Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
இரவு. நவநீதனும்.. அன்பும் காட்டுக்குள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். சிகரெட் புகைத்தபடி சொன்னான் அன்பு. 
'' மாப்பு.. பிரமி உன்னை லவ் பண்றானு நினைக்கறேன்டா.''
 திகைப்பாகப் பார்த்தான் நவநீதன்.
 '' என்னைவா.? என்னடா சொல்ற.?''
 '' உன்னை பத்தி மொதவே ஒரு தடவை என்கிட்ட விசாரிச்சா. அப்பறம் இன்னைக்கும் வந்து சீரியஸா விசாரிச்சிட்டு போனா ''
 '' என்ன விசாரனை ?'' 
'' நீ யாரையாவது லவ் பண்றியா இல்லையானு. '' 
'' நீ என்ன சொன்ன? '' 
'' நான் மொத சொல்லலை. ஆனா அவ விடாம நோண்டி நோண்டி கேட்டா.. அப்பறம் கடைசியா.. நீ உன் அத்தை பொண்ண லவ் பண்ணதையும் அவ உன்னை  பண்ணாததையும் சொன்னேன்..''
 '' சே.. அதெல்லாம் ஏன்டா சொன்ன? '' 
'' விட மாட்டேங்குறாடா ''
 '' போடா ''
 '' ஏன்டா.. நீயும் அவள லவ் பண்றியா ?''  
'' சேச்சே..நீ வேற.. ''
 '' பண்ணுடா என்ன தப்பு '' எனச் சிரித்தான் அன்பு.  ''என்ன ஒரு பிரச்சினைன்னா  அவள கிஸ்ஸடிக்கறப்ப அவ பல்லு மட்டும் கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணும். மத்தபடி அவ நல்ல பீசுதண்டா.. நீ தாராளமா சாப்டுக்கலாம் '' 
'' டேய்.. என்னடா பேசற நீ. ?''
 '' ரொம்ப நல்லவனாவே இருக்காதடா.. இந்த உலகம் வேற மாதிரி. அவளா வரப்ப உனக்கு என்ன. ? நீ அவள லவ் பண்ண வேண்டாம். சும்மா ஆசைக்கு பண்ணிக்கோ '' 
'' நீ திருந்தவே மாட்டியாடா ?'' 
'' நான் திருந்தி என்னடா பண்ண போறேன். ? பிரதமரா.? ஜனாதிபதியா.. இல்ல முதல....'' 
'' வெளங்கிருன்டா..! அது சரி.. பிரமி கேக்கறப்ப உன் ஸிஸ்டர் வீட்ல இல்லையா ?'' 
'' அது எப்படி உனக்கு தெரியும்.. ?'' 
'' சும்மா கேட்டேன்டா..'' என்றான் நவநீதன். பிரமிளா தனக்காக விசாரித்திருக்க மாட்டாள் என்பது தெளிவாகப் புரிந்தது..!!! 

பெட்டிக் கடையில் என்னவோ வாங்கிக் கொண்டிருந்தாள் ரேவதி. அவளை சைடில்தான் பார்த்தான் நவநீதன். அவளைப் பார்த்து விட்டு.. நிற்கலாமா போகலாமா என்கிற சின்ன தடுமாற்றத்துடன் அவன் தயங்கிக் கொண்டிருக்க.. அந்த சமயம் அவளே  திரும்பி அவனைப் பார்த்து விட்டாள். இனி பேசாமல் போக முடியாது.
நவநீதன் நிற்க.. கையில் சுருட்டிய பொட்டலத்துடன் அவனிடம் வந்தாள். நைட்டியில் இருந்தாள். மேலே ஒரு துண்டு. 
''நல்லாருக்கானா உன் பிரெண்டு ?''
''ம்ம்ம்.. '' தலையசைத்தான். '' நீ எப்படி இருக்க? ''
'' பாரு '' கைகளை நீட்டிக் காட்டினாள்.
தெரு விளக்கின் வெளிச்சத்தில் அவளைப் பார்த்தான். நன்றாகத்தான் தெரிந்தாள். மூக்கை தேய்த்து விட்டுக் கொண்டு கேட்டாள்.
'' என்னை பத்தியெல்லாம் பேசறானா ?''
மெதுவாகச் சொன்னான். ''இல்லக்கா ''
'' ம்ம்ம்.. ஒண்ணு நான் அழகானவளா பொறந்திருக்கனும்.. இல்ல.. இன்னும் சின்ன பொண்ணாவாவது இருந்திருக்கனும். ரெண்டுமே இல்ல.. முத்தின கத்திரிக்காதான..? இதுல சொத்தை வேற.. அப்பறம் எப்படி என் நினைப்பு வரும்..?'' குரலில் மிகவும் வருத்தம் இழையோடச் சொன்னாள்.
தெருவில் ஓடி வந்து கொண்டிருந்த ஒரு நாய் நின்று.. அவர்களை சந்தேகமாகப் பார்த்துவிட்டு மீண்டும் ஓடியது. இப்படி வழியில் நின்று பேசுவது அவனுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது.
'' சாப்டாச்சாடா ?'' ரேவதி உடனே அவனைப் பற்றிக் கேட்டாள்.
'' இல்லக்கா.. போய்த்தான். நீ ?''
'' ம்.. ஆச்சு. ! எங்கம்மாக்கு வெத்தலை பாக்கு வாங்க வந்தேன். ஆமா நீ இப்ப எங்க போய்ட்டு வரே.. இந்த நேரத்துல?''
'' காட்டுக்குக்கா.. '' அன்புவுடன் பேசிவிட்டு வருவதைச் சொல்ல வாய் வரவில்லை.
'' சரி.. அவனை நான் கேட்டேனு சொல்லு ''
'' ம்ம்ம். ''
'' அப்பறம்.. உன்கிட்ட எல்லாம் சொல்வானா ?''
'' என்னக்கா ?''
'' என்கூட பழகினது ? பேசுனது.. ?''
'' இல்லக்கா. அதெல்லாம் சொன்னதே இல்ல. ''
''சரி. வீட்டுக்கு வா.. உன்கிட்ட நிறைய பேசனும். ''
'' என்னக்கா ?''
'' இதப் பத்திதான். வேறென்ன. ? உனக்கு லீவ் இருக்கப்பா வா. !'' எனச் சிரித்து அவன் கையில் தட்டி விட்டுப் போனாள் ரேவதி.

ஏனோ அவளைப் பார்த்தாலே அவன் மனதில் ஒரு வருத்தம் வருவதைப் போலிருந்தது. மெதுவாக வீட்டை நோக்கி நடந்தான்..!!!

Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 17-01-2020, 10:10 AM



Users browsing this thread: 5 Guest(s)