Fantasy தாலி மட்டும் தான் கட்டினேன்
#9
தாலி மட்டும் தான் கட்டினேன் - Ep3

"ஓ god!! இன்னைக்கு நாள் இவ்ளோ நல்லா அமையும் ன்னு கொஞ்சம் கூட எதிர் பார்க்கல" என நினைத்துக்கொண்டு திரும்ப

ராகுல் எதிரே இருந்தான்!!!!

ராகுல் எதிரே 10 அடி தூரத்தில் நின்று ஏதோ ஒரு பெண்ணிடம் பேசி கொண்டிருந்தான். ராகுல் நின்று கொண்டிருந்த தோரணையும் அவன் அணிந்திருந்த உடையும் அவன் சமூகத்தில் உயர் தர குடிமகன் என்பது பார்ப்பவர் கண்களுக்கு எளிதாக விளங்கி விடும்.

கிஷோருக்கு அவனுக்குள்ள தூங்கிட்டு இருந்த தாழ்வு மனப்பான்மை புத்தி ராகுலை பாத்ததும் மறுபடியும் முழிச்சுருச்சு.. கிஷோர் அவனை தலைல இருந்து கால் வரைக்கும் உத்து பாத்து ஒன்னு ஒன்னா தன்னோட ஒப்பிட்டு கொண்டிருந்தான்..

அவன் தலைல ஹேர் கலரிங் ஆனா நம்ம தலைல ஒன்னும் இல்ல..
அவன் முகத்துக்கு வாரா வாரம் பேஸ் ப்ளீச்சிங் ஆனா நம்ம மூஞ்சிக்கு வெறும் ponds பவுடர் தான்
அவன் போட்ருக்குற பாண்ட் ஷர்ட் லாம் பிராண்டட் ஆனா நம்ம போட்ருக்குற சட்டை என்ன பிராண்ட் ன்னு கூட தெரியல .
அவன் போட்ருக்குற perfume பத்து அடி தூரம் வரைக்கும் மணக்குது ஆனா நம்ம போட்ருக்குற perfume கொசு மருந்து வாசம் தான் வருது.
அவன் போட்ருக்குறது Woodland Shoes ஆனா நம்ம போட்ருக்குறது சரவணா ஸ்டோர் ல வாங்குன ஐந்நூறு ரூபா shoe..

சரி இது போதும் ன்னு நினைக்குறேன் கிஷோர் ஐ விட்டா ஒரு நாள் முழுக்க ஒப்பிட்டு பாத்துட்டே இருப்பான்.. அதுசரி "உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு" ன்னு சொன்ன கண்ணதாசனோட வரிகள் அவன் காதுக்கு எட்டுன அளவு அவன் மூளைக்கு எட்டலை போல.. அவனோட வாழ்க்கைல வர போற சோதனைக்கு மூலக்காரணமே இந்த புத்தி தான் ன்னு அவன் உணரவும் இல்ல.

இவன் இப்டி பாத்து யோசிச்சுட்டே இருக்க அப்போதான் இன்னொன்னு கவனிச்சான். இவ்ளோ நேரம் அவன் கூட நின்னு பேசிட்டு இருந்த பொண்ணு வேற யாருமில்ல அவனோட கலையை திட்டுன அதே பொண்ணு தான். ராகுல் உம் அந்த பொண்ணும் சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்த விதம் அவங்க ரொம்ப நெருங்கிய நண்பர்கள் ன்னு தெளிவா காட்டுச்சு.. யாருக்கு தெரியும் அதுக்கு மேல கூட இருக்கலாம்..

இங்க ராகுல் பத்தி பாக்கலாம்.. அவனை பத்தி சொல்லனும்னா கோடீஸ்வரன் ன்னு சுருக்கமா சொல்லலாம்.. சென்னை ல 3 சூப்பர் மார்க்கெட், ஒரு ட்ராவெல்ஸ் 5 லாரி ஓடுது.. அது போக ரெண்டு மொபைல் ஷோ ரூம்ஸ்.. இது எல்லாத்துக்குமே மரகதம் ன்னு அவனோட அம்மா பேரு தான் வச்சாரு அவனோட அப்பா குரு மூர்த்தி.. பாவம் ராகுல் க்கு 20 வயசு இருக்கும் போது இறந்துட்டாரு சரியா 6 வருஷம் முன்னாடி.. இப்போ அவனுக்கு வயசு 26 அது தான் நம்ம கதாநாயகன் கிஷோரோட வயசும். இது எல்லாமே ராகுல் ஓட அண்ணன் சத்யா தான் பாத்துக்குறான்.. அதனால ராகுலும் பிசினெஸ் டென்ஷன் எதுவும் தலைக்கு ஏத்த வேண்டாம் ன்னு ஒரு MNC கம்பெனி ல வேலை பாக்குறான் கிஷோருக்கு பக்கத்து சீட்டுல தான்..

ஒரே இடத்துல நின்னுட்டு அவங்களையே வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருந்த கிஷோர் மெல்ல அவங்க பக்கம் போனான். அவன் வந்ததை பாத்துட்டு ராகுல் அவன்ட்ட சின்னதா சிரிச்சுட்டு கொஞ்சம் கூட மதிக்காம அந்த பொண்ணு பக்கம் திரும்பி பேசிட்டு இருந்தான். கிஷோருக்கு அவங்க ரெண்டு பேர் உரையாடல் ல தானும் கலந்துக்கணும் ன்னு நினைச்சாலும் எதுவும் பேசாம அவங்க ரெண்டு பேரு பக்கத்துல நின்னு அவங்க வாயையே பாத்துகிட்டு இருந்தான்.

இப்டியே ஐந்து நிமிஷம் போக ராகுல் க்கு பாடிகாடு போல கிஷோர் நிப்பதை உணர்ந்தான்..பொறுமை இழந்த கிஷோர் "மச்சி உன் வாட்ச் ல செல் தான் ப்ரோப்லேம், சோ செல் மாத்திட்டேன்.. இந்தா நான் கிளம்புறேன் நாளைக்கு ஆபீஸ் ல மீட் பண்ணலாம், பை டா" என சொல்லிவிட்டு அவன் பக்கத்துல நின்னுட்டு இருந்த அந்த பொண்ணை பாத்து மரியாதைக்காக சின்ன புன்னகை காட்டி விட்டு நகர்ந்தான்.

ஏதோ இப்பொழுது தான் அவனை கவனித்தது போல "ஹே கிஷோர், டியூட் கொஞ்சம் இரு அதுக்குள்ள எங்க போற.. இது என் பிரண்ட் சுபர்ணா, பிஸினெஸ் ரிலேட்டடா பேசிட்டு இருந்தேன் அதான் உன்னை சரியா கவனிக்கல.. கோவிச்சுக்காத. ஹே சுபு, இது என் colleague கிஷோர், 2 years ஆ ஒண்ணா ஒர்க் பண்றோம்" என்றான் ராகுல்.

"ஓ!!! இவர் பேரு கிஷோர் ஆ!!! தெரியும் ராகுல் இப்போ தான் கடைல பேசுனோம்.."

ராகுல்: ஓ!! ஆல்ரெடி பேசிட்டிங்களா சூப்பர்.. அப்போ பெருசா இன்ட்ரோ லாம் தேவை இல்ல ன்னு நினைக்குறேன்.

சுபர்ணா: ஹே இல்லப்பா!! அந்த கலை பொண்ணு இவரை வா போ ன்னு பேசிட்டு இருந்துச்சு.. கலையும் இவரும் ஆல்ரெடி பிரண்ட்ஸ் ன்னு தெரியாம அந்த கலையை திட்டிட்டேன்.. அப்போ தான் பேசுனோம்.. மத்த படி இன்ட்ரோ லாம் எதுவும் பண்ணிக்கல.. அதனால நீ தான் இப்போ இன்ட்ரோ பண்ணனும்..

என சொல்லிவிட்டு கிஷோரை பார்த்து இரண்டு கண்களையும் ஒரு சேர சிமிட்டி சிரித்தாள். கிஷோர் மனமோ "ச்சா இவ்ளோ ஜாலியா பேசுறா.. இவளை போய் திமிறு பிடிச்ச பொண்ணு ன்னு நினச்சுட்டோமே" என உச்சு கொட்டினான்.

ராகுல்: ஹே!! இப்போ தான இவனை பத்தி சொன்னேன்..

சுபர்ணா: ஆமா!! சொன்ன.. ஆனா என்னை பத்தி அவர்கிட்ட சொல்லலையே இன்னும் நீ..

ராகுல்: சரி சொல்லிட்டா போச்சு.. ட்யூட் இங்க பாரு.. இது சுபர்ணா என் காலேஜ் பிரண்ட், சரியான வாயாடி.. நீ இப்போ வாட்ச் ரிப்பேர் பண்ணுன கடை இவங்களோடது தான்.. அந்த கடை பேரு ப்ரீத்தி அவங்க அம்மா பேரு தான்.
அப்புறம் இவ வயசு 26 சைசு 36 சத்தியமா விர்ஜின் இல்ல

அப்புறம் ன்னு ராகுல் வாயெடுக்க சுபர்ணா அவன் வாயை பொத்தி அவனை அடித்து கொண்டே "scoundrel, pervert ஏன் டா என்னை பத்தி தப்பு தப்பா சொல்ற.. உன்னை போய் இன்ட்ரோ கொடுக்க சொன்னேன் பாரு என்னை சொல்லணும். கிஷோர் இவன் சொல்றது எதுவும் கேக்காதீங்க, இவன் பிரண்ட்ஷிப் உம் கட் பண்ணுங்க" ன்னு சொன்னாள்..

இங்கே கிஷோரோ வாயடைத்து போய் எதுவும் பேச முடியாமல் சிலையாக நின்று கொண்டிருந்தான்..

ராகுல்: ஹே சுபு சும்மா fun தான டி. கோச்சுக்காத. கிஷோர் எதுவும் சீரியஸா எடுத்துக்க மாட்டான் என்று அவள் கன்னங்களை கிள்ளினான்.

அவன் கைகளை தட்டி விட்ட சுபர்ணா "போடா ராஸ்கல்.. நான் கிளம்புறேன்.. பை கிஷோர், ஸீ யூ நெக்ஸ்ட் டைம்" என்று சொல்லிவிட்டு விட்டா போதும் சாமி என்பது போல் கிளம்பி விட்டாள்.

அவள் சென்ற பின்னர் ராகுல் கிஷோர் இருவரும் பேசிக்கொண்டே கீழே பார்க்கிங் ஏரியா வுக்கு சென்றனர்..

ராகுல்: மச்சி இந்த வாட்ச் நீ வச்சுரு.. எனக்கு வேணும் போது நான் வாங்கிக்குறேன். என்று அந்த காஸ்டிலியான வாட்சை கிஷோரிடம் நீட்டினான்..

கிஷோர் வெறும் பேருக்கு "மச்சி எனக்கு வேணாம் டா.. நீயே வச்சுக்கோ உன் வாட்ச் தான.. காஸ்ட்லீ வேற" என சொன்னாலும் உள்ளுக்குள் அந்த வாட்ச் ஐ வைத்து கொள்ள அலாதி ஆசை இருந்தது.. "எப்படியும் ராகுல் வச்சுக்கோ டா ன்னு மறுபடியும் சொல்லுவான், அப்போ நோ சொல்லாம கண்டிப்பா வாங்கி வச்சுக்கணும்" என கிஷோர் நினைத்து கொண்டான்.

அதே போல் ராகுலும் சொல்ல கிஷோர் வேண்டா வெறுப்பாக வாங்கி கொள்வது போல் வாங்கி கொண்டான்..

ராகுல்: ட்யூட்! கேக்கணும் ன்னு நினைச்சேன், நீயும் அந்த கலையும் பிரண்ட்ஸ் ஆ!!

கிஷோர்: (இவன்கிட்ட தெரியாது, சுபர்ணா ட்ட இருந்து காப்பாத்த தான் பிரண்ட்ஸ் மாதிரி நடிச்சோம் ன்னு உண்மையை சொன்னா எப்படியும் அந்த சுபர்ணா ட்ட போட்டு கொடுத்துருவான், அப்புறம் நம்ம செல்லம் திட்டு வாங்கும். நாம இப்டியே கண்டினியூ பண்ணுவோம் என மனதில் நினைத்து) ஆமா மச்சி! ஸ்கூல் பிரண்ட்ஸ். நீ ஏன் டா கேக்குற. உனக்கு அந்த பொண்ணு தெரியுமா??

ராகுல்: தெரியும் டா.. அவங்க அம்மாவும் எங்க அம்மாவும் ஸ்கூல் மேட்ஸ்.. சுபர்ணா ட்ட நான் தான் பேசி அந்த பொண்ணை வேலை க்கு எடுத்துக்க சொன்னேன்.. அவங்க அம்மா என் அம்மா ட்ட பேசி என் அம்மா என்கிட்ட கேட்டதுனால தான் அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணேன்.. மத்தபடி அந்த பொண்ணு கூட லாம் பேசுனதும் இல்ல பேசவும் மாட்டேன்.. அப்புறம் சுபர்ணா மட்டும் இல்ல என் பிரண்ட்ஸ் ரிலேட்டிவ்ஸ் எல்லார் முன்னாடியும் என் பேரு கெட்டு போகும்..

கிஷோர்: நீ பொண்ணுங்க கூட பேசுறது யாராச்சும் பாத்து உன் பேரு கெட்டு போகும் னா.. சுபர்ணா கூட மட்டும் பேசுற.

ராகுல்: டியூட் நல்லா கேளு.. நான் பொண்ணுங்களை சொல்லல.. ஸ்டேட்டஸ் பத்தி சொல்றேன்.. நீ வேணா அவளை பாத்துக்கோ உனக்கு கரெக்ட் ஆ இருக்கும் என ஒரு எள்ளல் நகைப்புடன் சொன்னான்.

இதை கேட்ட கிஷோருக்கு கோவம் வந்தது. ஒரு பக்கம் தன் தேவதை கலையின் மீது ராகுலின் பார்வை விழாதது மகிழ்ச்சியாக இருந்தாலும் பொருளாதாரத்தை வைத்து அவளை குறைத்து கூறியது அவனுக்கு கோவத்தை வரவழைத்தது.. என்ன கோவம் வந்தா என்ன.. எதிரே இருப்பது ராகுல் ஆச்சே.. வந்த கோவத்தை அப்டியே விழுங்கி கொண்டு அமைதியாக இருந்தான்.. போனது போகட்டும் இவன்கிட்ட இருந்து தான் கலையை பத்தி முழு விவரமும் தெரிஞ்சுக்கணும் என எண்ணி கொண்டான்.

கிஷோர்: ம்ம் இருந்தாலும் நல்ல பொண்ணு டா அது.. சரி உனக்கு அந்த பொண்ண பத்தி எந்த அளவு தெரியும் சொல்லு பாக்கலாம்..

ராகுல்: எனக்கு ஓரளவு தெரியும். நீ எதுக்கு கேக்குற

கிஷோர்: இல்ல உனக்கு நிஜமாவே அந்த பொண்ணு தெரியுமா இல்ல சும்மா உதார் விட்ரியா ன்னு தெரிஞ்சுக்க தான்..

ராகுல்: டியூட் சொல்றேன் கேட்டுக்கோ. அவ புல் நேம் கலை செல்வி, வயசு 24, MBA படிச்சுருக்கு, ஒரே பொண்ணு அவங்க அப்பா வேலை எதுவும் இல்லாம சும்மா இருக்காங்க, அவங்க அம்மா எங்களோட சூப்பர் மார்க்கெட் ல தான் ஒர்க் பன்றாங்க. என்ன சொன்னது எல்லாம் கரெக்ட் ஆ?

கிஷோர்: (மனதுக்குள் ஹீஹீ என வில்ல சிரிப்பு சிரித்துக்கொண்டு) பரவால்ல மச்சி எல்லாம் கரெக்ட் ஆ தான் சொல்ற.. உனக்கு தெரியும் ன்னு பாதி தான் சொல்ல முடியும்.

ராகுல்: ஜாதகம் தவிற எல்லாமே சொல்லிட்டேன்.. இன்னும் என்னடா பாதி தான் ன்னு சொல்ற

கிஷோர்: ஆமா முக்கியமான விசயத்த விட்டுட்டியே

ராகுல்: இன்னும் என்ன டா முக்கியமான விஷயம்

கிஷோர்: அந்த பொண்ணு லவ் பண்ணுதா இல்லையா ன்னு சொல்லலையே

ராகுல்: டேய்!! நீ தெரிஞ்சுக்கிட்டு என்னை செக் பண்றியா? இல்லை என்கிட்டே இருந்து விஷயத்தை வாங்குறியா??

கிஷோர்: என்ன மச்சி என்னை சந்தேக பட்ரியா.. இந்தா டா உன் வாட்ச் நீயே வச்சுக்கோ.. இன்னைல இருந்து நம்ம பிரண்ட்ஷிப் கட்.. (ஓவராக நடித்தான்)

ராகுல்: என்ன டியூட் இதுக்கு போய் இவ்ளோ எமோஷன் ஆகுற.. ஷாக் அ குற, ஷாக் அ குற..

கிஷோர்: சரி அப்போ சொல்லு நீ

ராகுல்: ம்ம்.. 1 வருசமா ஒரு பையனை லவ் பண்ணுது கரெக்ட் ஆ!!!

அவ்வளவு தான் கிஷோருக்கு நெஞ்சு வெடித்தது.
[+] 6 users Like manaividhasan's post
Like Reply


Messages In This Thread
RE: தாலி மட்டும் தான் கட்டினேன் - by manaividhasan - 07-04-2020, 02:19 PM



Users browsing this thread: 10 Guest(s)