Posts: 572
Threads: 5
Likes Received: 2,189 in 922 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
09-11-2023, 12:11 AM
(This post was last modified: 05-12-2023, 10:57 PM by feelmystory. Edited 3 times in total. Edited 3 times in total.)
தோழியா... காதலியா...
இது ஒரு கற்பனை கதை
இந்த கதையில் வரும் பெயர்கள் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனை என்பதால் கதையை நிஜமான வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
வானில் இருக்கும் சூரியனின் கதிர்கள் பூமிக்குள் நுழைந்து பொழுது நன்றாக விடிந்ததும் கடற்கரையின் ஓரத்தில் நடை பயிற்சி செய்தவர்கள் உற்சாகத்துடன் அதை தொடர்ந்தனர்.
விடுமுறை தினமாக இருந்தாலும் சாலைகளில் நிறைய வாகனங்கள் நிரம்பி போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
எனக்கு எப்போதும் ஓய்வே இல்லை. எல்லா நாளும் இதேபோல் புத்துணர்ச்சியோடு இயங்குவேன் என்று கண்ணிற்கு காட்டியது அந்த மாநகரம்.
இப்படி எல்லோரும் சுறுசுறுப்புடன் இயங்கினாலும் அந்த ஊரில் வசிக்கும் நான் மட்டும் என்னுடைய வீட்டிற்குள் அறையில் இருக்கும் கட்டிலின் மீது அமைதியாக படுத்துக்கிடந்தேன்.
என் மனதிற்குள் கவலையும் சோர்வும் அளவுக்கு அதிகமாக இருந்ததால் மெத்தையில் இருந்து எழுவதற்கு மனமே இல்லை.
அப்போது...
“டிங். டா.ங்”
வீட்டிற்குள் காலிங் பெல்லின் ஓசை கேட்டது.
“காலங்காத்தால யாருடா வந்து இப்படி தொல்ல பண்ணுறது. ச்சை.”
அதிக சலிப்போடு மெத்தையில் இருந்து எழுந்து வெளியில் வந்தேன்.
“டிங். டா.ங். டிங். டா.ங்”
மீண்டும் காலிங் பெல்தான்.
“கொஞ்சம் பொறுங்க. நான் வந்துட்டே இருக்கேன்”
“டிங். டிங். டா.ங்ங்ங். டிங். டிங். டா.ங்ங்ங்”
விடாமல் தொடர்ந்து ஒலி எழுப்பியது.
“அதான் வந்துட்டு இருக்கேன்னு சொல்றேன்ல. என்ன அவசரம்.? ஏன் இத்தன தடவ பெல்ல அடிச்சு டென்ஷன் பண்ணுறீங்க.?”
நான் அதிக ஆவேசத்துடன் வாசல் கதவை திறந்தேன்.
அங்கே!
வாசலில்!
என் கண்முன்னே!
என்னுயிர் தோழி அபிராமி நின்றுக்கொண்டு இருந்தாள்.
அவளது கோதுமை நிற உடலுக்கு ஏற்றவாறு மஞ்சள் நிற டி ஷர்ட்டும் நீல நிறத்தில் ஸ்கர்ட்டும் போட்டுகொண்டு அழகாக இருந்தாள்.
மெல்ல அவளது முகத்தை நன்றாக பார்த்தேன்.
அவள் கண்கள் சிவக்க கடுங்கோபத்துடன் என்னை பார்த்து முறைத்தாள்.
திடீரென்று அபிராமியைப் பார்த்தவுடன் பதற்றத்துடன் பேசினேன்.
“அபி நீ நெஸ்ட் வீக் தான் வருவேன்னு சொன்னே! என்னடி திடீர்னு வந்துருக்கே?”
“ஏன்டா நாயே! ராத்திரி எத்தன தடவ கால் செஞ்சேன். ஒரு தடவ கூட உனக்கு எடுக்கனும்னு தோணவே இல்லையா?”
அபிராமி எதிர் கேள்வி கேட்டு திராட்சை விழிகளால் என்னை முறைத்தாள்.
“ஸாரி அபி”
அவள் என்னுடைய பேச்சை ஒரு பொருட்டாக நினைக்காமல் மீண்டும் பேசினாள்.
“அப்படி என்னடா உனக்கு என் மேல திடீர்னு புதுசா கோபம் வந்துருச்சு? சொல்லுடா”
அபிராமி மீண்டும் சத்தம் போட்டாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல அபி. நைட் உன்னோட கால் பாத்தேன். ஆனா திரும்ப பேசுறதுக்கு மறந்துட்டேன். ஸாரிடி”
“என்னது மறந்துட்டியா ? நீ இப்படியெல்லாம் நடந்துக்க மாட்டியே! ஏன்டா திடீர்னு மாறிட்டே?”
அபிராமி சொல்லிக் கொண்டே கண் கலங்கினாள்.
ஐயோ! நான் இவளை ஒருமுறைகூட ஆழ வைத்தது இல்லயே!
இன்று என்னை அறியாமலேயே அவளது மனதை நோகடித்து விட்டேன்.
நான் ஒரு முட்டாள்.
மனதிற்குள் என்னை நானே நன்றாக திட்டிக் கொண்டேன்.
“அபி தெரியாம செஞ்சுட்டேன். ப்ளீஸ்டி என்னைய மன்னிச்சிடு”
நான் அவளது கண்களை துடைத்தேன்.
“ரொம்ப நாளைக்கு அப்பறம் உன்னைய நேர்ல பாத்து பேசப்போறேன்னு ஆசையா கிளம்பி வந்தேன்டா. ஆனா கொஞ்சம் கூட என்னைய புரிஞ்சுக்காம ஆழ வச்சுட்டியேடா”
அபிராமி எனது கைகளைத் தட்டி விட்டாள். நான் விடவில்லை. மீண்டும் அவளது கண்களை துடைத்துக்கொண்டே கெஞ்சினேன்.
“அபி ப்ளீஸ்டி வெளியே நின்னு இப்படியெல்லாம் அழாத! ரோட்ல போறவங்க பாத்தா என்னைய தப்பா நினைப்பாங்க. உள்ள போலாம் வாடி”
இப்போது அவளுக்கு நான் சொன்ன சூழ்நிலை புரிந்ததும் மெதுவாக அழுகையை நிறுத்தினாள். பிறகு என்னிடம் எதுவும் பேசாமல் அமைதியாக வீட்டிற்குள் நுழைந்தாள்.
அபிராமி ஹாலில் இருக்கும் சோபாவில் சோகத்துடன் வந்து அமர்ந்ததும் நான் எதிரில் இருந்த நாற்காலியில் அவளுக்கு மிக அருகில் அமர்ந்து கொண்டேன்.
“எதுக்குடா நேத்து பேசாம இருந்தே? ஒழுங்கா சொல்லுடா?”
அபிராமி மீண்டும் கோபம் மாறாமல் கேட்டாள்.
“ப்ளீஸ் அபி! அத பத்தி இப்போ பேச வேணாமே”
“சரிடா அத விடு. திடீர்னு என் மேல அப்படி என்ன தான் கோவம்டா ? அத மட்டுமாவது சொல்லேன்”
“இல்ல அபி எனக்கு கோபமே இல்லடி. கொஞ்சம் அமைதியா இரு”
அவளை சமாதானம் செய்ய முயற்சித்தேன்.
“நீ வேலைக்கு போனதுல இருந்தே சரியில்லடா”
“ஏய். என்னடி சொல்லுறே”
“ஆமா! நான் எப்போ கால் செஞ்சாலும் அட்டென்ட் பண்ணி கொஞ்சம் நேரம் மட்டும் கடமைக்கு பேசிட்டு உடனே வச்சுடுறே. அதே மாதிரி நேத்து நைட் பாத்தா கால் அட்டென்ட் பண்ணாமயே இருந்துட்டே. உனக்கு என்ன ஆச்சுடா?”
அபிராமியின் கேள்வியில் அன்பும் பாசமும் அதிகமாக வெளிப்பட்டது.
“அபி வொர்க்ல கொஞ்சம் டென்ஷன் அதான் பேச முடியல. இனிமே உன்கிட்ட ஒழுங்கா பேசுறேன் ஸாரிடி”
“டேய். ஆஃபிஸ்ல முதல் ஆளா டார்கெட் முடிக்கிறதே நீதான்னு எனக்கு நல்லா தெரியும். எதுக்காக என்கிட்ட பொய் சொல்லி நடிக்கிறே ?”
“இல்ல அபி நான் நிஜமாதான் சொல்றேன். என்னைய நம்பு”
அபிராமி என் முகத்தை சில நொடிகள் எந்த வித சலனமும் இன்றி பார்த்தாள்.
“நீ ரொம்ப பெருசா எதையோ என்கிட்ட இருந்து மறைக்கிறேனு மட்டும் தெரியுது. ஆனா விஷயம் என்னனுதான் எனக்கு ஒழுங்கா புரியல”
அபிராமி ஒன்றும் புரியாமல் குழம்பினாள்.
“அபி அதெல்லாம் ஒன்னும் இல்லடி. நீ பெங்களூர்ல இருந்து எப்பவும் மாச கடைசிலதான் வருவே! ஆனா இன்னைக்கி திடீர்னு எப்படி வந்தே ?”
நான் என்னுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தி பேச்சை மாற்றினேன்.
“நான் அத சொல்றதுக்குதான் நேத்து நைட் கால் பண்ணேன். நீதான் அட்டென்ட் பண்ணலயே நாயே!”
“ஏய்! நீ இன்னொரு தடவ நாய்னு சொன்னே அப்படியே கடிச்சு வச்சுடுவேன்”
அவளை முறைத்தவாறு கொஞ்சம் சத்தமாக கத்தினேன்.
“ஹ்ம்ம் ஸாருக்கு ரொம்பத் தான் கோவம் வருது போல”
அபிராமி என்னை பார்த்து லேசாக புன்னகைத்தாள்.
“போடி லூசு”
“டேய்! பாட்டி வீட்டுக்கு போயி ரொம்ப நாள் ஆகிருச்சுடா. அதான் அம்மா இந்த வாரமே என்னைய ஊருக்கு வர சொல்லிட்டாங்க. நான் அத சொல்றதுக்குதான் உனக்கு நைட் கால் செஞ்சேன்டா”
“ஓஹோ அப்படியா!"
“என்ன நொப்படியா! நான் கால் செஞ்சா எடுக்கமாட்டேல. இனிமே என்கிட்ட எதுவும் பேசாத போடா”
இந்த முறை அபிராமிக்கு கோபம் இல்லை. அவள் என்னிடம் செல்லமாக சிணுங்கினாள்.
“ப்ளீஸ் அபி! தெரியாம அது மாதிரி செஞ்சுட்டேன். தயவு செஞ்சு மறந்துரு. இப்போ வேற ஏதாச்சும் பேசலாம்டி”
நான் வழக்கம்போல் கெஞ்சினாலும் அது நல்ல பலனை அளித்தது.
“ஓகே இப்போதைக்கு மட்டும் மன்னிச்சு விடுறேன். ஆனா எனக்கு திரும்ப டைம் கிடைக்கும். அப்போ உன்னைய நல்லா கவனிச்சுக்கிறேன். நீ ஒழுங்கா பொழைச்சுபோ”
அபிராமி அனைத்தையும் மறந்து அதிக புன்னகையுடன் சொன்னாள். அவள் கோபப்படுவதை நிறுத்திவிட்டாள் என்று தெரிந்தவுடன் மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
“ஹ்ம்ம். ஒகேடி” என்று நிம்மதி அடைந்தேன்.
“சரிடா கேக்கனும்னு நினைச்சேன். வீட்டுல யாருமே இல்லையா.?”
“அம்மாவும் அப்பாவும் ரிலேடிவ் ஒருத்தங்க கல்யாணத்துக்கு போயிருக்காங்க! நைட்தான் வருவாங்க.“
“ஓ சாப்பாடுலாம் எப்படிடா?”
“இன்னும் கொஞ்ச நேரத்துல ஹோட்டலுக்கு போயி சாப்பிட வேண்டியதுதான்”
“டேய்! ஹோட்டல் எதுக்கு ? அதான் நான் வந்துருக்கேன்ல. இருடா வீட்டுக்கு போயி கொண்டு வரேன்” என்று அபிராமி எழுந்தாள்.
“அதெல்லாம் வேணாம் அபி”
அவளது கைகளை பிடித்து உட்காருமாறு அமர்த்தினேன்.
“இப்படியெல்லாம் சொன்னே பல்ல உடச்சுடுவேன். நான் வீட்டுக்கு போயி டிபன் ரெடி பண்ணி எடுத்துட்டு திரும்ப இங்க வருவேன். நீ கண்டிப்பா சாப்பிடனும்”
அபிராமி செல்லமாக கோபப்பட்டு சொன்னதும் நான் அவளது கைகளை விடுவித்தேன்.
“டேய்! அதுக்கு முன்னாடி நீ ஒழுங்கா போயி குளிச்சுட்டுவா. உன்னோட கழுவாத மூஞ்சிய பாக்கவே முடியல”
அபிராமி என்னை பார்த்து கிண்டலாக சொல்லி சிரித்தாள்.
நானும் பதிலுக்கு புன்னகையுடன் சரி என்று தலை ஆட்டியதும் அவள் மகிழ்ச்சியுடன் நடந்து வெளியில் சென்றாள்.
நான் அபிராமி செல்லும் திசையை சோகத்துடன் பார்த்தேன்.
என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் அபிராமியிடம் என்னை அறியாமலேயே.
நேற்று இரவு கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டதை நினைத்து வருந்தினேன்.
அதன் பின் அவள் சொன்னபடி எழுந்து குளிப்பதற்கு சென்றேன்.
சில நிமிடங்களுக்கு பிறகு குளித்து உடைமாற்றி புத்துணர்ச்சியுடன் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தேன்.
அபிராமி இன்னும் வரவில்லை.
நான் என்னுடைய கடந்த கால நினைவுகள் சிலவற்றை மனதிற்குள் எண்ணி பார்க்க ஆரம்பித்தேன்...
Posts: 11,716
Threads: 1
Likes Received: 4,288 in 3,883 posts
Likes Given: 11,636
Joined: May 2019
Reputation:
23
Semma Interesting start nanba
•
Posts: 572
Threads: 5
Likes Received: 2,189 in 922 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
என் பெயர் விக்ரம்.
நான் சென்னையில் வசிக்கிறேன்.
என்னுடைய பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை.
இங்கே இருக்கும் கல்லூரியில் டிகிரி முடித்துவிட்டு ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறேன்.
இப்போது வந்து சென்ற என்னுயிர் தோழி அபிராமியும் நானும் ஒரே தெருவில்தான் வசிக்கிறோம்.
எங்கள் இருவரது தந்தையும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் சிறு வயதில் இருந்தே அபிராமி எனக்கு நல்ல பழக்கம்.
மேலும் அபிராமிக்கும் எனக்கும் சம வயது என்பதால் பள்ளி கல்லூரி என எல்லாம் நாங்கள் ஒன்றாகவே படித்து நல்ல நண்பர்கள் ஆனோம்.
அதன் பிறகு நாங்கள் இருவரும் டிகிரி முடித்ததுமே எங்கள் கல்லூரியில் நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில் கலந்துகொண்டு அதில் வெற்றியும் பெற்றோம்.
அப்போதுதான் எனக்கு பெரிய சிக்கலே தொடங்கியது.
இருவருக்கும் ஒரே நிறுவனத்தில் வேலை கிடைத்தாலும் எனக்கு சென்னையிலும் அபிராமிக்கு பெங்களூரிலும் போஸ்டிங் போட்டார்கள்.
அவளுக்கு அங்கே சித்தி வீடு இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னாள்.
வாழ்க்கையில் முதல் முறையாக என்னுயிர் தோழியை பிரியும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.
எங்கள் இருவருக்கும் கிடைத்தது நல்ல வேலை என்பதால் அபிராமியை தடுப்பதற்கு மனம் இல்லாமல் விட்டுவிட்டேன்.
அவளும் கவலையுடன் என்னை பிரிந்து சென்றாள்.
அந்த சோகத்துடன் இருக்கும்போது பணியில் சேர வேண்டிய நாள் வந்தது.
நான் வெறுப்புடன் வேலைக்கு சென்றேன்.
முதல் நாள் என்பதால் ஜாப் ட்ரைனிங் என்று ஒரு பெரிய அறையில் உட்கார சொன்னார்கள்.
நான் எனக்கு பிடித்த ஒரு இடத்தில் அமர்ந்து அருகில் இருந்தவர்களிடம் என்னை அறிமுகம் செய்துக்கொண்டேன்.
பிறகு டீம் லீடர் வருகைக்காக காத்திருந்தோம்.
அப்போது குயில் போன்ற இனிமையான குரல் என் காதில் ஒலித்தது.
“ஹலோ! எக்ஸ்க்யூஸ் மீ! நான் இங்க உட்காரலாமா ?”
மெதுவாக திரும்பிப் பார்த்தேன்.
எனக்கு மிக அருகில் காட்டன் சுடிதாருடன் ஒரு அழகிய மங்கை நின்றுகொண்டு இருந்தாள்.
அவளுக்கு சிவந்த நிற மேனி.
நீள் வட்ட முகம்.
அதில் கயல்போன்ற அழகிய விழிகள்.
பக்கத்தில் ஆப்பிள் போன்ற கன்னம்.
நடுவில் கூர்மையான நாசி.
லிப்ஸ்டிக் பூசாமலேயே சிவந்த அரஞ்சு சுளை போன்ற உதடுகள் என்று அவளை வர்ணித்துகொண்டே போகலாம்.
அவள் பச்சை வண்ண காட்டன் சுடிதாரில் அதிக சதை பிடிப்புடன் கும்மென்று அழகாக இருந்தாள்.
அந்த அழகிய பெண்ணுக்கு நெஞ்சில் இருக்கும் முலை பழங்களை பார்க்கும்போது பெரிய சைஸ் சாத்துக்குடியை போல் தெரிந்தது.
சுடிதாருக்குள் ப்ராவா இல்லை சிம்மீஸா என்று தெரியவில்லை.
உள்ளாடைக்குள் மறைந்திருந்த நெஞ்சு சதைகளை ஷால் போட்டு மூடி இருந்தாள்.
ஆனாலும் பக்கவாட்டில் கொஞ்சமாக தெரிந்த பழத்தை வைத்துதான் இதெல்லாம் கணித்தேன்.
அதற்கே ஜட்டிக்குள் இருந்த என்னுடைய தம்பி எழுந்துவிட்டான்.
அது மட்டும் இல்லாமல் அவளை பார்த்தவுடன் எனது நெஞ்சுக்குள் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறப்பது போன்ற சுகம் ஏற்பட்டு சந்தோசம் அடைந்தேன்.
திடிரென்று எனக்கு எதற்காக இப்படியெல்லாம் நடக்கிறது என்று சுத்தமாக புரியவில்லை.
ஆனால் எதிரே அறிமுகமே இல்லாமல் நிற்கும் பெண் மட்டும் என்னுடன் கடைசி வரை இருந்தால் எனது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று மனதில் தோன்றியது.
அப்போது மீண்டும் அவளது குயில் போன்ற குரல் ஒலித்தது.
“ஹலோ! நான் உங்களத்தான் கேட்டுட்டு இருக்கேன். ஆனா நீங்க சைலண்ட்டா இருக்கீங்க. உங்க பக்கத்துல இருக்குற சீட்ல வேற யாராச்சும் வந்து உட்கார போறாங்களா?”
இப்படி ஒரு அழகான பெண்ணை மிக அருகில் பார்த்தவுடன் மயங்கியது மட்டும் இல்லாமல் முட்டாள் தனமாக அமைதியாக இருந்துவிட்டேனே என்று மனதிற்குள் திட்டிக்கொண்டு அவளிடம் பேசினேன்.
“ஐயோ! இல்லைங்க யாரும் வரல! நீங்க உட்காருங்க”
அவள் என் முகத்தை குனிந்து பார்த்து புன்னகையுடன் அமர்ந்தாள்.
அப்போது சுடிதார் டாப்ஸ் கழுத்து வழியாக முலை பழங்களின் சிறிய பிளவுகள் தெரிந்தது.
என்னுடைய தம்பி ஜட்டிக்குள் செய்வதறியாது போராடினான்.
நான் கடினப்பட்டு அதை அடக்கிகொண்டேன்.
அது மட்டும் இல்லாமல் அந்த பெண் எனக்கு மிக அருகில் இருக்கும் சீட்டில் அமர்ந்ததும் உடலில் ஒரு வித நடுக்கமும் ஏற்பட்டது.
நான் எனது உயிர் தோழி அபிராமியுடன் பேசி பழகும் போது ஒரு முறை கூட அவளை தவறாக பார்க்க வேண்டும் என்று எண்ணியதில்லை.
ஆனால் இவளை பார்த்தவுடன் காமம் பயம் எல்லாம் ஒன்றாக வருகிறதே!
ஒருவேளை அறிமுகம் இல்லாத பெண் என்பதாலா ?
இல்லை! நிச்சயமாக அப்படி இருக்காது.
ஏனென்றால் கல்லூரியில் நான் நிறைய பெண்களும் சகஜமாக பேசி பழகியிருக்கிறேன்.
அப்போது எல்லாம் எனக்கு இது மாதிரி எந்த உணர்வும் வந்ததே இல்லை.
பிறகு எதற்காக இவளிடம் மட்டும் பேசுவதற்கு தயக்கமாக இருக்கிறது என்று யோசித்தேன்.
ஆனால் நான் பயந்து நடுங்குவது அவளுக்கு தெரியக்கூடாது என்று முடிவு செய்து பேச முயற்சித்தேன்.
“ஹாய்! உங்க நேம் என்ன ?”
இது நான் கேட்கவே இல்லை.
நான் பேசுவதற்கு முன்பாக அவளே மீண்டும் பேச்சை ஆரம்பித்தாள்.
உடனே எனக்கு கொஞ்சம் பயம் விலகியது.
தைரியமாக நானும் அவளிடம் பேசினேன்.
“ஐ ஆம் விக்ரம். உங்க பேரு என்ன ?”
“ஹ்ம்ம் நைஸ் நேம். என்னோட பேரு மஹாலட்சுமி”
அவள் சொல்லிவிட்டு லேசாக புன்முறுவல் செய்தாள்.
“என்னங்க ரொம்ப பழைய பேரா இருக்கு” என்று சிரித்தேன்.
“பச்ச்... அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. இது என்னோட பாட்டி பேரு. அவங்க நினைவாதான் என்னோட அப்பா இந்த பேர எனக்கு வச்சாங்க”
அவள் குரலில் கொஞ்சம் சுரத்தை இல்லாமல் பதில் சொன்னாள்.
எனக்கு நிஜமாகவே மஹாலட்சுமி என்கிற பெயர் பிடித்துவிட்டது.
ஆனாலும் விளையாட்டாக சொன்னது வினையாக மாறிவிட்டதே என்று பதற்றம் அடைந்தேன்.
“உங்க நேம் ரொம்ப நல்லா இருக்குங்க. நான் ஏதோ விளையாட்டுக்கு சொல்றதா நினைச்சு தெரியாம பேசிட்டேன். வெரி வெரி ஸாரிங்க”
“இட்ஸ் ஓகே விக்ரம். இன்னும் எதுக்கு வாங்க போங்கன்னு பேசிட்டு இருக்கீங்க? ஒரே ஆஃபிஸ்லதானே ஒர்க் பண்ணபோறோம். சாதாரணமா பேசுங்க. அதான் எனக்கு பிடிக்கும்”
“ஓகே இனிமே நார்மலா பேசுறேன் மஹா!”
என்னை அறியாமல் அவளது பெயரை சுருக்கி அழைத்ததும் சிரித்தாள்.
“ஹ்ம்ம் சரி உன்னைய பத்தி சொல்லு விக்கி!”
பதிலுக்கு அவளும் என்னுடைய சிறிய பெயரை இன்னும் சிறிதாக சுருக்கி அழைத்ததும் உடலுக்குள் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்து உற்சாகத்தை அளித்தது.
உடனடியாக அவளிடம் என்னை பற்றி முழுவதுமாக சொல்லி முடித்தேன்.
“ஏய்! விக்ரம் நீ சென்னை பையனா?”
“ஐயோ! இல்லையே! நான் என்னோட அம்மா அப்பாவுக்கு ஒரே பையன்”
“ஹா… ஹா… ஹா… ரொம்ப நல்லா பேசுறே. எனக்கு உன்னோட ஹ்யூமர் சென்ஸ் பிடிச்சுருக்கு”
“ரொம்ப தேங்க்ஸ் மஹா. நீ இப்போ உன்னைய பத்தி சொல்லு”
“ஓ அப்படியா! என்ன தெரியனும் ? கேளு சொல்றேன்” என்று சிரித்தாள்.
“ஹ்ம்ம் நீ எங்க படிச்சே? உன்னோட நேட்டீவ் சென்னையா ?”
“நான் படிச்சது சென்னைதான். ஆனா என்னோட சொந்த ஊரு மதுரை”
“அப்போ டெய்லி எங்க இருந்து வருவே?”
“இங்க இருந்து தான் வருவேன். இதுக்காக டெய்லி மதுரைக்கு போயிட்டா வர முடியும்” என்று புன்னகைத்தாள்.
“நீயும் செம காமெடியா தான் பேசுறே. ஆனா நான் அத கேட்கல. நீ இந்த ஊர்ல எங்க தங்கி இருக்கேனு கேட்டேன்”
“விக்ரம்! நீ எதுக்கு அதெல்லாம் கேக்குறே ?” என்று தயங்கினாள்.
“இல்ல மஹா. இந்த ஊர்ல கேள்ஸ் ரொம்ப சேஃப்டியா இருக்கணும். அதான் எங்க தங்கி இருக்கேனு தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்”
“ஹ்ம்ம் ரொம்ப அக்கறையோட பேசுறியே! சொல்லாம இருந்தா விடமாட்டியோ ?”
“ஆமா விடமாட்டேன் மஹா. என்ன பத்தி கேட்டதும் சொன்னேன்ல. அதே மாதிரி நீயும் கண்டிப்பா சொல்லித் தான் ஆகணும்”
மஹாலட்சுமியிடம் பேசி சில நிமிடங்கள் தான் ஆகிறது. அதற்குள் எப்படி இவ்வளவு சகஜமாக பேசுகிறேன்?
அவள் என்னை எதுவும் தவறாக நினைத்து விடுவாளோ என்கிற பயமும் மனதிற்குள் வந்து போனது.
“ஓகே விக்கி! நோ ப்ராப்ளம்! நானே சொல்றேன்” என்று புன்னகைத்தாள்.
மஹாலட்சுமி அப்படி சொன்னதுமே என்னிடம் பேசி பழகுவது அவளுக்கும் பிடித்திருக்கிறது என்கிற விஷயத்தை அறிந்தேன்.
உடனடியாக மனதில் இருக்கும் பயத்தை முழுவதுமாக தூக்கி எறிந்தேன்.
“ஹ்ம்ம் சொல்லு மஹா”
“நான் ஆஃபிஸ் பக்கத்துல இருக்குற ஒரு லேடீஸ் ஹாஸ்டல்ல என்னோட ஃபிரண்ட்ஸ் கூட ஸ்டே பண்ணிருக்கேன். டெய்லி அங்க இருந்து தான் வருவேன்”
மஹா சொல்லிவிட்டு அழகாக கண்களை சிமிட்டி புன்னகைத்தாள்.
“ஹ்ம்ம். உன்னோட ஃப்ரெண்ட்ஸும் இங்கதான் வொர்க் பண்ணுறாங்களா?”
“இல்ல விக்கி. அவங்க எல்லாரும் வேற ஆஃபிஸ்ல வொர்க் பண்றாங்க. இங்க நான் மட்டும்தான் தனியா வந்து மாட்டிக்கிட்டேன்"
“மஹா. என்னோட ஃப்ரெண்ட்டுக்கும் வேற ஊர்ல ஜாப் கிடச்சு போனதுனால இப்படிதான் நானும் ஃபர்ஸ்ட் கவலையோட இருந்தேன். என்ன பண்றது எல்லாத்தையும் ஏத்துகிட்டு நாம வாழ கத்துக்கணும்னு இன்னைக்கிதான் புரிஞ்சுக்கிட்டேன். ஆனா நீ எதுக்கு இப்படி ஃபீல் பண்ணுறே. உனக்குதான் ஹாஸ்டல்ல ஃபிரண்ட்ஸ் இருக்குறாங்கலே. டேக் இட் ஈசி”
“என்ன விக்கி. ஏதோ அறிவுரையாளர் மாதிரி பெரிய ஸ்பீச் கொடுக்குறே” என்று சிரித்தாள்.
“நான் எல்லார்கிட்டயும் இப்படி பேசுனது இல்ல மஹா. எனக்கு யார் மேலயாச்சும் எனக்கே தெரியாம ஒரு அஃபெக்ஸன் வந்துச்சுனா. இது மாதிரி ஏதாச்சும் உளறிக்கிட்டு இருப்பேன். பிடிக்கலன்னா சொல்லு இனிமே பேசமாட்டேன்”
“ஹையோ! விக்கி. நீ நல்லா பேசுறேன்னு சொல்றதுக்கு பதிலா தெரியாம அப்படி சொல்லிட்டேன். நீ இதே மாதிரியே பேசு. யாருக்காகவும் உன்னோட கேரக்டர சேஞ்ச் பண்ணக்கூடாது ஓகே?"
“ஓகே மஹா. சேஞ்ச் பண்ணமாட்டேன்" என்று நானும் புன்னகைத்தேன்.
“அப்புறம் வேற என்ன தெரியணும்" என்று வினாவினாள்.
“ஹ்ம்ம் உங்க வீட்ல எத்தன பேரு மஹா? அவங்கலாம் மதுரைலதான் இருக்காங்களா?”
“அம்மா அப்பா மதுரைலதான் இருக்குறாங்க. அப்பறம்”
“என்ன அப்பறம்.?”
“நானும் வீட்டுக்கு ஒரே பொண்ணு தான்”
அவள் சொல்லி விட்டு என்னையே பார்த்தாள்.
“சூப்பர்ப் மஹா. நாம ரெண்டு பேருமே ஒரே கேட்டகிரிதான்” என்று கையை நீட்டினேன்.
மஹாலட்சுமி தயக்கத்துடன் அவளது கையை எனது கைக்கு அருகில் எடுத்து வந்தாள்.
அப்போது லேசாக அவளது வெண்டைக்காய் விரல்கள் என்னுடைய உள்ளங்கையை தீண்டியது.
அந்த நொடி எனக்கு உடலில் இருக்கும் ரத்த நாளங்கள் அனைத்தும் கொதித்து எழுவதுபோல் இருந்தது.
அந்த உணர்வோடு அவளது கையை இறுக்கமாக பற்றிவிட்டு வேகமாக கைகளை விலக்கிக்கொண்டேன்.
மஹாலட்சுமியும் வேகமாக அவளது கைகளை என்னிடமிருந்து எடுத்துவிட்டு கொஞ்சம் வெட்கத்துடன் அமர்ந்திருந்தாள்.
எல்லாம் நன்றாக போய்கொண்டு இருந்தது.
ஆனால் நான் அறியாமல் ஒரு தவறை செய்துவிட்டேன்.
என்னுடைய இடது பக்க முழங்கையை தெரியாமல் நகர்த்தும் போது மஹாவின் வலது பக்க முலை பழத்தில் லேசாக உரசிவிட்டது.
பஞ்சு மூட்டை போல் ஏதோ கையில் இடிக்கிறதே என்று நினைத்து கவனித்தேன்.
மஹா ஷாக் அடித்தது போல் துள்ளிவிட்டு என்னை பார்த்தாள்.
வேகமாக என்னுடைய முழங்கையை நகர்த்தினேன்.
நல்லவேளை வேறு யாரும் பார்க்கவில்லை.
“நான் நிஜமாவே தெரிஞ்சு பண்ணல. எனக்கே தெரியாம நடந்துடுச்சு. வெரி ஸாரி மஹா”
நான் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு அவளைப் பார்த்தேன்.
சில நொடிகள் என் கண்களை மஹா உற்று நோக்கினாள்.
அதைப் பார்த்தவுடன் அவளுக்கு நான் தவறு செய்யவில்லை என்று தோன்றியிருக்கும் என்று நினைக்கிறேன்.
“விக்ரம். இட்ஸ் ஒகே. எனக்கு புரியுது. ரிலாக்ஸ்”
அவள் என்னை பார்த்து லேசாக உதட்டை அசைத்து புன்முறுவல் செய்துவிட்டு சகஜம் அடைந்தாள்.
குயில் போன்ற இனிமையான குரலில் மஹாலட்சுமி பேசிய வார்த்தைகளை கேட்டதும் எனக்கு உடம்பில் இருக்கும் ரோமங்கள் அனைத்தும் சிலிர்த்தது.
அவள் என்னை திட்டாமல் நன்றாக பழகிய பெண் போல் அன்பாக பேசுகிறாளே எப்படி இது சாத்தியம்?
முதல் சந்திப்பிலேயே அவளுக்கு என்னை பிடித்துவிட்டதோ?
இது போல் கேள்விகள் மனதில் எழுந்தவுடன் அபிராமி போல் மஹாலட்சுமியும் எனக்கு ஒரு நல்ல தோழியாக இருக்க வேண்டும் என்று ஏங்கினேன்.
மேலும் முதல் நாளே எங்கள் இருவரின் உள்ளத்திலும் ஏதோ ஒரு புதிய உணர்வு வந்திருக்கலாம் என்று தோன்றியது.
நிச்சயமாக இது காதல் உணர்வாகத்தான் இருக்கும் என்று ஆணித்தனமாக நம்பினேன்.
இதை மஹாவிடம் எப்படி உடனடியாக சொல்வது?
அப்படியே தைரியமாக சொன்னாலும் என்னை தவறாக நினைத்துவிடுவாளே என்று பயந்து மனதில் எழுந்த ஆசைகளை அடக்கிக்கொண்டேன்.
அப்போது சரியாக எங்களுக்கான டீம் லீடர் வந்து பேச ஆரம்பித்தார்.
மஹாவும் நானும் மீண்டும் பேசுவதற்கு சரியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
அன்று மதியம் ஆஃபிஸ் கேஃபடீரியாவில் நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து மதியை உணவை சாப்பிட்டோம்.
அந்த நேரத்தில் உடன் வேலை பார்ப்பவர்கள் இருந்த காரணத்தால் அவளிடம் அதிகமாக பேசமுடியவில்லை.
இப்படி பேசாமல் இருந்தாலும் அந்த ட்ரைனிங் முடிந்த வார இறுதியில் நான் கேட்காமலேயே மஹாலட்சுமி அவளது மொபைல் எண்ணை எனக்கு கொடுத்து இன்ப அதிர்ச்சி தந்தாள்.
அதற்கு அடுத்து வந்த நாட்களில் அவளும் நானும் இரவு நேரத்தில் சாட்டிங் செய்வது ஆஃபிஸ் வந்ததும் நட்பு ரீதியாக பேசிக்கொள்வது என நல்லபடியாக வாழ்க்கை சென்றுக்கொண்டிருந்தது.
ஆனால்! திடீரென்று ஒரு பிரச்சனை ஆரம்பம் ஆனது...
Posts: 109
Threads: 0
Likes Received: 44 in 40 posts
Likes Given: 2
Joined: Nov 2020
Reputation:
0
சிறந்த எழுத்து நடை....
உவமைகள் அற்புதம்.....
திருப்பம்...
•
Posts: 11,716
Threads: 1
Likes Received: 4,288 in 3,883 posts
Likes Given: 11,636
Joined: May 2019
Reputation:
23
மிகவும் அழகான கதையை தொடங்கியதற்கு நன்றி நண்பா நன்றி
•
Posts: 572
Threads: 5
Likes Received: 2,189 in 922 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
(09-11-2023, 06:06 AM)omprakash_71 Wrote: Semma Interesting start nanba
மிக்க நன்றி நண்பரே!
•
Posts: 572
Threads: 5
Likes Received: 2,189 in 922 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
(10-11-2023, 12:57 AM)Tamilmathi Wrote: சிறந்த எழுத்து நடை....
உவமைகள் அற்புதம்.....
திருப்பம்...
மிக்க நன்றி நண்பரே!
•
Posts: 1,074
Threads: 1
Likes Received: 422 in 321 posts
Likes Given: 34
Joined: Feb 2019
Reputation:
7
கதாநாயகன் விக்ரம், கதாநாயகி-1 அபிராமி கதாநாயகி-2 மஹாலட்சுமி.
ஒரு கொடியில் இரு மலர்கள் ! வரவிருக்கும் ஒரு நீண்ட கதைக்கு இப்போது நல்ல அஸ்திவாரம் போட்டாச்சு !
சுவாரஸ்யமான நடை ! யதார்த்தமான பின்னணி ! தொடருங்க அடுத்த பாகத்தை
•
Posts: 572
Threads: 5
Likes Received: 2,189 in 922 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
(10-11-2023, 06:56 PM)raasug Wrote: கதாநாயகன் விக்ரம், கதாநாயகி-1 அபிராமி கதாநாயகி-2 மஹாலட்சுமி.
ஒரு கொடியில் இரு மலர்கள் ! வரவிருக்கும் ஒரு நீண்ட கதைக்கு இப்போது நல்ல அஸ்திவாரம் போட்டாச்சு !
சுவாரஸ்யமான நடை ! யதார்த்தமான பின்னணி ! தொடருங்க அடுத்த பாகத்தை
கதைக்கு விரிவான கருத்து தெரிவித்து ஆதரவு தருவதற்கு நன்றி நண்பரே!
•
Posts: 572
Threads: 5
Likes Received: 2,189 in 922 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
அபிராமி பெங்களூருக்கு சென்ற பிறகு இரண்டு மாதத்திற்கு ஒரு முறையே சென்னை வந்து என்னை சந்தித்துவிட்டு செல்வாள்.
நான் மஹாவின் அறிமுகத்திற்கு பிறகு அபியுடன் போனில் எப்போதாவது மட்டும்தான் பேச முடிந்தது.
ஆனாலும் எங்களது நட்பும் நல்லபடியாக தொடர்ந்தது. நானும் மஹாவும் வேலைக்கு சேர்ந்து ஆறு மாத காலம் நல்ல படியாக முடிந்தது.
எப்படியாவது அவளை அபிராமியிடம் அறிமுகம் செய்துவைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு சென்ற மாதத்தில் ஒருநாள் அவள் சென்னைக்கு வந்தபோது மஹாலட்சுமியை என்னுடைய வீட்டிற்கு அழைத்தேன்.
தினமும் வேலை முடிந்ததும் ஹாஸ்டலுக்கு செல்வது மஹாவுக்கு கொஞ்சம் அழுத்துப்போனது.
ஒரு மாற்றத்திற்காக என் வீட்டிற்கு வருவதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு எனக்காக வந்தாள்.
அவளை என்னுடைய பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைத்தேன்.
மஹாவை பார்த்ததும் அவர்களுக்கு நன்றாக பிடித்துவிட்டது. இனி அபிராமியிடம் அறிமுகம் செய்யலாம் என்று அவளையும் வீட்டிற்கு வர சொன்னேன்.
“அபி! இவதான் என்னோட ஃப்ரெண்ட் மஹாலட்சுமி” .
“அப்போ நான் யாருடா?”
அபிராமி கேட்டுக் கொண்டே என்னை பார்த்து முறைத்தாள். உடனே மஹாவின் முகம் வாடிப் போனதைக் கவனித்தேன்.
“லூசு. நீங்க ரெண்டு பேருமே என்னோட ஃப்ரெண்ட்ஸ் தான்” என்று சமாளித்தேன்.
நான் சொன்னதை கேட்டு இருவரும் சிரித்துவிட்டு மகிழ்ச்சியுடன் கைகொடுத்து பேச ஆரம்பித்தார்கள்.
அதன்பிறகு நாங்கள் மூவரும் அன்று முழுவதும் நன்றாக ஊரை சுற்றினோம்.
அபிராமி வழக்கம்போல் என்னுடன் கைகளை கோர்த்தபடி சிரித்த முகத்தோடு பேசிக்கொண்டே வந்தாள்.
மஹாலட்சுமியால் அதிகமாக பேச முடியவில்லை.
அவளது முகத்தில் ஏக்கம் இருப்பதை கவனித்தேன். இதை அபிராமியிடம் எப்படி சொல்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தேன்.
அன்று மாலை அபிராமியை பெங்களூர் பஸ்ஸில் ஏற்றிவிட்டு. மஹாலட்சுமியை பைக்கில் ஹாஸ்டலுக்கு சென்று விட்டுவிடலாம் என்று நினைத்தேன்.
ஆனால் அபி செல்வதற்கு முன்பே மஹா வேறு ஒரு வேலை இருப்பதாக கூறிவிட்டு என்னை பிரித்து அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றுவிட்டாள்.
இதை பற்றி அபிராமியிடம் ஒன்றும் கூறவேண்டாம் என்று முடிவு செய்து அந்த விஷயத்தை சொல்லாமல் அவளை பஸ்ஸில் அனுப்பிவிட்டு சோகத்துடன் வீட்டிற்கு திரும்பினேன்.
இனிமேல் மஹாலட்சுமி என்னுடன் பேசாமல் இருந்துவிடுவாளோ என்று பயந்தேன்.
அடுத்த நாள் ஆஃபிஸ் சென்றதும் நான் நினைத்தது போலத்தான் நடந்தது.
மஹா என்னுடன் நெருங்கி பழகுவதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்தாள்.
செல்லமாக விக்கி என்று கூட அழைப்பதை நிறுத்திவிட்டு விக்ரம் என்று மட்டுமே அழைத்து கடமைக்கு பேசினாள்.
அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முழுவதுமாக பேச்சே இல்லாமல் போனது.
அபிராமி மஹாலட்சுமி இருவரிடமும் வெளிப்படையாக பேச முடியாமல் எதுவோ என்னுடைய மனதிற்குள் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டு இருந்தது.
அது என்ன என்று கண்டுபிடிப்பதற்குள் ஆபிசில் ஒரு அறிவிப்பு வந்தது.
அமெரிக்காவில் இருக்கும் எங்கள் கம்பேனியின் ஹெட் ஆபிசில் ஆன்சைட் வேலைக்கு செல்வதற்காக. ஐந்து பேரில் ஒருவராக என்னுடைய பெயரையும் தேர்ந்தெடுத்து மகிழ்ச்சி அளித்தனர்.
அங்கு சென்றால் இரண்டு வருடத்திற்கு பிறகுதான் மீண்டும் சென்னை வரமுடியும் என்பதையும் கூறி அதிர்ச்சி தந்தனர்.
அதோடு எவருக்குமே எளிதில் கிடைக்காத ஒன்று உனக்கு கிடைத்திருக்கிறது.
இந்த வாய்ப்பை விட்டுவிடாதே என்று பலர் எனக்கு அறிவுரை வழங்கினார்கள்.
எனக்கு மஹாவை பிரிவதற்கு மனம் இல்லை என்பதால் அமெரிக்கா செல்வதற்கு விருப்பம் இல்லையென்று சொல்லிவிட்டு என்னை தேடி வந்த வாய்ப்பை நானே நழுவ விட்டேன்.
மஹாலட்சுமி உட்பட அனைவருமே என்னை முட்டாள்தனமான காரியம் செய்துவிட்டதாக நன்றாக வசைப்பாடினார்கள்.
நான் எதற்கும் அசரவே இல்லை.
நான் கூடிய விரைவில் மஹாலட்சுமியிடம் எனது காதலை தெரிவித்து அவளது மனம் சஞ்சலப்படாமல் நடந்துக்கொள்ள வேண்டும் என்று மட்டும் நினைத்துவிட்டு தைரியமாக இருந்தேன்.
அப்போது விதி என் வாழ்க்கையில் வேறு ரூபத்தில் விளையாடியது.
நான் வாய்ப்பை நழுவ விட்டதால் எனக்கு அடுத்தபடியாக இருந்த மஹாலட்சுமியிடம் அது வந்து சேர்ந்தது.
அவள் நிச்சயமாக செல்லமாட்டாள் என்று உறுதியுடன் இருந்தேன்.
ஆனால் என்னுடைய இதயத்தையே பிய்த்து எறிவதுபோல் அவள் அமெரிக்கா செல்வதற்கு சம்மதம் தெரிவித்த செய்தி என் காதில் வந்து விழுந்தது.
“என்ன மஹா! என்னைய விட்டு போறியா?”
அவளிடம் தயக்கதுடன் கேட்டேன்.
“ஆமா விக்ரம். இந்த மாதிரி போறதுக்கு எல்லாருக்கும் அமையாது. நீதான் முட்டாள்தனமா இருந்துட்டே. அதுக்காக நானும் அப்படி இருப்பேன்னு நினைச்சியா?”
அவளது வார்த்தைகள் அனைத்தும் தீ குழம்புபோல் என் நெஞ்சில்பட்டு வலியால் துடித்தேன்.
இனி எனக்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை.
காதலிக்கிறேன் என்று சொல்வதற்கும் தைரியம் வரவில்லை.
நான் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு போலியாக சிரித்துவிட்டு பேசினேன்.
“இட்ஸ் ஓகே மஹா! ஆல் தி பெஸ்ட்” என்று மட்டும் சொன்னேன்.
“தாங் யூ விக்ரம்”
அவளும் கடமைக்கு கூறிவிட்டு என்னிடம் இருந்து விலகி சென்றாள்.
நான் அந்த சோகத்துடன் வீட்டிற்கு வந்தேன்.
அப்போது எனது பெற்றோர்கள் உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு செல்வதாக என்னிடம் கூறிவிட்டு கிளம்பி சென்றார்கள்.
அவர்கள் சென்றதும் மஹாலட்சுமியை மனதில் நினைத்து தனிமையில் அழுது புலம்பினேன்.
அந்த நேரத்தில்தான் அபிராமியிடம் இருந்து நிறைய கால்ஸ் வந்தது.
நான் மஹாலட்சுமியை நினைத்து தவித்துக்கொண்டிருந்த காரணத்தால் எதையுமே அட்டென்ட் செய்ய பிடிக்காமல் போனை சைலன்டில் போட்டுவிட்டு அப்படியே பெட்டில் படுத்தேன்.
இரவு முழுவதும் மெத்தையில் கவலையுடன் படுத்து இருந்தேன்.
பிறகு எப்போது தூங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை.
அதிகாலை பொழுதில் ரோட்டில் செல்லும் வாகனங்களின் சத்தம் கேட்டதும் சட்டென்று விழித்துக்கொண்டேன்.
பெட்டில் இருந்து எழுவதற்கே மனம் இல்லாமல் படுத்து கிடந்த போதுதான் வாசலில் அபிராமி அடித்த காலிங் பெல் சத்தம் எனக்கு கேட்டது.
நான் இப்போது பழைய ஞாபகங்கள் அனைத்தையும் நினைத்து பார்த்துவிட்டு வாசலை பார்த்தேன்.
அங்கே என்னுயிர் தோழி அபிராமி சிரித்த முகத்துடன் வீட்டிற்குள் நுழைந்தாள்...
Posts: 11,716
Threads: 1
Likes Received: 4,288 in 3,883 posts
Likes Given: 11,636
Joined: May 2019
Reputation:
23
Semma Interesting Update Nanba super
•
Posts: 572
Threads: 5
Likes Received: 2,189 in 922 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
(11-11-2023, 05:26 AM)omprakash_71 Wrote: Semma Interesting Update Nanba super
மிக்க நன்றி நண்பரே!
•
Posts: 1,074
Threads: 1
Likes Received: 422 in 321 posts
Likes Given: 34
Joined: Feb 2019
Reputation:
7
அபிராமி தேடி வருகிறாள் ! மகாலட்சுமி ஓடிப் போகிறாள் ! விக்ரம் விரக்தியில் இருக்கிறான் !
நல்ல கதை ! நல்ல நடை ! நடுவே ஒரு சஸ்பென்ஸ் ! அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். தொடரட்டும்
•
Posts: 166
Threads: 0
Likes Received: 71 in 50 posts
Likes Given: 84
Joined: Sep 2019
Reputation:
0
•
Posts: 572
Threads: 5
Likes Received: 2,189 in 922 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
(11-11-2023, 12:51 PM)Kartikjessie Wrote: Wonderful start
மிக்க நன்றி நண்பரே!
•
Posts: 572
Threads: 5
Likes Received: 2,189 in 922 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
(11-11-2023, 12:23 PM)raasug Wrote: அபிராமி தேடி வருகிறாள் ! மகாலட்சுமி ஓடிப் போகிறாள் ! விக்ரம் விரக்தியில் இருக்கிறான் !
நல்ல கதை ! நல்ல நடை ! நடுவே ஒரு சஸ்பென்ஸ் ! அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். தொடரட்டும்
மிக்க நன்றி நண்பரே!
•
Posts: 572
Threads: 5
Likes Received: 2,189 in 922 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
நான் மஹாலட்சுமியின் பிரிவை நினைத்து மீண்டும் சோகத்தில் மூழ்கிய வேளையில் அபிராமி காலை உணவை எடுத்து வந்து டைனிங் டேபிளின் மீது வைத்துவிட்டு என்னை அழைத்தாள்.
அப்போது அபியும் சாப்பிடாமல் இருக்கிறாள் என்று எனக்கு தெரிந்ததும் அவளை அன்பு கட்டளையிட்டு அருகில் அமர்த்தியதும் மகிழ்ச்சியுடன் இருவரும் சேர்ந்து உணவை உண்டு முடித்தோம்.
பிறகு நான் மீண்டும் சோபாவிற்கு வந்துவிட்டேன்.
அவள் மெதுவாக பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
“ஹ்ம்ம் விக்ரம்! இப்போ சொல்லுடா”
“ஏய்! என்னடி சொல்லணும்?”
“டேய்! நீ பசியோட இருக்கும் போது கேட்டுக் கஷ்டபடுத்தக் கூடாதுன்னு விட்டுட்டேன். ஆனா இப்போ மட்டும் என்ன பிரச்சனைனு ஒழுங்கா சொல்லல. நான் உன்கிட்ட பேசவே மாட்டேன். இப்போவே வீட்ட விட்டு வெளிய போயிடுவேன்”
அபிராமி சொல்லிக்கொண்டே எழுவதற்கு முயற்சித்தாள்.
என்னுடைய வாழ்க்கையில் பெற்றோருக்கு பிறகு எனக்கு பிடித்த முதல் நபர் அபிராமி மட்டும்தான்.
அப்படி இருக்கும்போது நான் எதற்காக இவளிடம் விஷயத்தை மறைக்க வேண்டும் என்று யோசித்து அவளது கையை இறுக்கமாக பிடித்து அமர்த்தினேன்.
“ஸாரி அபி”
“விக்ரம்! நான் வந்ததுல இருந்து நீ என்கிட்ட நிறையா ஸாரி கேட்டுட்டே. அது ஏன்னு எனக்கு சுத்தமா புரியல. என்னடா ஆச்சு உனக்கு?
“அது வந்து”
“என்கிட்ட என்னடா தயக்கம். ப்ளீஸ் சொல்லுடா?”
காலையில் கோபத்துடன் கேட்ட அபிராமி இப்போது என்னிடம் கெஞ்ச ஆரம்பித்ததும் என்னால் மறைக்க முடியவில்லை.
“ஹ்ம்ம் சொல்றேன் அபி! நான் ஒரு பொண்ண காதலிக்கிறேன்”
ஒரு வழியாக அபியிடம் சொல்லி விட்டேன்.
“ஹே! விக்ரம்! வாழ்த்துக்கள். யாருடா அந்த பொண்ணு? அவள எங்க மீட் பண்ணே? எப்போட அவகிட்ட ப்ரொபோஸ் பண்ணே?”
அபிராமி விடாமல் தொடர்ச்சியாக கேள்வி கணைகளை என் மீது தொடுத்தாள்.
“அதெல்லாம் எதுவுமே நடக்கலடி. ஒன் சைட் லவ்தான்”
“டேய் லூசு! யாருடா அந்த பொண்ணு?” என்று அபிராமி தவித்தாள்.
“நம்ம ரெண்டு பேருக்குமே ரொம்ப நல்லா தெரிஞ்ச பொண்ணு தான்”
நான் கவலையுடன் கூறிவிட்டு அவளையே பார்த்தேன். உடனே அபியின் முகத்தில் ஒரு பிரகாசம்.
“ஏய்! விக்ரம் இப்போதான் எனக்கு புரியுதுடா. நீ மஹாலட்சுமியதான் லவ் பண்ணுறியா?”
அபிராமி அவளது கண்களை அகலமாக விரித்து ஆச்சரியத்துடன் என்னை பார்த்து கேட்டாள்.
“ஆமா அபி! அவளே தான்”
“நீ அவள ஃப்ரெண்ட்னு சொல்லி இன்ட்ரோ கொடுக்கும் போதே யோசிச்சேன். அது இப்போ கன்பார்ம் ஆகிருச்சுடா”
அபிராமி என்னை பார்த்து கிண்டல் செய்து சிரித்தாள். நான் பேச முடியாமல் அமைதியாக இருந்தேன். அது அவளுக்கும் புரிந்து விட்டது.
“செரிடா நீ அவகிட்ட ப்ரொபோஸ் பண்ணி அக்செப்ட் பண்ணலையா? என்று அக்கறையுடன் விசாரித்தாள்.
“இல்ல அபி. நான் அவ கிட்ட சொல்லவே இல்ல”
“அட லூசு! இதுக்கு ஏன்டா மூஞ்சிய இப்படி வச்சுருக்கே. நாளைக்கு ஆபிஸ் போயி மஹாலட்சுமி கிட்ட சொல்லிடு. அவ்ளோதான் பிரச்சனை முடிஞ்சுது”
அபிராமி எனக்கு உதவி செய்வதாக நினைத்து கூறினாலும் அவளுக்கு நான் எந்த நிலையில் இருக்கிறேன் என்று இன்னும் புரியவில்லை.
இனி அனைத்தையும் தெளிவாக சொன்னால்தான் புரிந்துகொள்வாள் என்று யோசித்து நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கூறி முடித்தேன்.
•
Posts: 572
Threads: 5
Likes Received: 2,189 in 922 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
இப்போது அனைத்தையும் கேட்ட அபிராமியின் முகம் பயங்கரமான அதிர்ச்சியுடன் காணப்பட்டது.
“என்னடா சொல்றே நீயும் நானும் காதலிக்கிறோம்னு மஹாலட்சுமி நினைக்கிறாளா?”
“ஆமா அபி. எனக்கும் அதான் தோணுது”
“டேய்! ஆரம்பத்துல நம்ம ரெண்டு பேரு வீட்டுலயும் புரியாம சொன்னாங்களே. அது மாதிரிதான் இவளும் நினைச்சுட்டு இருக்குறாளா?” என்று அபிராமி சோகத்தில் மூழ்கினாள்.
“அபி நம்ம வீட்டுல நாம ரெண்டு பேரும் பெஸ்ட் ப்ரண்ட்ஸ் மட்டும்தான். காதலர்கள் கிடையாதுன்னு சொல்லி புரிய வச்சுட்டோம்ல”
“அதெல்லாம் சரிடா. ஆனா இந்த மஹா உன்னோட லவ்வ சொல்றதுக்கு எந்த சந்தர்பமும் கொடுக்கலையே” என்று வருந்தினாள்.
“இனிமே யோசிச்சு என்ன பண்றது அபி. அவதான் என்னைய விட்டு போயிட்டாளே”
எனது வாழ்கையை மொத்தமாக முடிந்து போனது போல சொன்னேன்.
“டேய்! அவ இன்னும் போகலடா லூசு! ஆனா அப்படியே போனாலும் அமெரிக்காதானே போறா”
“ஆமா அங்கதான் போறா. ஆனா திரும்ப ரெண்டு வருஷம் கழிச்சுதான் ஊருக்கு வருவா. அந்த நேரத்துல நான் யாருன்னு கூட அவளுக்கு ஞாபகம் இருக்காது”
“முட்டாள் மாதிரி பேசாத நாயே! கொஞ்சம் இரு. நான் திங் பண்ணனும்”
அபிராமி எதையோ யோசித்து விட்டு மீண்டும் பேசினாள்.
“மஹாவுக்கு எத்தன மணிக்கு ஃப்ளைட்னு தெரியுமா? அவ எதுவும் சொன்னாளா?”
“அவ என்கிட்ட பேசுறதே இல்ல. அப்புறம் எப்படி சொல்லுவா? ஆனா ஆபிஸ்ல இன்னைக்கி மதியம் ஒரு மணிக்கு ஃப்ளைட்னு பேசிகிட்டாங்க. அவ்வளவுதான் தெரியும்”
“இது போதும்டா விக்ரம் இப்போ மணி ஒன்பதுதான் ஆகுது. கண்டிப்பா அவ கிளம்பிருக்க மாட்டா. சீக்கிரம் அவளோட நம்பர்க்கு கால் பண்ணு”
“மஹா நிச்சயமா அட்டென்ட் பண்ண மாட்டா. அப்படியே அவ எடுத்தாலும் நான் என்னடி பேசுறது?” என்று புரியாமல் கேட்டேன்.
“டேய்! முதல்ல அவளுக்கு கால் பண்ணுடா”
அபிராமி என்னை விட அதிக ஆர்வத்துடன் இருப்பதால் அவளது கட்டளையை நிறைவேற்றினேன்.
மஹா எண்ணுக்கு கால் செய்ததும் ஒரு ரிங் போனது.
அடுத்த நொடியே அது நின்றுவிட்டது.
“இதோ பாரு அபி! மஹா கட் பண்ணிட்டா”
“சரி இன்னும் ஒரு தடவ மட்டும் ட்ரை பண்ணுடா”
நான் மீண்டும் மஹாவின் எண்ணுக்கு அழைத்தேன்.
இந்த முறை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டாள்.
ஸ்பீக்கரில் போட்டதால் அபிராமியும் கேட்டு விட்டாள்.
அவளால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.
எனக்கு கோபம் அதிகமானதால் மொபைலை சோபாவின் ஓரத்தில் தூக்கி போட்டுவிட்டு அபியை பார்த்தேன்.
அபிராமி நிச்சயமாக அதோடு விடுவது போல தெரியவில்லை.
இதற்கு அடுத்ததாக என்ன செய்யலாம் என்று யோசிப்பது போல எனக்கு தோன்றியது.
“டேய்! நீ சொல்றத வச்சு பாத்தா மஹா இன்னும் நாலு மணி நேரத்துல கிளம்பிடுவா. ஆனா அதுக்கு முன்னாடி அவள பாக்கணும்”
“எதுக்குடி பாக்கணும்?"
“நாயே! உன்னோட லவ்வ அவ கிட்ட சொல்லனுமா வேணாமா?”
“ஆமா அபி அவகிட்ட சொல்லியே ஆகணும்” என்று கவலையோடு பேசினேன்.
•
Posts: 572
Threads: 5
Likes Received: 2,189 in 922 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
“ஹ்ம்ம். ஆசை இருக்குதுல அப்புறம் என்னடா? நீ ட்ரெஸ் மாத்திட்டு வேகமா கிளம்பு ஏர்போர்ட் போலாம்”
அவள் சொல்ல வருவது இப்போது தான் எனக்கு புரிந்தது.
“நிஜமாவே அங்க போயி மஹாவ பாத்து. லவ்வ சொல்லிடலாமா?”
“நீ நினைச்சா கண்டிப்பா சொல்லலாம். என்னைய நம்பு”
அபிராமி சரியாகத் தான் சொல்கிறாள்.
நான் எதற்காகத் தயங்க வேண்டும்.
இது வரை அபியிடம் விஷயத்தை சொல்லாமல் மஹாவிடம் எப்படி காதலைச் சொல்வது என்று தான் தெரியாமல் தவித்தேன்.
ஆனால் இன்று அபியே ஆறுதல் சொல்லி விட்டாள்.
இனி என்ன நடந்தாலும் சரி இன்று மஹாலட்சுமியிடம் என்னுடைய காதலை சொல்லியே தீருவேன் என்று மனதில் நினைத்துகொண்டு வேகமாக எழுந்தேன்.
பிறகு உடைகளை மாற்றிக்கொண்டு வந்தேன்.
“என்னடா விக்ரம். கிளம்பலாமாடா?”
“ஹ்ம்ம் அதெல்லாம் கிளம்பலாம் அபி. ஆனா நீ பாட்டி வீட்டுக்கு போகணும்னு சொன்னியேடி”
“நான் மதியம் போயிக்குறேன். இப்போ முதல்ல ஏர்போர்ட் போகலாம்”
“சரிடி நான் பைக் எடுக்குறேன்”
“வேணாம்டா விக்ரம்! நீ டென்ஷன்ல ஒட்டுவே. அது ரிஸ்க். நான் வீட்டுக்கு போயி கார் எடுத்துட்டு வரேன்” என்று அபி அக்கறையுடன் கூறிவிட்டு கிளம்பி வெளியில் சென்றாள்.
சில நிமிடங்களில் அவள் கார் எடுத்து வந்ததும் முன் பக்கம் ஏறிகொண்டேன்.
அபிராமி சராசரியான வேகத்தில் இயக்கினாள்.
நான் கடிகாரத்தை பார்த்தேன் மணி பத்தை நெருங்கிக்கொண்டு இருந்தது.
இன்னும் மூன்று மணி நேரம்தான் இருக்கிறது என்று பயம் வந்தது.
“எனக்கு மஹாவ பாக்க முடியாதுன்னு தோணுது?"
“லூசு! நெகட்டிவா பேசாத. உன்னோட லவ் மேல நம்பிக்கை வச்சு தைரியமா இருடா” என்று செல்லமாக முறைத்தாள்.
“ஹ்ம்ம். யெஸ். இன்னைக்கி கண்டிப்பா அவள பாப்பேன். என்னோட காதல சொல்லியே தீருவேன்”
நான் சத்தமாக கூச்சலிட்டு சொன்னவுடன் அபிராமி புன்னகையுடன் ரோட்டை பார்த்து கவனமாக வண்டியை இயக்கினாள்.
சரியாக அரை மணி நேரத்தில் நாங்கள் ஏர்போர்டை அடைந்தோம்.
பார்க்கிங் எரியாவிற்குள் சென்று காரை நிறுத்தியதும் அங்கே இருந்த பெரிய திரையில் விமானங்கள் வந்து செல்லும் ஸ்டேட்டஸ் தெரிந்தது.
நான் காரில் இருந்து இறங்கி சென்று அதில் அமெரிக்கா செல்லும் விமானம் பற்றிய அறிவிப்பு எதுவும் இருக்கிறதா என்று தேடினேன்.
அப்போதுதான் என்னை திடுக்கிட செய்வது போல ஒன்று நடந்தது.
அன்று மதியம் அமெரிக்கா செல்வதற்கு எந்த ஒரு விமானமும் இல்லை என்று தெரிந்தது.
நான் என்ன செய்வது என புரியாமல் தலையில் கை வைத்தபடி நின்றேன்.
என்னுடைய நிலையை பார்த்து அருகில் வந்த அபிராமியிடம் விபரத்தை சொல்லி கண் கலங்கினேன்.
“சரிடா! ஒரு பிரச்சனையும் இல்ல. மஹாதானே போன் எடுக்கல. ஆனா அவ கூட இன்னும் நாலு பேரு சேர்ந்து போறாங்கல்ல. நீ அவங்க நம்பர்க்கு கால் செஞ்சு எங்க இருக்காங்கனு கேளுடா”
நான் உடனே என்னுடைய பேண்ட் பாக்கெட்டில் மொபைலை தேடினேன்.
அது கிடைக்கவில்லை.
“அய்யோ! அவசரத்துல போன வீட்டுலயே மறந்து வச்சுட்டு வந்துட்டேன்” என்று சொல்லிவிட்டு இன்னும் அழுதேன்.
“சீ… லூசு! கொஞ்சம் அழாம இருடா. அங்க பாரு! ஒரு தகவல் மையம் இருக்கு. நான் போயி கேட்டுட்டு வரேன். நீ இங்கயே நில்லு”
அபிராமி என்னிடம் சொல்லிவிட்டு வேகமாக நடந்தாள்.
நான் கண்களை துடைத்துக்கொண்டே அவள் செல்லும் திசையை பார்த்தேன்.
•
Posts: 572
Threads: 5
Likes Received: 2,189 in 922 posts
Likes Given: 0
Joined: Nov 2022
Reputation:
13
ஒரு அறைக்குள் சென்றுவிட்டு சில நொடிகளில் அவள் என்னை நோக்கி மிக வேகமாக ஓடி வந்தாள்.
“என்னடி ஆச்சு?”
“டேய் விக்ரம்! இப்போ டைரக்ட் ஃப்ளைட் இல்லையாம். ஆனா மும்பை போயி அங்க இருந்து அமெரிக்கா போகலாம்னு சொல்றாங்கடா”
ஐயோ! இது தெரியாமல் நானும் அபிராமியும் சர்வதேச விமான நிலையத்தில் நிற்கிறோமே.
இப்போது நான் மஹாலட்சுமியை பார்க்க வேண்டுமென்றால் உள்நாட்டு விமான நிலையம் செல்ல வேண்டுமே என்று அதிர்ந்தேன்.
“அபி! என்னடி பண்றது?"
“நோ ப்ரோப்லம்டா! வேகமா நடந்தா பத்தே நிமிசத்துல போயிடலாம். வாடா”
அபிராமி என் கையை பிடித்து இழுத்துக்கொண்டே வேகமாக நடந்தாள்.
நானும் அதற்கு ஈடு கொடுத்து ஓட்டமும் நடையுமாக உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம்.
முதலில் விசிட்டர்ஸ் டிக்கெட் வாங்கி கொண்டு செக் இன் செய்கின்ற இடத்தில் பார்த்தோம்.
அவள் இல்லை என்று தெரிந்ததும் ஒரு இடம் விடாமல் மஹாலட்சுமியை தேடினோம்.
எங்குமே அவளை காணவே முடியவில்லை. எங்களது ஆபிஸ் நண்பர்கள் ஒருவர் கூட அங்கு இல்லை.
இனி யாரிடம் கேட்பது என்று புரியாமலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமலும் ஓர் இடத்தில் நானும் அபிராமியும் ஸ்ட்ரக் ஆகி நின்றுவிட்டோம்.
இருவருமே பேச முடியாமல் அமைதியாக அங்கேயே நின்றபடி அனைவரையும் வெறித்து பார்த்தோம்.
அப்போது அந்த அதிசயம் நடந்தது!
“ஹலோ! எக்ஸ்க்யூஸ் மீ! கொஞ்சம் வழி விட்டு நில்லுங்க”
எனக்கு பின்னால் ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
நன்றாக பழகிய குரல்.
அதுவும் குயில் போன்ற இனிமையான குரல்.
நான் சற்றும் தாமதிக்காமல் வேகமாக திரும்பி பார்த்தேன்.
ஆமாம்! நான் நினைத்து சரிதான்.
என்னுடைய கண்களுக்கு முன்னால் மஹாலட்சுமிதான் நின்றுகொண்டு இருந்தாள்.
ஒரு ட்ராலியில் அவளது லக்கேஜ்களை வைத்துகொண்டு வழி விடுமாறு கேட்டது எங்களிடம்தான் என்று அவளுக்கு புரிந்ததும் மஹா அதிர்ந்தே போனாள்.
நான் இதுவரை மஹாவை எளிமையான காட்டன் சுடிதாரில் நெஞ்சில் இருக்கும் சாத்துக்குடி பழங்களை ஷால் போட்டு நன்றாக மறைத்தபடி மட்டும்தான் பார்த்திருக்கிறேன்.
ஆனால் இன்று அவள் வெளிநாடு செல்வதால் மிகவும் வித்தியாசமாக இருந்தாள்.
அழகான சில்க் துணி போல் மின்னும் மெரூன் கலர் ஸ்லீவ்லெஸ் சல்வாரும் இறுக்கமான லெக்கின்ஸும் போட்டுகொண்டு நெஞ்சில் இருக்கும் முலை பழங்களை மெல்லிய ஷால் வைத்து கொஞ்சமாக மட்டுமே மறைத்து இருந்தாள்.
மேலும் கூந்தலை பின்னாமல் போனிடைல் ஸ்டைலில் அவளை பார்த்தவுடன் நான் மஹாவின் அழகில் மயங்கிபோய் பேசாமல் நின்றேன்.
|