிட்ட இப்டிலாம் பேசிகிட்டு.. பாரு இப்போ அவ கோவிச்சுக்கிட்டு உள்ள போயிட்டா.

அண்ணி: (கண்களில் நீர் தேங்க) இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன் மாமா. (ன்னு அவளும் கொஞ்சம் கோவமா மாடிக்கு போனா) 

அண்ணனுக்கு கல்யாணம் ஆகி அண்ணி இங்க வந்த ரெண்டு வருசத்துல அண்ணி எப்போலாம் மாடிக்கு போவா ன்னு எனக்கு நல்ல தெரியும். மனசுல இருக்குற ஆதங்கத்தை யாருக்கும் வெளிய சொல்ல முடியாம இருக்குற நேரத்துல மாடிக்கு போயிட்டு தனியா உக்காந்து அழுதுட்டு இருப்பா. அப்போலாம் நானும் பின்னாடியே போய் ஆறுதல் சொல்லி அவளோட சோகத்தை கொஞ்சம் தனிச்சு வைப்பேன். ஆனா இந்த தடவை என்ன சொல்லி அவளோட சோகத்தை போக வைக்கிறது.. ஏன்னா இப்போ அண்ணி வருத்தப்பட்டு போறதுக்கு நானும் ஒரு காரணமா ஆகிட்டேன் ல. மலரை இந்த வீட்டுக்கு அறிமுக படுத்துவதே நான் தானே. அண்ணி மாடிக்கு போகுற வழியில அவளோட கண்ணு ல இருந்து ஒரு துளி கண்ணீர் கீழ விழுந்து தரையை நனைச்சது, அத பாத்துட்டும் என்னால உக்கார முடியாம நானும் அண்ணி பின்னாடியே போனேன். அண்ணியோட இந்த கண்ணீர் துளிக்கு அப்பாவோட ஒரு சுடுசொல் தான் காரணம் ன்னு அப்பாவை முறைச்சிட்டே போனேன். 

அப்பா: டேய் நீ எதுக்கு டா அங்க போற?

நான்: ஆஹ்ஹ்!!! மாடில இருந்து நிலாக்கு சாட்டிலைட் அனுப்ப போறேன்.

அம்மா: ஏங்க சும்மா இருங்க. அவன் சௌமியா கிட்ட சமாதானம் பேசி கீழ கூப்பிட்டு வருவான்.

எந்த நேரம் தோள் கொடுப்பாங்க, எந்த நேரம் காலை வாருவாங்க ன்னு புரிஞ்சு கொள்ள முடியாத இந்த அம்மாவை பாத்து நான் நன்றி சொல்ற மாதிரி சிரிச்சுட்டு மாடிக்கு போனேன். அண்ணி குத்துக்கால் போட்டு உக்காந்து முந்தானையை கண்ணுல பொத்திக்கிட்டு அழுதுட்டு இருந்தா. நானும் அவளுக்கு எதிரில் உக்காந்தேன்.

நான்: அண்ணி

என் குரலை கேட்டதும் முந்தானையால் கண்ணை துடைச்சிட்டு அழுகையை நிறுத்திட்டு வேற பக்கம் தலையை திருப்பிக்கிட்டா

ஏன் அண்ணி இங்க வந்து உக்காந்து அழுதுட்டு இருக்கீங்க. வாங்க கீழ போவோம்.

(கோவமா என்னை பார்த்து திரும்பி) நான் ஏன் அழுகுறேன் தம்பிக்கு தெரியாதோ?

என்னால பதில் பேச முடியாம சங்கட நிலைமைக்கு தள்ள பட்டேன்.. 

(ஆச்சரியம் கலந்த கவலையுடன்) தம்பி உனக்கு என்னடா ஆச்சு. நீ ஏன் டா சும்மாவே இருந்த.. நீ தானா இப்டி இருந்தது ன்னு என்னால நம்ப முடியல டா. நான் உன்கிட்ட ஒருநாள் கூட அண்ணியா பழகுனது இல்ல, என் சொந்த தம்பியா நினச்சு பழகிட்டு இருக்கேன்.. அப்டி நினச்ச உன்னை இப்டி பாக்க தான் டா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

அண்ணி சொன்னதுல நூறு சதவிகிதம் உண்மை இருக்க என்னால் எதுவும் பேச முடியாம தலையை குனிஞ்சுட்டு அமைதியா இருந்தேன். 

(அண்ணி தொடர்ந்தாள்) வேண்டாம் டா தம்பி. இது வேண்டாம் நமக்கு. விட்டுரு!! ன்னு சொல்லிட்டு பாசமா என் தலையை தடவி கொடுத்தாள்.

அண்ணி எதை விட்டுரு ன்னு சொல்றா ன்னு எனக்கு நல்லா புரிஞ்சது. ஆனா நான் எப்படி மலரை விடறது, என்னால அவ இல்லாம இருக்க முடியாது ன்னு நான் எப்டி அண்ணி ட்ட சொல்றது. 

(தலையை தடவி கொண்டிருந்தவள் என் கன்னங்களில் கை வச்சு) ஏன் தம்பி அமைதியா இருக்க, நீ மனசுல என்ன நினைக்கிற எனக்கு புரியாம இல்ல டா. உனக்கு அவளை விடறது நரக வேதனை யா இருக்கும். ஆனா உன் வாழ்க்கை வேற பாதையை நோக்கி போகும் பொது அதுவும் தப்பான பாதையா இருக்கும் பொது இந்த நரக வேதனை கூட நல்ல விஷயம் தான் டா. 

ஒரு ஒரு உண்மையா அண்ணி எனக்கு புரிய வைக்க, அந்த உண்மை லாம் நெருஞ்சி முள் மாதிரி நெஞ்சை குத்த, மலரை விட்டு விலகுவது என்ற உண்மை கடப்பாரை நெஞ்சை குத்துவது மாதிரி இருக்க என் கன்னங்களை பிடித்து இருந்த அவள் கைகளில் ஆதரவாக சாய்ந்தேன். என் கண்ணுல இருந்து ஒரு துளி அவளோட கையை நனைச்சது. என்னோட கண்ணீரை உணர்ந்ததும் என்னை இழுத்து அவளோட மடியில படுக்க வச்சு ஆதரவா தலையை தடவி கொடுத்தாள்.

நான்: என்னால மலர் இல்லாம இருக்க முடியாது அண்ணி

தலையை தடவி கொண்டிருந்தவள், மெதுவாக சொன்னாள். இது உன் வாழ்க்கை மட்டும் இல்லடா தம்பி, என் வாழ்க்கையும் இருக்கு..

அண்ணனை பற்றி தான் அண்ணி பேசுறா ன்னு புரிஞ்சது. என்கிட்டே பதில் இல்ல, அமைதியாக அவள் மடியில படுத்து இருந்தேன். 

என் தலையை பிடித்து அவள் மடியிலிருந்து தூக்கி என்னை உக்கார வைத்தவள் எழுந்து கீழே சென்றாள். இன்னும் சரியாக ஒரு முடிவுக்கு வராமல் நானும் அவள் பின்னாலே கீழே சென்றேன். மலர் அந்த கரை படிந்த சுடிதாரையே அணிந்து கொண்டு முன்பு போல அப்பாவுக்கு நெருக்கமா உக்காந்து இருந்தா, அவள் பக்கத்தில் அண்ணியின் சேலை, ப்ளவுஸ் இருந்தது.

அண்ணி எதுவும் பேசாமல் அமைதியா அவளோட ரூமுக்குள்ள போனாள். அண்ணியை உற்று பார்த்த அம்மா என்னிடம் என்னடா கிஷோர் அண்ணியை சமாதான படுத்திட்டே போல ன்னு கேக்க. நான் பதில் எதுவும் சொல்லாமல் மலருக்கு பக்கத்தில் இருந்த அண்ணியின் சேலை, ப்ளவுஸ் ஐ எடுத்துட்டு அண்ணன் - அண்ணியின் ரூமுக்கு வெளியே நின்னு "அண்ணி" ன்னு கூப்பிட்டேன்.

அண்ணி வெளியே வந்தாள். "உங்களுக்கு சொந்தமானது எப்போவும் உங்கள்ட்ட மட்டும் தான் அண்ணி இருக்கணும்.. கவலை படாதீங்க.." ன்னு சொல்லி அவள் ஆடைகளை அவளிடம் கொடுத்தேன்.

நான் எதை சொல்றேன் ன்னு புரிஞ்சுக்கிட்ட அண்ணி, மகிழ்ச்சியோட என் கைல இருந்து அவள் துணிகளை வாங்கி கொண்டாள்.. அடுத்து நிகழும் களேபரங்களை பார்க்க அவள் அங்கேயே நின்றாள். 

நான் மறுபடியும் சோபா வில் மலருக்கு அருகில் உக்காந்து மலரை கவனித்தேன். அவளும் அப்பாவும் கைகளை கோர்த்து உடல் உரசிக்கொண்டு  பேசிட்டு இருந்தாங்க. அண்ணி சொன்ன ஒரு ஒரு வார்த்தையும் என் காதுக்குள்ள ஒளிச்சுட்டே இருக்க

நான் வேகமா எழுந்து மலரோட கைகளை பிடிச்சு "வா கிளம்பலாம்" என்றேன்.

மலர், அப்பா, அம்மா மூவரும் ஆச்சரியமாக ஒன்று போல "என்னடா திடீர்னு கூப்பிடுற என்னாச்சு?" ன்னு கேட்க, அண்ணி மட்டும் மகிழ்ச்சியா ரூமுக்கு வெளிய நின்னு பாத்துட்டு இருந்தாங்க.

நான்: உங்க வீட்டுக்கு போலாம் வா, ன்னு அவளை பிடித்து இரண்டடி இழுத்து சென்றேன். 

மலர் ஒரு விதமான மிரட்சியோட பயந்து போய் என் பின்னாடி வந்தா..

"டேய்!! நில்லுடா என்னடா நினைச்சிட்டு இருக்குற" ன்னு வீடே அதிர மாதிரி அப்பா கத்தினார். சுள்ளுன்னு எனக்குள்ள ஒரு கோவம் வர, திரும்பி அப்பாவுக்கு பக்கத்துல போய் நின்னு அவரை நேருக்கு நேரா முறைச்சு "நான் நினைக்குறது  லாம்  உங்க கிட்ட சொல்ல முடியாது" ன்னு சொல்ல 

என்கூடவே சேர்ந்து அண்ணியும் "இது அவனோட வாழ்க்கை நீங்க சும்மா இருங்க மாமா" ன்னு சொல்ல, அப்பா அடுத்து ஒரு வார்த்தை பேசாம சோபா மேல அப்டியே விழுந்தார்.

அம்மா பேயறைந்தது போல எதுவும் பேசாம உக்காந்துட்டு இருந்தாங்க. நான் மலரை பிடித்து இழுத்து என்னோட பைக்கில் உக்கார வச்சு ஒட்டி சென்று அவள் வீட்டின் முன்னாடி நிறுத்தி அவளை இறக்கி விட்டேன்.

அவள் முகத்தை பார்க்கும் தைரியம் இல்லாமல் தலையை குனிஞ்சு பெட்ரோல் டேங்கை பார்த்தவாறே "என்னை மறந்துடு மலர்" ன்னு சொன்னேன். அடுத்து அவளிடம் இருந்து வரும் வார்த்தைகளை கேட்கும் துணிவு இல்லாமல் பைக்கை விரட்டினேன்.. 

பைக்கை ஓட்டி கொண்டே கண்ணாடியில் பார்க்க, மலர் அழுத கண்களோடு நான் செல்வதையே பார்த்துட்டு இருந்தா. இறுகிய மனதோடு என் கை வண்டியை இன்னும் முறுக்கியது.
[+] 1 user Likes manaividhasan's post
Like Reply


Messages In This Thread
RE: என்ன பண்றது என் லவ்வர் ஆச்சே!! - by manaividhasan - 21-05-2020, 09:32 AM



Users browsing this thread: Mathan1007, 6 Guest(s)