Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சென்னை சாப்ட்வேர் என்ஜீனியர்களின் லட்சக்கணக்கான பணம் திருட்டு-
#2
பீகாரைச் சேர்ந்த 9 பெர் கொண்ட மோசடி கும்பல், சிறப்புக் கருவிகள் மூலம் கார்டு விவரங்களைத் திருடி கொல்கத்தாவில் இருக்கும் கூட்டாளிகள் மூலம் போலிக் கார்டுகள் தயாரித்து, பணத்தைத் திருடி உள்ளதை கண்டு பிடித்து உள்ளனர். இதையடுத்து அந்த 9 பேரையும் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்து அவர்களைத் தனித் தனியாக விசாரனை நடத்தியதாகவும் தெரிகிறது.
விசாரனையில், கொல்கத்தாவில் இருக்கும் கூட்டாளிகள் மூலம் போலியாக கார்டுகள் தயாரித்து, சென்னை ஐ.டி.ஊழியர்களிடம் இருந்து சுமார் 20 லட்சம் வரை பணம் எடுத்துள்ளனர். இந்த பணத்தை வைத்து பீகாரில் வீடு, நிலம் என சொகுசு வாழ்க்கைக்கு தயாராகி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அது மட்டுமின்றி திருடப்பட்ட வங்கி விவரங்களை வங்கி மோசடி கும்பலுக்கு, ஒரு கார்டுக்கு தலா பத்தாயிரம் என்று விற்பனை செய்துள்ள அதிர்ச்சி விவரமும் தெரிய வந்துள்ளது. இந்த வங்கி மோசடி கும்பல் டெல்லியில் இருப்பதாகவும் தெரிய வந்த நிலையில் இந்தியா முழுக்க பெரும் மோசடி வலையை விரிக்க உள்ள அந்த கும்பலை மாநில போலீசார் உதவியுடன் பிடிக்கவும் மத்திய போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
[img=0x0]data:image/svg+xml,%3Csvg%20xmlns%3D%22http%3A%2F%2Fwww.w3.org%2F2000%2Fsvg%22%20width%3D%22216%22%20height%3D%22288%22%3E%3C%2Fsvg%3E[/img]
பெருங்குடி மென்பொறியாளர்கள் சுமார் 200 பேரின் பணத்தை இவ்வாறு திருடியதாக குற்றவாளிகள் ஒப்புக் கொண்டதை அடுத்து, வங்கிக் குறியீட்டு ரகசிய எண்களை மாற்றிக்கொள்ள போலீசார் அறிவுறுத்தி உள்ளதோடு, கொள்ளையடித்த் பணதை மீட்டுத் தரும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு உள்ளனர்.

வங்கிக் கார்டுகளைப் பயன்படுத்துவோர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் உஷார் படுத்தி வருகின்றனர்.
Like Reply


Messages In This Thread
RE: சென்னை சாப்ட்வேர் என்ஜீனியர்களின் லட்சக்கணக்கான பணம் திருட்டு- - by peter 197 - 25-01-2019, 09:22 AM



Users browsing this thread: 1 Guest(s)