Adultery வாடாத பூ மேடை.. !!
தன் அம்மா சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போய் நின்ற சுகன்யா.. இப்போது என்ன முடிவு எடுப்பது எனப் புரியாமல் குழம்பி நின்றாள். அவள் பார்வை என் மேல் கூர்மையாக  நிலைத்திருந்தது.. !!

நானும் எழுந்து நின்றேன். 
'' ஸாரி சுகு. இது உன் அம்மாவோட முடிவு மட்டும் இல்லை.  என் முடிவும்தான்.. !!'' என்று விட்டு நகர்ந்தேன்.

'' இரு.. இரு... என்ன முடிவு ??'' என்றாள்.

'' நாளைக்கு உயிரோட இருக்கற முடிவு.. !!''

'' அய்யோ... ஆண்டவா... '' என்றபடி.. அப்படியே மடங்கி தரையில் உட்கார்ந்து விட்டாள். நாங்கள் இரண்டு பேரும் ஒரே மாதிரி முடிவைச் சொன்னதை அவளால் ஏற்க முடியவில்லை. 
'' உன்ன நானும் லவ் பண்றேன் தெரியுமா.. ??'' என்று வேதனையுடன் முனகினாள்.

நகர்ந்து போன நான் சட்டென நின்றேன். 
'' நெஜமாவா.. ?? நீ எப்பவும் என்னை அண்ணா.. அண்ணானுதான கூப்புடுவ.. ??''

'' ஆமா.. சின்ன வயசுல இருந்தே உன்ன நான் அப்படித்தான் கூப்பிடறேன்.. !! ஆனா.. நான் உன்னை லவ் பண்றேனு என் பிரெண்ட்ஸ்க்கெல்லாம் சொல்லிருக்கேன்.. !!''

நான் அமைதியாக சில நொடிகள் அவளை வெறித்தேன். பின் மெதுவாக கேட்டேன்.
'' சரி.. சொல்லு இப்ப உன் முடிவு என்ன.. ??''

உட்கார்ந்து கொண்டிருந்தவள் தட்டென எழுந்தாள்.
'' எங்கம்மா கூட வச்சு பாத்தப்பறம்.. நான் எப்படி உன்னை லவ் பண்றது.. ??'' மீண்டும் அவள் குரலில் கோபம் தெரிந்தது.

'' சரி.. நீ என்னை லவ் பண்ண வேண்டாம். எனக்கு அந்த தகுதி இல்லை.  ஆனா.. உன் அம்மாவை உங்கப்பாகிட்ட போட்டு குடுக்க போறியா.. ??''

அவள் பதில் சொல்லவில்லை. மவுனமாக நின்றிருந்தாள். அவள் பார்வை என் மேல் கூர்மையாக ஊன்றியிருந்தது. அதே நேரம் பாத்ரூம் போன அனுராதா தலை மயிரை அள்ளி கொண்டை போட்ட படி வந்தாள்.. !!

'' சரி.. நீ உங்கப்பாக்கு போன் பண்ணி உடனே வரச் சொல்லிரு.. அப்படியே நம்ம சொந்தக் காரங்களுக்கு எல்லாம் தகவல் குடுக்க சொல்லிரு.. !!''

'' ஐய்யோ.. அம்மா... என்ன பேசுற நீ.. ?? நீ இல்லாம நான் எப்படி வாழ்வேன். சத்தியமா என்னால முடியாது.!  உன் மேல கோபம்தான்.. அதுக்காக.. உன்னை சாக விடமாட்டேன்.. !!'' என்று பாய்ந்து போய் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டாள் சுகன்யா.

அனு தன் மகளை வாரி அணைத்துக் கொண்டாள். சுகன்யாவின் முகம் முழுவதும் முத்தம் கொடுத்தாள். அம்மாவின் பாசத்தில் உருகிப் போனாள் சுகன்யா.

'' அம்மாக்கு நீ ஒரு சத்தியம் பண்ணிக் குடு.. !!''

'' எ.. என்ன சத்தியம்.. ??''

'' நீ இப்போ பாத்ததை உயிர் இருக்கறவரை யாருக்கும் சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணு..! அதே மாதிரி நானும் உனக்கு ஒரு சத்தியம் பண்ணி தரேன்.. உனக்கு புடிச்சவனை லவ் பண்ணிக்கோ.. கல்யாணம் பண்ணிக்கோ.. ஏன்.. இன்னும் யாரை புடிச்சிருக்கோ.. யாருகூட சந்தோசமா இருக்க விரும்பறியோ.. இருந்துக்கோ..!! நான் உன் விஷயத்துல குறுக்கிடவே மாட்டேன். அம்மா உனக்கு புல் பர்மிசன் தரேன்.. !! என்ன சொல்ற.. ??''

நான் திகைத்துப் போய் நின்றிருந்தேன். அனு தன் மகளிடமே அந்த மாதிரி எல்லாம் சொல்வாள் என்று நான் எதிர் பார்க்கவில்லை.  அம்மா சொன்னதைக் கேட்டு சுகன்யாவும் குழம்பிப் போய் நின்றிருந்தாள்..!!

பத்து நிமிடம் அமைதியாக கரைய.. இறுதியாகச் சொன்னாள் சுகன்யா.. !!
'' நீ என் அம்மான்றதால உன்னை மன்னிக்கறேன். பட் இந்த நிருவை நான் மன்னிக்கவே மாட்டேன் ஜென்ம ஜென்மத்துக்கும்.. !! ஐ ஹேட் ஹிம்.. !!

- சுபம்.. !!


.
[+] 2 users Like Niruthee's post
Like Reply


Messages In This Thread
RE: வாடாத பூ மேடை.. !! - by enjyxpy - 16-04-2019, 09:31 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by enjyxpy - 23-04-2019, 01:07 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by enjyxpy - 27-04-2019, 12:52 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by enjyxpy - 28-04-2019, 05:45 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by enjyxpy - 02-05-2019, 09:38 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by enjyxpy - 07-05-2019, 09:28 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by enjyxpy - 08-05-2019, 02:10 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by enjyxpy - 11-05-2019, 07:05 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by enjyxpy - 14-05-2019, 01:01 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by enjyxpy - 19-05-2019, 06:13 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by enjyxpy - 24-05-2019, 05:29 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by kadhalan kadhali - 29-07-2019, 07:00 AM
RE: வாடாத பூ மேடை.. !! - by Niruthee - 04-02-2020, 11:56 PM



Users browsing this thread: 2 Guest(s)